மகாத்மா ! எங்களை ஒருபோதும் மனித்துவிடாதே !

Posted by அகத்தீ Labels:

 


மகாத்மா !

எங்களை ஒருபோதும்

மனித்துவிடாதே !

 

ஒவ்வொரு நாளும்

மதவெறி

ஆட்டம் போடும் போதும்…

 

ஒவ்வொருநாளும் நீ

நேசித்த தரித்திர நாராயணர்கள்

மேலும் மேலும் அழுத்தப்படும் போதும்…

 

உன் உடையையே மாற்றிய

இந்தியாவின் முதுகெலும்பு

விவசாயிகள் ஒடுக்கப்படும்போதும்…

 

மவுனம் காத்துவிட்டு

இன்றொரு நாள் மட்டும்

அஞ்சலி செலுத்தும்

 

நடிப்பு தேசபத்தியே

இங்கு

கொண்டாடப்படுகிறது !

 

மகாத்மா !

எங்களை ஒருபோதும்

மனித்துவிடாதே !

அநீதிக்கு எதிராய்

குரல் கொடுக்காத யாரையும்

மன்னித்துவிடாதே !

 

 

சுபொஅ.

30/01/25


0 comments :

Post a Comment