மனச்சாட்சி சொன்னது ,

Posted by அகத்தீ Labels:

 

மனச்சாட்சி சொன்னது ,

“ என்னோடு வாழ்வது

மிகமிக கஷ்டம்தான்.”

 

அவன் மறுமொழி சொன்னான்,

“ ஆம் .அறிவோம்.

இதயத்தை மரத்துப் போகச் செய்யும்

வித்தை அறிவோம்..”

 

மனச்சாட்சி மயங்கி விழுந்தது

மனக்குரங்கின் ஆட்டம் தொடங்கியது .

 

ஹிட்லர் ,கொயாபல்ஸ் ,முசோலினி

எல்லோரும் ஒற்றை உருவில்

ஒரே நாட்டில் ஒரே தேசத்தில்

ஒரே மொழியில் இரே குரலில் …

 

சுபொஅ.

29.01.25.

0 comments :

Post a Comment