மானுடம் சாகவில்லை

Posted by அகத்தீ Labels:







மானுடம் சாகவில்லை…



மானுடம் சாகாது ! மானுடம் சாகாது !
ஒரு போதும் மானுடம் சாகாது !

மதவெறியால் குதறப்படும்
இனவெறியால் காயப்படும்
குறுகிய அரசியலால் மிரட்டப்படும்
கொடுங்கோலரால் கழுத்து நெரிக்கப்படும்

ஆனாலும்,

மானுடம் சாகாது ! மானுடம் சாகாது !
ஒரு போதும் மானுடம் சாகாது !

கேரளம் உயிர் சாட்சி
மானுடத்தின் மனச்சாட்சி
குறுமதியாளர் வஞ்சகம் வீழ்த்தி
மானுடம் எழுந்ததின் பெருங்காட்சி !

மீட்புப் படையாய் மீனவர் தோழமை
முகம் தெரியாதோரும் உதவும் கரமாய்
நாடெங்கிலும் ஊற்றெடுத்த மனிதக் கருணை
சதிவலை கிழித்தது மானுட மேன்மை !!!

மானுடம் சாகாது ! மானுடம் சாகாது !
ஒரு போதும் மானுடம் சாகாது !




லேகியம்

Posted by அகத்தீ Labels:




லேகியம்


இந்த லேகியம்
நூற்றாண்டுப் பழமையானது
தின்ற நொடியிலேயே
பின்னோக்கி பயணம் துவங்கிவிடும்

அதிலும் முன்னோரின்
நல்லவைகளை அல்ல
அழுகிப் புழு நெளியும்
கெட்டவைகளின் வாரிசாய்
தன்னை வரித்துகொள்ளும்

துர்நாற்றமெடுக்கும்
பழம்பஞ்சாங்கத்தை
மணக்கும் சந்தணமாய்
மார்மீது பூசித்திரியும் …

அறியாமை ,அநீதி
அராஜகம் ,அயோக்கியத்தனம்
பொய் ,பித்தலாட்டம்
பாலியல் , வன்முறை ,
கும்பல் கொலை வெறி
அத்தனை நஞ்சையும்
நாடி நரம்பெல்லாம்
பீறிட்டுக் கொப்பளிக்கச் செய்யும்

மத வெறி ,இனவெறி
பெயர் எதுவாயினும்
லேகியம் ஒன்றுதான்

பாசிசம் ,நாசிசம் ,இந்துத்துவம்
தாலிபானிசம் . ஆண்டசாதி ,
வந்தேறி வாதம் ,இனவாதம்
எதுவாயினும்
லேகியம் ஒன்றுதான்

வெறுப்பு
வெறுப்பு
வெறுப்பு

-    சு.பொ.அகத்தியலிங்கம்