டாஸ்மாக்கும் விபத்தும்

Posted by அகத்தீ Labels:



யிர் விலை மதிக்க முடியாதது. அதனை விபத்துகளில் இழப்பது சகிக்க முடியாத சோகம். ஆண்டுதோறும் இந்தியாவில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். சராசரியாக ஒவ்வொரு மணிநேரத்திலும் உலகம் முழுவதிலும் 25 வயதிற்குட்பட்ட 40 பேர் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர். இதில் 14 பேர் இந்தியர்கள். தமிழ்நாட்டில் ஒவ்வொரு 2 மணிநேரத்திலும் சராசரி 3 பேர் உயிரிழக்கின்றனர். தமிழகத்தில் 1993ஆம் ஆண்டு 6,528 சாலை விபத்துகளில் 7,349 பேர் உயிரிழந்தனர். ஆனால், 2009ஆம் ஆண்டு 12,727 சாலை விபத்துகளில் 13,746 பேர் உயிரிழந்துள்ளனர், அதாவது தினசரி 38 பேர் சாலை விபத்தில் பலியாகின்றனர்.

2006ஆம் ஆண்டு 11,009 பேர் உயிரிழந்தபோது இவற்றை படிப்படியாக 20 விழுக்காடு குறைத்து 2013ஆம் ஆண்டுக்குள் 8,800 சாவுகள் என்று குறைக்கப்போவதாக தமிழக உள்துறை உறுதி மொழி எடுத்தது. ஆனால், கடந்த ஆண்டே சாவு எண்ணிக்கை 13,746 ஆகிவிட்டது. இந்த ஆண்டு இது மேலும் அதிகரிக்கும். இந்த விபத்துகளின் காரணம் என்ன?

2009ஆம் ஆண்டு நடந்த விபத்துகளில் 90 விழுக்காடு ஓட்டுநர் தவறால் நிகழ்ந்தது. பாதசாரிகள் கவனக்குறைவு, வேறு சில கவனக்குறைவுகள், எந்திரக் கோளாறு இவை காரணமாக நிகழ்ந்த விபத்து 6.5 விழுக்காடு மட்டுமே. மோசமான சாலை, மோசமான பருவநிலை, இதரக் காரணங்களால் நேர்ந்த விபத்து 3.5 விழுக்காடு மட்டுமே.

குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது, கைபேசியில் பேசிக்கொண்டே வண்டி ஓட்டுவது, சாலை விதிகளை மதிக்காமல் வண்டி ஓட்டுவது, அளவுக்கு மீறிய உற்சாகத்தையோ கோபத்தையோ வண்டி ஓட்டுவதில் காட்டுவது, அதிவேகமாக வண்டி ஓட்டுவது, ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல முயற்சிப்பது போன்ற பல தவறுகள்தான் ஓட்டுநர்களால் விபத்து நிகழ்வதற்கு காரணமாக இருக்கிறது. மேலும் ஹெட் லைட்டின் அதிக ஒளியை கட்டுப்படுத்தாமல் இருப்பதும் இதன் காரணமாகிறது.

முந்தைய ஆட்சியில் 3 ஆயிரம் கடைகளுடன் துவக்கப்பட்டு அப்போது 2,828 கோடி ரூபாய் வருவாய் ஈட்டித்தந்த டாஸ்மாக் இன்று 6,823 கடைகளோடு 12 ஆயிரம் கோடியைத் தாண்டிவிட்டது. இந்த டாஸ்மாக் விற்பனை உயர்வுக்கும் சாலை விபத்துகளுக்கும் தொடர்பு இருப்பதை யாரும் மறுக்க முடியாது. கொஞ்சம் நிதானமாக யோசித்தால் கடந்த 2005ம் ஆண்டு தினசரி 16 கோடி டாஸ்மாக் விற்பனை நடந்தபோது தினசரி 26 பேர் சாலை விபத்தில் பலியானார்கள் கடந்த ஆண்டு தினசரி விற்பனை 38 கோடியாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் தினசரி 38ஆக உயர்ந்தது. புத்தாண்டு தின டாஸ்மாக் விற்பனை இலக்கு 100 கோடி என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறதாம்..... இதைவிட விளக்கம் தேவையா? அரசு வருவாயில் 30 விழுக்காடாக இருக்கும் டாஸ்மாக் வருவாயை பற்றிப் பேசுவது அரசுக்கு தலைவலியாக இருக்குமோ? ஆயினும் இதையும் இணைத்துப் பேசாமல் சாலை விபத்துகளை குறைக்க இயலாது.

அரசை குறை சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்ல வேண்டும். அதே நேரத்தில் மக்களிடமும் இது குறித்த விழிப்புணர்வு வளர்க்கப்பட வேண்டும். அதுவும் பள்ளிப் பருவத்திலேயே ஊட்டப்பட வேண்டும். சாலை விதிகளை நாம் மதிக்காவிட்டாலும் எதிரே வருகிறவர் மதிக்காவிட்டாலும் விபத்து நிகழும். ஆகவே எல்லோருக்கும் அந்த எச்சரிக்கை தேவை. மேலும் குடிப் பழக்கம் ஒழுக்கக் கேடு என்பதாக பார்ப்பதைக் காட்டிலும் அது ஆரோக்கியக் கேடு, உயிரைப் பறிக்கும் எமன் என்பதை ஆழமாக உள்ளத்தில் பதித்துக் கொள்ள வேண்டும்.
புத்தாண்டுக் கொண்டாட்டமானாலும் சரி. வேறு எந்த மகிழ்ச்சியான கொண்டாட்டமானாலும் சரி. போதையில்லாமல் விபத்தில்லாமல் அடுத்தவர்களுக்கு இடைஞ்சலில்லாமல் எல்லோரும் மகிழக் கொண்டாடலாமே! விபத்துகளில்லா ஆண்டு மலரட்டும்.

2010 விளிம்பில் 2011 வாசலில் அக்னிக்குஞ்சுகளை அடைகாத்தபடி...

Posted by அகத்தீ Labels:


இன்றுதான் பிறந்ததுபோல் இருக்கிறது; அதற்குள் ஓய்வுபெறும் நேரம் நெருங்கிவிட்டது. காலம் எவ்வளவு விரைவாய் ஓடுகிறது?
நேற்றின் வடுக்களோடும் நாளைய நம்பிக்கை யோடும் புத்தாண்டு வாசலில் நிற்கிறது.
மனிதகுலம் பல லட்சம் ஆண்டுகள் பயணப் பட்டுவிட்டது. கற்காலத்திலிருந்து கம்யூட்டர் யுகத்துக்கு மனிதன் முன்னேறிவிட்டான். ஆயினும் கடந்த நூற்றாண்டுகளில் மனிதகுலம் பாய்ந்து தாவி முன்னேறியதைப்போல அவ்வளவு வேகமாய் அதற்குமுன் எப்போதுமே பயணித்ததில்லை; அதிலும் கடந்த பத்தாண்டுகளாய் சந்திக்கிற பிரச்சனைகள் சொல்லில் அடங்காது.
இயற்கையைக் கண்டு பயந்து நடுங்கிய மனி தன் அதன்முன் மண்டியிட்டான். அப்புறம் மெல்ல மெல்ல எழுந்தான் தன் கைவலுவாலும் மூளை பலத்தாலும் காட்டைத் திருத்தினான். நாட்டை நகரை புதுக்கினான் ஆலைகள், சோலைகள், சாலைகள் அவன் கைவண்ணத்தில் புன்னகைத் தன... ஆனால் இன்று அதிவேக வளர்ச்சித் திக்கில் வெறிகொண்டு ஓடுவதால் வயல்களை, குடிசை களை, தோப்புகளை, சோலைகளை கான்கிரீட் காடுகளாக்கிவிட்டான். இயற்கையை அள வுக்கு மீறி சுரண்டி உறிஞ்சியதால் இயற்கை பழி வாங்கத் துவங்கிவிட்டது.
காற்று மாசுபட்டுவிட்டது. குடிநீர் கெட்டுவிட் டது. நிலத்தடி நீர் விஷமாகிவிட்டது. இனி அடுத்த உலக யுத்தம் தண்ணீருக்காகத்தான் நடக்கும் என்று அறிஞர்கள் எச்சரிக்கிறார்கள். எங்கே போகிறோம்?
நாம் இன்று காண்பதெல்லாம் நம் மூதாதை யர்கள் நமக்கு விட்டுச்சென்ற கொடைகள்; ஆக் கித்தந்த களஞ்சியங்கள். அவற்றை நம் சந்ததி யருக்கு நாம் மிச்சம் வைப்போமா? அவை நமது தனிச்சொத்தல்ல! அவற்றை அழிக்கிற உரிமை நமக்கு இல்லை. இதை உரக்கச் சொல்லியாக வேண்டும்... காலம் விரைகிறது.
அம்மணமாய்த் திரிந்த மனிதன் இலைதழை இவற்றை அணிந்த முதல் மனிதர்களைப் பரிக சித்தான்; காலம் கெட்டுப் போனதாய் சொல்லிச் சென்றான். அம்மணக்குண்டி ராஜ்யத்தில் கோவ ணம் கட்டியவன் பைத்தியக்காரன் ஆனான். ஆனால், அவனால் அம்மணமாய் நீண்டநாள் திரிய முடியவில்லை கோவணம் கட்டினான். அப்போது வேட்டி சேலை கட்டியவர்கள் வித்தியாசமாய் தெரிந்தனர். கிராப் வெட்டியவர்களை கேலி செய் தான், காலம் கெட்டுப்போனது என்றான். ஆனால் அவன் மாறிப் போனான். புதியன வரும்போதெல் லாம் பழமை கெக்கொலி கொட்டி பரிகசிக்கும்; காலம் கெட்டுப்போனதென சபிக்கும் ஆயினும் முன்னேற்றப்பாதையிலே இந்த முட்டுக்கட்டை கள் நொறுங்கிப் போகும். ஆம் தலைமுறை இடை வெளிகளின் சலிப்பையும். சபிப்பையும் முன்னேற் றச் சரித்திரம் காலால் எட்டி உதைத்துவிட்டு சென்று கொண்டே இருக்கும். அதுதான் வளர்ச்சி யின் விதி.
ஒவ்வொரு நொடியிலும் அதுவரை அறியப் படாத பல மர்ம முடிச்சுகளை அவிழ்த்தபடியே அறிவியல் வளர்கிறது. நேற்றுவரை சரியென நம்பி வந்த பலவற்றை அறிவியல் வெளிச்சம் பிழை யெனக் காட்டிவிட்டது. நேற்றைப் பற்றிய புரிதல் மட்டுமே இன்றைக்கு வழிகாட்டாது. அதே சமயம் நேற்றைப் புரியாமல் இன்றைப் புரிந்து கொள் வதும் இயலாது. வளர்ச்சி என்பது நேற்றின் தொடர்ச்சி; இன்றின் மலர்ச்சி; நாளையின் எழுச்சி.
காட்டில் வல்லாடி தாவரங்கள் தனது வளர்ச் சிக்காக பிறவற்றின் வளர்ச்சியைத் தடுக்கும். அதையும் மீறி வளைந்து நெளிந்து சூரியனை தரிசித்த தாவரங்கள் உண்டு. முட்டிமோதி முன் னேறிய அவை தன்னம்பிக்கையின் படிமம் ஆயின. ஆனால், தோப்புகள் சீராக ஒன்றுக்கொன்று வழி விட்டு எல்லாம் வளர்ந்தன. இதுதிட்டமிட்ட வளர்ச்சி. ஆயினும் ஆசைப் பார்த்தினியமும் விஷ முள் மரங்களும் வளர்ந்து தோப்பை காடாக்க முயல் கிறது. தடுக்க வேண்டிய தோட்டக்காரனோ அதை ஊக்குவிக்கிறான் சபாஷ் சரியான போட்டி என்று கைதட்டுகிறான். வளர்ச்சியின் போதையில் ஆட்டவிதிகளை தூக்கி எறிந்ததால் ஆடுகளம் இப்போது காவு கேட்கிறது. மகிழ்ச்சி ஆரவாரம் ஒலிக்க வேண்டிய திடலில் கூச்சலும் முனகலும் சிரிப்பும் அழுகையும் பரபரப்பும் பற்கடிப்பும்... தவறு எங்கே? இன்னும் நம்பிக்கை இருக்கிறது. இப்போது தொடங்கினாலும் சீர்படுத்தி விடலாம்.
எங்கே தொடங்குவது? யார் தொடங்குவது?
யார் செய்யப்போகிறார்கள்? எப்படிச் செய்யப் போகிறார்கள்?
கடல் கொந்தளிக்கிறது. அலை சீறி அடிக் கிறது. சூறாவளி சுழன்றடிக்கிறது. அடை மழைவிடா மல் பெய்கிறது. சூரியனை தரிசித்து வெகு கால மாயிற்று. எங்கும் இருள் கவ்விக்கிடக்கிறது. பட கின் பாய்மரம் பிய்ந்துவிட்டது. இயந்திரம் பழுதாகி விட்டது. படகில் ஓட்டை விழுந்துவிட்டது. ஆயி னும் படகைச் செலுத்த வேண்டும். இப்போது துடுப்பை இயக்கும் ஆற்றல் எவருக்கு இருக் கிறதோ அவன்தான் இளைஞன். அவன்தான் நாளையின் நம்பிக்கை.
எங்கே இருக்கிறார்கள் இளைஞர்கள்? தோற்றுப் போன கிழவன் இப்படி அவநம்பிக்கை அபசுரம் இசைக்கிறான். நுகர்வு வெறியிலும் சுயநல வேட்கையிலும் தன்னையிழந்து இளைய தலை முறை சீரழிந்து கிடப்பதாக ஓய்வு நாற்காலிப் புரட்சிக்காரர்கள் சலிப்போடு கூறுகிறார்கள்.
பாவம் நேற்றை அவர்கள் அறியவில்லை. அன்று நாட்டின் விடுதலைப் போரில் பங்கேற்ற இளைஞர்களைவிட பங்கேற்காத இளைஞர்கள் அதிகம். எல்லோரும் எழுந்திருந்தால் இணைந் திருந்தால் வெள்ளைக்காரனை விரட்ட இருநூறு ஆண்டுகள் ஆகியிருக்காதே! ஆயினும் நம்பிக்கை வறண்டு போகாத அக்னிக் குஞ்சுகள்தாமே விடு தலை ஜோதியை கொண்டுவந்து சேர்ந்தனர்.
தேசியப் பேரலை வீசியடித்தபோது அதன் ஓட்டத்தில் கலந்து கரைந்து போனவர்கள் அநே கம். அவர்களை வரலாறு மறந்துவிட்டது. எதிர்நீச் சல் போட்ட பகத்சிங் இன்னும் சாகாமிலிருக்கி றான். அதுதான் இளமையின் பொருள்; குறியீடு.
தமிழகத்தில் திராவிட அலை வீசியபோதும், அதற்குள்ளே பிளவுகள் வந்து சுழன்றடித்தபோதும், நாயக மயக்கங்களை மீறி நம் இளைஞர்கள் வெண்கொடியை உயர்த்திப்பிடிக்கவில்லையா? ஏன், சாதியக் கொடிகள் வட மாவட்டங்களில் பிற கட்சிக் கொடிகளை வெட்டிச்சாய்த்துக் கொண்டி ருந்த வேளையில் வாலிபர் இயக்கத்தின் வெள் ளைக் கொடி முளைக்கவில்லையா? சிகப்பு நட் சத்திரம் பிரகாசிக்கவில்லையா?
ஆளரவமற்ற சாலையில் மிதிவண்டியில் முந்திச் சென்று கொடி நடுவதல்ல சாதனை; நெரி சலில் திணறும் சாலையில், அடைந்து திணறும் வாகனங்களுக்கு இடையில் புகுந்து நெளிந்து வளைந்து துணிந்து முன்செல்பவன், நெரிசல் கூச்சலுக்கிடையே பூபாள ராகத்தை உரக்க முழக்குபவன், நம்பிக்கை பூக்களையும் நாளைக் கான போர் முரசையும் ஒரே நேரத்தில் சுமந்து செல்பவன், பிரச்சனைகளை முனை முகத்து சந் திப்பவன் - அவனே இளைஞன்! நாளைய தலை வன்! அவன், அவள் இரு பாலருக்கும் இதுதான் இயற்கை விதித்த நியதி.
இன்று பிறந்தது போல் இருக்கிறது. அதற்குள் நான் ஓய்வுபெறும் நேரம் வந்துவிட்டது. காலம் எவ்வளவு விரைவாய் ஓடுகிறது; புதிய தலைமுறை நேற்றின் வடுக்களோடும் நாளைய நம்பிக்கை யோடும் இனறு கம்பீரமாய்... இதோ.... இதோ.... இதோ...!
அக்னிக்குஞ்சுகளை அடைகாத்தபடியே புத்தாண்டு புன்னகைக்கிறது...

நன்றி: வண்ணக்கதிர்

மயில், குயில், பெண்...

Posted by அகத்தீ Labels:


மயில், குயில், கிளி, புறா, பட்டாம் பூச்சி, முயல், மான் என ஒவ்வொன் றும் பேரழகு. இயற்கையின் அருட் கொடை, அழகின் சிரிப்பு.
இவற்றை விரும்பாத குழந்தை கள் உண்டோ? பெரியவர் உண்டோ? மனதைக் கிறங்க வைக்கும் இவற்றை கவிஞர்கள் விடுவரோ எளிதில்?
பெண்களைப் பாடாத கவிஞர் உண்டோ? அதிலும் பெண்களை மயிலோடும் குயிலோடும் ஒப்பி டாத கவிஞரை எங்கேனும் கண்ட துண்டோ?
மயில், குயில், பெண், கவிதை இவற்றுக்கு இடையே உள்ள உறவு இயற்கையானது. முன்னை பழ மைக்கும் பழமையானது. பின் னைப் புதுமைக்கும் புதுமையா னது. ஆயினும் இன்னும் எத்தனை காலம் மயிலோடும் குயிலோடும் பெண்ணை ஒப்பிட்டுப் பாடிக் கொண்டிருக்கப் போகிறீர்கள்? இக்கேள்வி அவ்வப்போது சீறி எழத்தான் செய்கிறது.
இக்கேள்விக்கு விடைதேடும் முன் இங்கே இரண்டு கவிதை களை சற்று பார்ப்போம். ஒரு கவி தையின் தலைப்பு மயில். இன் னொன்றின் தலைப்பு குயில்.
அழகிய மயிலே! அழகிய மயிலே என கவிதை தொடங்கும். உனது தோகை புனையாச் சித்தி ரம்/ ஒளிசேர் நவமணி களஞ்சியம் அதுவாம் என்றெல்லாம், வர்ணணை தொடரும். ஆயிரம் ஆயிரம் அம் பொற்காசுகள்/ ஆயிரம் ஆயிரம் அம்பிறை நிலவுகள்/மரகத உருக் கின் வண்ணத்தடாகம்/ஆன உன் மெல்லுடல், ஆடல் உன் உயிர்/
இவை என்னை எடுத்துப் போயின
இப்படி கவிஞர் சொல்லிக் கொண்டே போவது அவரின் ரச னைக்கு சாட்சி. ஆனால் அதோடு நிற்காமல் தன் வேலையைத் தொடங்கினார்;
நீயும் பெண்களும் நிகர் என்கிறார்/நிசம் அது நிசம் நிசம் நிசமே ஆயினும்/பிறர் பழி தூற் றும் பெண்கள் இப்பெண்கள்/அவர் கழுத்து உன் கழுத்தா குமோ சொல்வாய்/ இப்படி கழுத்துக்குத் தாவிய கவிஞர் அத்தோடு விட்டாரா? இல்லை, அப்புறம் பெண்கள் கழுத்து குட்டையாகவும் மயிலின் கழுத்து நீளமாகவும் உள்ளதற்கான கார ணத்தை கற்பனை செய்கிறார். அயலான் வீட்டின் அறையில் நடப்பதை/ எட்டிப் பார்க்கா திருப்பதற்கே/இயற்கை அன்னை இப் பெண்களுக்கெல் லாம்/குட்டைக் கழுத்தைக் கொடுத்தாள். உனக்கோ/ கறை யொன்றில்லா கலாப மயிலே/நிமிர்ந்து நிற்க நீள் கழுத்து அளித்தாள் என்று ஒரு குதர்க்க மான காரணத்தை சொல்லிவிட்டு மயிலே இதை வெளியே சொல் லாதே, மகளிர் கூட்டம் என்னை ஏசும் என்று நீட்டுகிறார்.
மோசமான கவிஞராக இருக் காரே! அவர் யார் எனக் கேட்கி றீர்களா? பொறுங்கள்! அவசரம் வேண்டாம். கவிதை முடிய வில்லை. இதோடு முடித்திருந்தால் அவர் சாதா கவிஞர். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. அவர் மேலும் தொடர்ந்தார். அதில் பெண்கள் ஏன் அப்படி இருக்கி றார்கள் என்ற கேள்விக்கு விடை சொன்னார் புவிக்கொன்று உரைப் பேன் புருஷர் கூட்டம்/பெண் களை ஆதிப்பெருநாள் தொடங்கி/ திருந்தா வகையில் செலுத்துத லால்/அவர்கள் சுருங்கிய உள் ளம் விரிந்த பாடில்லையே என ஆண்கள் மீதே குற்றப்பத்திரிகை வாசித்தார். அதனால்தான் அவர் புரட்சிக் கவிஞர். இப்போது புரிந் திருக்குமே இக்கவிதையை யாத்த வர் பாரதி தாசன் என்பது...
இன்னொரு கவிஞர் குயில் என்ற தலைப்பில் தன் கற்பனைச் சிறகை விரித்தார் கருப்பிலே அழகு கண்கவர் கண்கள் என் றெல்லாம் வர்ணித்து தோட்ட மெல்லாம் சுற்றுவாய் விடுதலைப்/ பாட்டிலே மண்ணை மயக்கு வாய் பச்சைக் / காட்டிலே உல வும் கவிதையின் குழல் நீ / ஏட் டிலே காணா இசையின் வெள் ளம் நீ இப்படி குயில் பாட்டில் மயங்கி பிதற்றி மேலும் தொடரும் போதுதான் அவர் பெண்கள் குர லோடு குயிலின் குரலை ஒப்பிடு வதை ஏற்க மறுத்தார். உன் குரல் பெண்ணின் குரலுக் கொப்பெனப்/ பன்னுவர் கவிஞர், பாதிதான் உண்மை/ என்று அடித்து சத்தி யம் செய்தார். ச்சே...என்னாச்சு இக்கவிஞருக்கு என கேள்வி குடைய தொடர்ந்து படித்தால் புதிர் அவிழும்.
பெண்களின் குரலிலே பிணி யும் ஏக்கமும் /எண்ணிலாச் சோகமும் பயமும் அடிமையும் / நிறைந்தன ஆதலால் நேரிசைக் குரலிலே / கறையே அமைந் தது... என ஓங்கிக் குட்டினர். ...கவின் குயிலே.உன் / விடு தலைக்குரலிலே வெற்றி எக்கா ளம் / நடுங்கும் பெண்களின் நற்குரல் தன்னிலே / விடுதலை இசையும் வீரமும் இல்லையே இப்படி ஒப்பிட்டு மனம் புழுங் கினார் கவிஞர். ஆனால் இதோடு நின்றிருந்தால் அவர் கவிதை காலமழையில் கரைந்து போயிருக் கும். ஆனால் இவர் கவிதை சாகாத கவிதை ஆயிற்றே! அவர் இறுதி யாகச் சொல்வார், பெண்கள் இந் நிலை அடைந்ததற்கு யார் கார ணம் என்பதை, அவர் கூறுகிறார்;
கெடுதலை செய்தனர் ஆணி னக் கிறுக்கர் / கூவுவாய் குயிலே குவலயத்தில் இனிமேல் / மேவும் சமநிலை மேவிடும் என்றே
இந்த சவுக்கடி வரிகளில் சிலிர்த்தெழுகிறார் கவிஞர் தமிழ் ஒளி.
மயிலைப் பாடிய கவிஞர் பாரதி தாசனும் குயிலைப்பாடிய கவிஞர் தமிழ் ஒளியும் பெண்ணடிமைத் தனத்தை சாடியதோடு அதற்கு ஆண்களே காரணம் என நறுக் கென்று குத்தீட்டியாய் கவிதை யைப் பாய்ச்சினர். ஆக எதையும் பாடு பொருளாக்கலாம். ஆனால் பார்வை எது என்பது தான் முக்கி யம். சரிதானே/

யுகாந்திர வலியும் செங்கொடி எழுச்சியும்

Posted by அகத்தீ Labels:


ஏசுநாதரும் அம்மளை மாதிரி பறை சாதிக் காரனாத்தான் இருப்பாரோ இல்லையான அந்த மனிசனையும் சாட்டை வாரால் அடிச்சு சிலுவையச் சொமக்க வச்சிருக்க மாட்டாங்களே
- இப்படி மனசுக்குள் சொல்லிக் கொண்டான் சிறுவன் ஒசேப்பு.
அந்த பிஞ்சு மனதில் பட்டுத் தெறித்த இந்த வரிகள் ஒரு சமூகத்தின் யுகாந்திர வலியை சுமந்து நிற்கின் றன. தோலை உரித்து மிளகாய்ப் பொடி தூவியதுபோல் சமூக யதார்த் தத்தைக் கீறிக் காட்டுகின்றன.
டி. செல்வராஜ் எழுதிய தோல் நாவல் முழுவதுமே இயல்பான வார்த் தைகளால் மிக நுட்பமான சமூக உண் மைகளை படம் பிடித்துச் சொல்கிறது.
தோல் தொழிற்சாலை கழிவு நீரால் விளை நிலங்களும், குடிநீரும் எப்படி மாசுபட்டு கிடக்கிறது என்பதை இன்று கண்கூடாகப் பார்க்கிறோம்.
அந்த தோல் ஷாப்புகளில் உட லும் உள்ளமும் ரணமாக உழைத்த; நாற்றத்திலும் வெக்கையிலும் பொசுங்கிய அந்த மனித ஜீவன்களை என்றைக்காவது நாம் நினைத்துப் பார்த்த துண்டா?
இந்த நாவல் நம் கையைப் பிடித்து அந்த தோல் ஷாப்புக்கு அழைத்துச் செல்கிறது; அந்தச் சுண்ணாம்புக் குழி யில் நம் காலை நனைக்க வைக்கிறது; அந்த நாற்றத்தை நம்மை நுகர வைக் கிறது; அங்கிருந்து அந்த தொழி லாளிகள் வாழும் சேரிக்கு நம்மை கூட்டிச் செல்கிறது; அழுகி நாறும் தீண் டாமைக் கொடுமையை, சுரண்டல் வெறியை பார்த்து நம்மை பதைக்க வைக்கிறது. இது நாவல் அல்ல வரலாற்று உண்மைகள்.
நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும் திண்டுக்கல்லில் ஒடுக்கப்பட்ட மக்கள் வீறுகொண்டெழுந்த வரலாற்று செய்திகளை குவிமையமாக்கி; தமிழ கம் முழுவதும் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களையும் உட்கிரகித்து ரத்தமும் சதையும் உள்ள கதாபாத் திரங்களாக, செங்கொடி புத்திரர்க ளாக நம்மிடையே உலவவிட்டுள்ளார் டி. செல்வராஜ்.
117 பாத்திரங்கள் பெயர் குறிப் பிடப்பட்டுள்ளது. இந்த நாவலின் கதாநாயகன் யார்? பார்ட்டக போல் வீறு கொண்டெழுந்த ஒசேப்பா? இவர்களோடு தோள் இணைந்து நின்ற தோழர் ஏ. பாலசுப்பிரமணியன் சாயல் கொண்ட சங்கரனா? தீர்ப்பு சொல்வது சிரமம். ஏனெனில் இந்நாவலின் மையக்கரு சமூக எழுச்சி என்பதால் இதில் பங்கு பெறும் ஒவ்வொருவருமே கதாநாயகர்கள் கதாநாயகிகளே!
ஏண்டா சாண்டாக் குடிக்கி பொட்டச்சிண்டா அம்புட்டு எளக் காரமோ? பறச்சி சக்கிலிச்சிண்டா அம்புட்டு எளக்காரமோ, நீங்க கையப் புடிச்சா படுத்துக் கணுமோ பல பட்டறப் பய... என மாடத்தி சீறும்போது நாமே எழுந்து போய் அவன் கன்னத்தில் இரண்டு அறைவிடலாம் எனத் தோன்று கிறது.
அடி ஆத்தே இந்த அக் குருவத்தை கேக்க நாதியில்லையா? நேத்து ருசுவாயி வந்திருக்க பச்சை மண்ணெ, அம்மணமா ஆக்கிப் பருந்தாட்டமா தூக்கிட்டுப் போரானே முடிவான்...
அஸின் ராவுத்தர் தோல் ஷாப்பில் கேட்ட இந்த அலறல் வழக்கம் போல் அன்றாட நிகழ்வாகிவிடவில்லை. அப்பாவி ஒசேப் திமிறி எழுந்தான். முதலாளியின் மைத்துனன் முதாபா மீரான் மீது பாய்ந்து தூக்கி வீசினான். அந்த சிறுபொறி காட்டுத் தீயானது. மாபெரும் எழுச்சியின் விதையானது. அதுதான் இந்நாவல்.
ஒசேப்பை கட்டி வைத்து உதைப் பதைக் கண்டு இயல்பான மனிதநேயத் தோடும் கோபத்தோடும் பாய்ந்த இரு தயசாமி கிறுத்துவத்துக்கு புதுமுகம் தருகிறார். பாதிரியாராக ஆசைப் பட்டவர் பாவப்பட்ட மக்களின் போரா ளியாக மாறுகிறார்.
நந்தவனப் பட்டியில் சுடுகாட்டுப் பாதை மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக வந்த சங்கரன் தடையை உடைத்தது ஒடுக்கப் பட்ட மக்களுக்கு நம்பிக்கை ஊட்டியது. மறுபக்கம் அக்ரஹாரம் கொதித்தது.
என்ன குத்தம் செய்தானின்ணா கேக்கிறேன் கணேசய்யர், இதைவிட என்ன அபச்சாரம் ஓய் செய்ய வேணும்? ஒரு ஃபராமணன், அதிலே யும் ஆச்சாரமான குடும்பத்திலே ஜெனிச்சவன் சண்டாள ஜனங்கவாசம் செய்யும் சேரிக்குப் போய்... அதுக ளோட ஒண்ணா மண்ணா கலந்திருக் கான். அதோட சகிக்க முடியாத அநி யாயம் என்னண்ணா ஒரு பறைச் சாதி பெண்ணோட பொணத்தை ஒரு சட்டைகார மிலேச்சப் பயலோடு சேர்ந்து தோளிலே தூக்கியிருக்கான் இதைவிட அபச்சாரம் என்ன வேணும்? என நாராயணய்யர் கொட்டினார்.
அக்ரஹாரத்தை எதிர்த்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களின் விடியலுக்காக சங்கரன் பயணப்பட்ட கதை இந்நூலில் ரத்தமும் சதையு மாய் பதிவாகி உள்ளது. கம்யூனிட் கட்சியை பார்ப்பணர் கட்சி என பகடி பேசும் அரைவேக்காட்டு அறிவு ஜீவி கள் நெற்றிப் பொட்டில் அறைகிறது இந்நூல். பூணூலை அறுத்தெறிந்து அம்மக்களுடன் சங்கரன் கலந்ததைக் கூட திடீர், நிகழ்வாக அல்ல இயல் பான போக்கில் சன்னஞ் சன்னஞ் சமாக ஏற்பட்ட மாற்றமாகவே டி.செல் வராஜ் பதிவு செய்திருப்பது எழுத்து நேர்மையைக் காட்டுகிறது.
பாதிரியார் அங்கியைதூக்கி எறிந்து விட்டு தங்கசாமி தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களுக்காக போராட வந்த கதை.
காங்கிர சோஷலிட்டாக கம்யூனிடாக அடக்கமாய் செயல் பட்ட அமைப்பாளர் போராளி மதன கோபால் சாயலில் வேலாயுதம் அவரு டைய நெஞ்சுறுதி அவர் சந்தித்த அடக்குமுறைகள் அடடா... கம்யூ னிட்டுகள் தொழிற்சங்கத்தை கட்டி வளர்க்க சொரிந்த ரத்தமும் கண் ணீரும் இவ்வளவு உயிர்த்துடிப்புடன் இதுபோல் இன்னொரு நாவலில் சொல்லப்பட்டிருக்குமோ என்பது ஐயமே!
அருக்காணி என்ற பெண் பாத்திரம் எழுச்சியுற்ற உழைக்கும் பெண்களின் இலக்கணம் அல்லவா? பொட்டச் சிக்கு கோபம் வந்தா பூமி தாங்காதுடா தொங்கா என வில்லன் முதபா மீரனை தூக்கி வீசி அவன் மீது குழவிக்கல்லைப் போட்டு கொலை செய்யும் சிட்டம்மா; அந்தப் பழி சங்கத்துக்காரன் மேல் விழுந்தபோது நேர்மையோடு உண்மையைச் சொன்ன சத்திய ஆவேசம்; இந்நாவல் முழுவதும் வரும் அருக்காணி, தாயம் மாள், மாடத்தி சிட்டம்மாள் ஒவ்வொரு பெண்ணும் உழைக்கும் மக்களின் பெண்ணியம் இது என கோடு கிழித்துக் காட்டுகின்றது.
அக்னீமேரியும் அமலோற்ப மும் இதர பெண்களும் தியாகத்தின் சாட்சிகள். தியாகம் என்பது வெறும் வார்த்தையல்ல. ஒரு லட்சியம் மனித மனங்களைக் கவ்வுமானால் அது எவ்வளவு பெரிய போராட்ட சக்தியாக மாறும் என்பதை கூறவும் வேண் டுமோ?
சந்தனத்தேவன் அடியாளாய் வந்தவன் விழிப்புற்றபோது அவனுள் நிகழும் இமாலயமாற்றங்கள், சீயான் தேவர், முத்துப்பேச்சி, விருமாயி எல்லோருமே சமூகம் சிருஷ்டித்த பாத்திரங்கள். அவர்கள் தங்களை உணரும்போது ஏற்படும் தலைகீழ் மாற்றங்கள்! அதுதானே நிலைத்த பலன் தரும்!
திண்டுக்கல் தொழிற்சங்க வர லாறு மட்டுமல்ல இந்த நாவல்; ஏறத் தாழ 40 ஆண்டுகள் தமிழக, இந்திய அரசியல் நிகழ்வுப் போக்கும் எந்தவித பிரசங்கமும் செய்யாமல் காட்சிகளாக பாத்திரங்கள் மூலமே பதிய வைத்த தன் மூலம் டி. செல்வராஜ் வெற்றி பெற்றுவிட்டார்.
காங்கிர கட்சியில் அப்பழுக் கற்ற தியாகிகள் இருந்தனர். ஆனால் நாடு விடுதலை அடையும்போது முதலாளிகள், கள்ளச்சந்தைக்காரர் கள், திருடர்கள் கதர்சட்டை போட்டு தலைவரானார்கள் தியாகம் ஓரம் கட்டப்பட்டது. காங்கிர சுரண்டும் வர்க்கக் கூடாரமானது. இதை மிக நுட்பமாக இரண்டே அத்தியா யங்களில் செல்வராஜ் தீட்டிக்காட்டி விட்டார்.
கம்யூனிட் கட்சி தடை செய் யப்பட்ட காலத்திலேயேயும் அது மக் கள் நல்வாழ்வுக்கானப் போரில் எப்படி இரண்டறக் கலந்து நின்றது என்பதை இந்நாவல் விவரிக்கிறது.
காவல்துறையும் அதிகார வர்க்க மும் சுரண்டும் வர்க்கத்திற்கும் சாதிய அடக்குமுறைக்கும் துணை நிற்பதை உரிய முறையில் இந்நாவல் பதிவு செய்கிற வேளையில் அதே காவல் துறையிலும் அதிகார வர்க்கத்திலும் ஜனநாயக எண்ணங்கொண்டோரும் இருப்பதை நளினமாகப் பதிவு செய் துள்ளது. துண்டு பாய் என்கிற சவுக் கத்தலி, செல்ல மரைக்காயர் என்கிற சிறு வியாபாரி போன்ற பல பாத் திரங்கள் மூலம் எந்த மதமாக இருந் தாலும் அதற்குள்ளும் வர்க்க வேற் றுமை இருப்பதையும்; நேர்மையும் தியாகமும் போர்குணமும் மிக்க சாதாரண மக்கள் பெரும்பாலோராக இருப்பதையும் அழகாக நாவ லாசிரியர் பதிவு செய்துள்ளார்.
ஆயினும் நீதிதுறையில் வர்க்கப் பாசம் ஏன் நூலாசிரியரால் சரியாகத் தோலுரிக்கப்படவில்லை.
ஒசேப் - தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவர்; எந்த தெருவில் நுழையக் கூடாது என்று தடுக்கப்பட்டாரோ; தீண்டாமையின் கோரத்துக்கு இலக் கானாரோ அதே ஊரில் நகர்மன்றத் தலைவராகிறார்.
இத்துடன் நாவலை முடிக்க வில்லை. பெற்ற வெற்றி தற்காலிக மானது; போராட்டம் முடியவில்லை தொடர்கிறது என்பதன் குறியீடாக சங்கரன் மறுபடியும் கைதாவதுடன் நாவல் நிறைகிறது. ஆனால் நாவல் நம்முள் கிளர்த்தும் உரத்த சிந்தனை கள் ஓராயிரம். ஆம். வர்க்க பகைமை, வர்ணப் பகைமையை வெல்லும் யுத்தியை இந்நாவல் சித்தரிக்கிறது.
இது தலித் நாவலா? ஆம் தலித் மக்களை விழிப்படையச் செய்யும் நாவல். இது வர்க்கப் போராட்ட நாவலா? ஆம். வர்க்கப் போராட்டம் எப்படி அன்றாடம் நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளது என்பதை பறைசாற்றும் நாவல். இது வரலாற்று நாவலா? ஆம். கம்யூனிட் இயக்க தியாக வரலாற்றை உயிர்துடிப்போடு உணர வைக்கும் நாவல்? இது துப்பறியும் நாவலா? ஆம். மீரான்பாய் மரணத்தை துப்பறியும் கதை நிகர்த்த சபென்ஸூடன் நகர்த்தும் நாவல். அதற்கும் மேல் இது. மதபீடங்கள் அது கிறுத்துவம் ஆனாலும் இலாம் ஆனாலும் இந்து மதமானாலும் எப்படி சுரண்டும் வர்க்கத்துக்குச் சேவை செய்யும் அமைப்புகளாகவே இருக்கும் என்பதை எடுத்துச் சொல்வதால் இது மறு மலர்ச்சி நாவலுமாகும்.
கம்யூனிட் தலைவர்கள் வாழ்க்கை வரலாறு பல வெளிவந்துள் ளன. ஆயினும் அவை இன்னும் வெகுமக்களைச் சென்றடைய வில்லை. கட்சிக்குள்ளும் முழுமை யாகச் சென்றடையவில்லை. கம்யூ னிட்டுகளின் மீதும் கம்யூனிட் தலைவர்கள் மீதும் எதிரி வர்க்கம் தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருகிறது. இச்சூழலில் கம்யூ னிட்களின் தியாகத்தை போற்ற இந்நாவல் தெருத் தெருவாக எடுத்துச் சொல்லப்பட வேண்டும்.
கம்யூனிட்டுகளுக்கு சாதி இல்லை. மதம் இல்லை. மூடநம்பிக் கைகள் இல்லை. சுயநலம் இல்லை. மக்களுக்காக எல்லாவித தியாகங் களுக்கும் தயாரானவர்களே கம்யூனிட் டுகள். அவர்கள் காட்டுகிற பாதைதான் இந்த நாட்டை உய்விக்கும் என்பதை உரக்கச் சொல்ல வேண்டிய நேரம். எனவே ஒவ்வொரு கட்சி கிளையும் ராமாயணம் மகாபாரதக் கதை சொல்லுவது போல் இந்த நாவலை தெருத் தெருவாகச் சொல்ல வேண்டும்.
தேநீர் நாவல் மூலம் இதுவரை தேநீர் செல்வராஜ் என அறியப்பட்ட இந்நாவலாசிரியர் இந்நாவல் மூலம் தோல் செல்வராஜ் என இனி அறியப் படுவார்.
தோல், டி. செல்வராஜ், நியூ செஞ்சுரி புக் ஹவு (பி) லிட், 41பி, சிட்கோ இண்டடிரியல் எடேட், அம்பத்தூர், சென்னை - 600 098. பக். 712, விலை 375/-

பர்மியப் போராளிகள்: உலுக்கும் கேள்விகள்

Posted by அகத்தீ



ஜார்ஜ் பெர்னாண்டஸ் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த பொழுது வட கிழக்கு மாநிலங்களில் ஆயுதம் கடத்துவோருடன் அவருக்கு தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. சில மாதங்கள் இச்செய்தி பரபரப் பாக பேசப்பட்டது. அப்புறம் வழக்கம் போல் இதனை இந்திய சமூகம் மறந்துவிட்டது.உண்மையில் அவர்கள் ஆயுதக்கடத்தல் காரர்கள் இல்லை. பர்மாவின் ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடும் போரா ளிகள். அவர்களை நம்ப வைத்து வஞ்சித்த வர் இந்தியாவின் உயர் ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் கிரேவால் என்பதை எத்தனை பேர் அறிவர்?கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; பத்திரிகைகளில் வந்த செய்திகளும் பொய்; தீர விசாரித்து அறிவதே மெய். ஆம். இந்த விவகாரம் நமக்கு உணர்த்துவது இதைத்தான். இன்னும் இந்தியச் சிறைகளில் வாடும் அந்த 36 பர் மியப் போராளிகள் கதையைத் துருவிப் பார்த்தால், திகி லூட்டும் திருப்பங்கள் நிறைந்த துப்பறியும் புனை கதை களை விஞ்சும் மர்ம முடிச்சுகள் நிரம்பக்கிடக்கின்றன.வஞ்சகம் என்பதின் முழுப் பொருளாய் அந்த ராணுவ அதிகாரி இருந்தார் என்பது மட்டுமல்ல; இந்திய ராணுவத்தில் பணியாற்றிக்கொண்டே பர்மிய ராணுவ ஆட்சிக்கு உளவு பார்த்தார், சேவகம் செய்தார் என்பதை படிக்கிறபோது அதிர்ச்சியும் பல ஆழமான கேள்விகளும் நம்முள் எழும்.

நந்திதா ஹச்சர் எழுதிய வஞ்சக உளவாளிகள் என்ற நூல் பர்மா போராளிகளை ஏமாற்றிய இந்திய ராணுவம் என்கிற துணைத் தலைப்போடு நம்மிடம் நூலின் உள்ளடக்கத்தை பகிரங்கப்படுத்திவிடுகிறது. ஆயினும் ஒவ்வொரு பக்கமும் மர்மக் கதைபோல் நம்மை இழுத்துச் செல்கிறது.

இந்நூல் அந்த 36 பர்மியப் போராளிகள் விடு தலைக்கான போராட்டங்களை விவரிக்கிற முயற்சிதான். அதுதான் இந்நூலின் அடிப்படை நீரோட்டம். ஆயினும் பர்மாவின் வரலாறும் அங்கு ஜனநாயகத்துக்காக தொடரும் கிளர்ச்சிகளும் இந்நூல் நெடுக விரவிக் கிடக்கிறது. இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் ஏற்பட்ட தடுமாற்றமும், மாற்றமும் பர்மாவின் ஜன நாயகப் போராட்டங்களை சிக்கலாக்கிவிட்டதையும் அத் தோடு பிணைந்த பல்வேறு அரசியல் சிக்கல்கள் முடிச்சு களையும் இந்நூல் பேசுகிறது.ஆக பர்மா போராளிகள் சிறைப்பட்ட கதை - பர்மா ஜன நாயகப் போராட்டக் கதை - இந்திய வெளியுறவுக் கொள்கைக் குழப்பக்கதை என மூன்றும் கலந்ததே இந்நூல் எனில் மிகை அல்ல.அண்டை நாட்டில் சர்வாதிகாரம் கோலோச்சுகிற போது நம் நாட்டில் ஜனநாயகம் இருக்க முடியுமா?

“ஜன நாயகத்தை மீட்க பர்மிய மக்கள் நடத்தி வரும் போராட் டத்துக்கு ஆதரவு அளிப்பது நம் தார்மீகக் கடமை” என்று தனிப்பட்ட முறையில் நம்புகிறேன் என்று கேப்டன் லட்சுமி முன்னுரையில் கூறியிருப்பது பொருள்மிக்கது. இவர் இடதுசாரி கட்சிகள் சார்பில் இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றவர். ஆனால் வெற்றி பெற்ற அப்துல் கலாம், பர்மா இராணுவ ஆட்சி யோடு கைகுலுக்கினார் என்பதும் சம்பந்தம் இல்லாத செய்தி கள் அல்லவே.

பர்மாவில் ஏன் இன்னும் ராணுவ ஆட்சி நீடிக்கிறது? பர்மாவில் தொடரும் அரசியல் கிளர்ச்சிகள் மிருகத் தனமாக நசுக்கப்படும்போதும் உலக நாடுகள் மவுனம் காப்பது ஏன்? ஆங் சான் சூகி இன்னும் வீட்டுச் சிறையில் இருப்பது ஏன்? விருதுகள் வழங்கி அவரைக் கவுரவித்த இந்திய அரசு தற் போது ராணுவ சர்வாதிகாரியுடன் கூடிக் குலவுவது ஏன்? வங்க தேச விடு தலைக்கு ஆதரவுக்கரம் நீட்டிய இந்திய அரசு பர்மாவில் கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன்? அமெரிக்க ஏகாதிபத்தியம் எப்படி ராணுவ ஆட்சியை ஆதரிக்கிறது? சீனா அங்கு சர்வாதிகார ஆட்சிக்கு துணை போவது ஏன்? அப்பப்பா புற்றீசல்போல் புறப் படும் கேள்விகள் பலவற்றுக்கு இந் நூல் விடை தேட முயன்று இருக்கிறது. அது இந்நூலின் மையப் பொருளல்ல, எனினும் இணைத்து பேசியிருப்பது தவிர்க்க இயலாத தேவையின் கட்டாயமே!

பர்மாவின் பெயர் மியான்மர் எனவும், ரங்கூன் நகர் யாங்கோன் எனவும் மாற்றப்பட்டது கூட ஒரு உள்நோக்கம் கொண்டது. பர்மா எனும் தேசம் உருவாக காத்தூலே என்ற தேசம் பலியிடப்பட்டதி லிருந்தே சோகம் தொடங்குகிறது. பர்மாவின் வரலாறு பல்வேறு இனக்குழுக்களின் சுயஅடையாளத்தை அழித்து உருவானதா? அல்லது ஐக் கியத்தில் உருவானதா? இதைப் புரிந்துகொள்ள இந்நூல் உதவும்.

“ரங்கூனிலோ, தில்லியிலோ, வாஷிங்டனிலோ உட் கார்ந்து கொண்டு வரலாற்றைப் படிப்பது வேறு; கோஹிமா, ஹர்லேம் அல்லது மனேர்ப்ளா போன்ற ஊர்களில் இருந்துகொண்டு வரலாற்றைப் புரிந்து கொள்வது வேறு. நான் கரோனியர்களுக்காகவும், ஆரக்கானியர்களுக் காகவும் வாதாடுகிறேன். ஆகவே அவர்கள் எவ்வாறு அனுபவித்தார்களோ அவ்வாறே அரசியலையும் வர லாற்றையும் நான் புரிந்து கொண்டாக வேண்டும்” என நூலாசிரியர் உறுதியாகக் கூறுகிறார். இவர் விடுதலைக் காக குரல் கொடுக்கும் இந்த 36 பேரும் ஆரக்கானியர்களும் கரேனியர்களும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

பர்மாவுக்கும் நமது வடகிழக்கு மாநிலங்களுக்கும் உள்ள தொடர்பு எல்லை வழி பூகோளத் தொடர்பு மட்டுமா? அல்லது அதற்கும் மேலா?நூலாசிரியர் தன் அனுபவத்தை கீழ்க்கண்டவாறு ஓரிடத்தில் பதிவு செய்கிறார்:“வடகிழக்கு மாநிலங்க ளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றவர்களோடு ஒரே விடுதியில் இருந்தாலும் வெவ்வேறு உலகங்களில்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்பதை நான் பார்த்தேன்.”

இது மிகவும் நுட்பமான பதிவு. இந்தியாவின் மாநிலங்களாக தொடர்ந்தாலும் வடகிழக்கு மாநில மக்களா யினும் காஷ்மீர் மக்களாயினும் நம்மோடு வாழாமல் அவர்களுக்கான ஓர் உலகில் வாழ்வது ஏன்? யாரோ தூண்டிவிடுவதால் மட்டும்தானா? அப்படி நாம் நம் பினால் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்கிறோம் என்றே பொருள். தேசிய இனப்பிரச்சனைகள் பர்மா வாயினும், இந்தியாவாயினும் புதிய வடிவம் கொள்வது குறித்து ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.எண்ணை வளமும் வர்த்தக நலனும் ஒரு நாட்டின் வெளிநாட்டுக்கொள்கையில் ஆதிக்கம் செலுத்தும் போது மக்களின் சுயவிருப்பங்கள் காலில் போட்டு மிதிக்கப்படுவதுதானே நிகழும். இதன் கோரப்பலியே 36 பர்மாக் கைதிகள் சிறைபட்டதும்; அவர்களின் தலை வர்கள் இந்திய தீவொன்றில் சுட்டுக் கொல்லப்பட்டதும்; ஒரு ராணுவ அதிகாரியால் மோசமாக வஞ்சிக்கப்பட்ட தும்; அந்த அதிகாரி தப்பிச் சென்று தண்டனையின்றி சுகபோகத்தில் திளைப்பதும். இந்நூலில் நன்கு பதிவாகியுள்ளது.

ஜனநாயகத்துக்காக பர்மாவில் நடக்கும்போரில் துறவிகள் பங்கேற்றது ஆச்சரியமான விஷயம். ஆனால் நிலைமை அவ்வளவு முற்றிபோயுள்ளது. அங்கே ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆயுதங்கள் மட்டுமல்ல. ஜட்டிகளும் ஆயுதமானது வேடிக்கையானது. மக்களின் உணர்வை வெளிப்படுத் தும் அளவுகோலாகும்.பெண்களின் உள்ளாடைகளை வைத்திருக்கும் ஆண்கள் தங்கள் வலிமையை இழந்துவிடுவார்கள் என் பது பர்மாவின் பழமையான மூடநம்பிக்கை. ராணுவ சர்வாதிகாரிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. இதனைப் பயன்படுத்திக் கொண்டு பெண்கள் தங்கள் உள்ளாடைகளை ராணுவ சர்வாதிகாரிகளுக்கு தபாலில் அனுப்பும் அமைதிக்கான ஜட்டிகள் இயக்கம் நூலில் இடம் பெற்றுள்ள கொசுறுச் செய்தி. எனினும் கொதி நிலையை காட்டும் செய்தி.

பர்மாவின் நண்பனாக காட்சி அளித்த `அங்கிள் என அழைக்கப்பட்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஏன் திடீ ரென மாறினார்? தேசபக்தி மிக்கவர் எனக் கருதப்படு கிற விஷ்ணுபகத் தளபதி பொறுப்பிலிருந்து ஏன் நீக்கப் பட்டார்? நேர்மையான தளபதி என பெயரெடுத்த விஷ்ணு பகத் மோசமான ஊழல் ராணுவ அதிகாரி பற்றிய விவகாரத்தில் வாய் மூடி இருந்தது ஏன்? அடே யப்பா..... தோண்டத் தோண்ட கேள்விகள். மனித உரிமை பற்றிய பேச்சு கானல் நீர் தானோ?

வெறும் துரோகம், வஞ்சகம், ஏமாற்று, அவமானம், இவைகளின் வரலாறாக மட்டுமல்ல; தோள்கொடுக்க முன்வரும் இடதுசாரிகள், துணை நிற்கும் மனித நேயர்கள் பற்றிய செய்திகளும் நாமறிய வேண்டிய முக்கிய அம்சங்களே. "தாவர உணவுக்காரரான அந்த ஹரியானா விவசாயிக்கு தன் வீட்டில் குடியிருக்கும் மாட்டுக்கறி உண்ணும் ஆப்கானியரோடு எந்தச் சிக்கலும் இல்லை. அந்த இலாமியர் பர்மாவிலிருந்து வந்த பன்றிக்கறி சாப்பிடுபவரை அன்புடன் வரவேற்கிறார் (உணவளிக் கிறார்). அதை கவனித்த நான் சமூகப் பணியாளர்க ளிடம் 'இதையெல்லாம் அரசாங்கத்துக்குச் சொல்லி விட வேண்டாம். அவர்களுக்குத் தெரியவந்தால் அந்த விவசாயியின் வீட்டுக்குள்ளேயே ஒரு மதக்கலவரத் தைத் தூண்ட ஏற்பாடு செய்துவிடுவார்கள்...' என்றேன்!" இவ் வாறு நூலாசிரியர். ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த சின்ன சம்பவம் பல பெரிய செய்திகளை கூறவில்லையா?

இந்த நூலைப் படிக்கிறபோது பல ஐயங்கள் எழும். இந்திய ராணுவக் கொள்கையும், வெளிநாட்டுக் கொள் கையும் ஆபத்தான திசையில் வேகமாக சென்று கொண்டிருக்கின்றன. இது நமது இயல்புக்கு முரணா னது. புதிய உலகச் சூழலில் தாராளமயத்தின் விளைவு இது.பர்மா - இந்திய மக்கள் உறவு தொப்புள்கொடி உறவு போன்றது. ஆனால் இந்தியா துரோகம் செய்கிறது. அப்படியெனில் இங்கே தெற்கே இலங்கைத் தமிழர் நம் தொப்புள்கொடி உறவுக்கு இந்திய அரசும் இந்திய ராணுவமும் நியாயம் வழங்கி இருக்கும் என்று நம்ப முடியுமா? என்னுள் நெடுநாள் ஆழமாக பதிந்த சந்தேகம் இந்நூல் மூலம் மேலும் வலுப்பட்டது.ஜான்பெர்கின் எழுதிய ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ என்ற நூலைப் போல இந்த நூலும் நடப்பு அரசியலை புரிந்து கொள்ள விழிகளைத் திறக்கும் சாவியாகும் என்பதில் ஐயமில்லை.

இது மொழிபெயர்ப்பு நூல் என்பதை அட்டையில் தமிழில் அ. குமரேசன் என்று போட்டுள்ளதால் மட்டு மே அறிய முடியும். நூலைப்படிக்கிற யாரும் மொழி பெயர்ப்பென்று கூற முடியாது. அப்படியொரு நீரோட்ட நடை. அ. குமரேசனுக்கு பாராட்டுகள்!

வஞ்சக உளவாளி

(பர்மா போராளிகளை ஏமாற்றியஇந்திய ராணுவம்)

நந்திதா ஹச்சர்.

தமிழில்: அ. குமரேசன்,

கிழக்குப் பதிப்பகம்33/15 எல்டாம் சாலை,ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018.

பக். 228, விலை ரூ. 170/-

(நன்றி: ‘தீக்கதிர்’ 14.11.2010 இதழ் ‘புத்தக மேசை’ பக்கம்

வரலாறு படைத்த என். ராமகிருஷ்ணன் நூல்களில் வரலாற்றின் நாயகர்கள்

Posted by அகத்தீ Labels:



வரலாற்றைப் படிக்க வேண்டாம்; வரலாற்றைப் படைப்போம் என ஒருமுறை முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மாணவர்களிடையே பேசினார். இதனை அறிஞர் பெருமக்கள் கண்டித்தனர். வரலாற்றை முறையாக படிக்காமல் - உள்வாங்காமல் புதிய வரலாற்றைப் படைக்க முடியாது என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.
ஒவ்வொருவருக்கும், ஒவ்வொன்றிற்கும் கடந்த காலம் என்ற ஒன்று உண்டு. கடந்த காலம் என்று இல்லாத ஒன்று இவ்வுலகில் உண்டா? தாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கடந்த காலம் என்பது ஓர் உண்மைதான். நிகழ்காலத்தின் மூலத்தை கடந்த காலத்திலும், விளைவுகளை எதிர்காலத்திலும் தேடுவது தவிர்க்க முடியாதது. நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் சீர்படுத்த விரும்புவோருக்கும், சீர்கேடுகளைத் தவிர்க்க விரும்புவோருக்கும், கடந்த காலத்தைப் பற்றிய அறிவும், புரிதலும், உணர்வும் பயனுள்ளவையாக அமையும். அத்தகைய கடந்தகால அறிவு-தெளிவு-உணர்வு இவற்றைத்தான் வரலாறு என்று குறிப்பிட வேண்டும் என்கிறார் பேராசிரியர் அ. கருணானந்தன்.
நாம் இன்று பள்ளிகளில் படிக்கும் வரலாறு எத்தன்மையது? இதுகாறும் உருவாக்கப்பட்ட, தரப்பட்ட வரலாறுகள் ஆதிக்க சக்திகளின் வரலாறுகளாகவே, ஆதிக்க சக்திகளைப் பெருமைப்படுத்தும் வரலாறுகளாகவே இருந்திருக்கின்றன. ஆதிக்க சக்திகளின் கருவியாகவே வரலாறு பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும் என்று கருணானந்தன் மேலும் கூறுகிறார்:
தற்கால இந்திய வரலாற்று அணுகுமுறை ஆங்கில ஆதிக்கத்தின் போது இருந்த அணுகுமுறையிலிருந்து பெரிய அளவில் மாறவில்லை. இரண்டிலுமே அரசியல் கிளர்ச்சிகள், ஆட்சி மாற்ற கிளர்ச்சிகள், சமூக மாற்ற கிளர்ச்சிகள், விவசாயிகள் கிளர்ச்சிகள், தொழிலாளர் கிளர்ச்சிகள் போன்றவற்றிற்கு இடம் அளிக்கப்படுவதில்லை. இராஜாராம் மோகன்ராய், வித்யாசாகர், இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், தயானந்த சரஸ்வதி, அலிகார் இயக்கம் ஆகியோர்கள் இடம்பெறும் வரலாற்றில் இராமலிங்க வள்ளலார், மகாத்மா பூலே, சாகுமகராஜ், நாராயணகுரு, இராமசாமிபெரியார், அம்பேத்கார் போன்றவர்கள் ஏன் இடம் பெறுவதில்லை? தெலுங்கானா கிளர்ச்சி, புன்னப்புரா, வயலார், கிளர்ச்சி, கோவை மில் தொழிலாளர் கிளர்ச்சி போன்றவை மறைக்கப்படுவது ஏன்?
வரலாறு கொடுக்கப்படுவதற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது - வரலாறு திரிக்கப்படுவதற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது-வரலாறு மறைக்கப்படுவதற்கும் நோக்கம் இருக்கிறது என்கிறார் கருணானந்தன்.
இங்கே நாம் பேசிக்கொண்டிருக்கிற வரலாறும் சரி, வரலாற்று நாயகர்களும் சரி, மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் ஒரு பகுதியே எனில் மிகையல்ல.
வரலாற்று நாயகர்கள் என இங்கே நாம் குறிப்பிடுவது; கம்யூனிஸ்ட் இயக்கத்தை - உழைப்பாளி மக்கள் இயக்கத்தை இந்திய தேசத்தில் கட்டி எழுப்ப முன்னத்தி ஏர் ஓட்டியவர்கள் - தமிழகத்தில் இப்பணியில் முதல் சாலை போட்டவர்கள் பற்றிய வரலாறே ஆகும்.
இங்கே எனக்கு பரிசீலனைக்காக ஒதுக்கப்பட்ட நூல்கள் 15 ஆகும்.
1) முசாபர் அகமது
2) இ.எம்.எஸ்.
3) பி.டி. ரணதிவே
4) ஹர்கிஷன் சிங் சுர்ஜித்
5) ஜோதிபாசு
6) பி. ராமமூர்த்தி
7) எ. பாலசுப்பிரமணியம்
8) ஏ. நல்லசிவன்
9) எம். ஆர். வெங்கட்ராமன்
10) கே. ரமணி
11) பி.ஆர்.பரமேஸ்வரன்
12) வி.பி. சிந்தன்
13) கே. அனந்தன் நம்பியார்
14) எம்.கே.பாந்தே
15) அந்தமான் தீவுச்சிறை
இதில் முதல் 13 பேரும் இப்போது உயிரோடு இல்லை; எம்.கே. பாந்தே நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்; அந்தமான் தீவுச் சிறை ஓராயிரம் தியாகக்கதை சொல்லும் குறிப்புகள்.
இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் கருக்கொண்ட போதே சதி வழக்குகளை எதிர்கொண்டது. இன்னும் சொல்லப்போனால் கருக்கொலை முயற்சி, சிசுக்கொலை முயற்சி இவற்றிற்கு தப்பி அதன் விளைவுகளோடு வளர்ந்த குழந்தையைப் போன்றதுதான் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆரம்பகால வரலாறு. அப்படியெனில் அந்த வரலாற்று நாயகர்களின் வாழ்க்கை எத்தகையதாக இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நெருப்பாற்றில் எதிர் நீச்சல் போட்டு எஃகாக உருமாறியவர்கள் என செக்கோஸ்லேவேகிய மாவீரன் ஜூலியஸ் பூசிக் கூறுவது மிகையல்ல என்பதை இந்நூல்கள் நிறுவுகின்றன.
தாஷ்கண்ட் - பெஷாவர் சதிவழக்குகள், கான்பூர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு என மூன்று முக்கிய சதிவழக்குகளை எதிர்கொண்டுதான் கம்யூனிஸ்ட் இயக்கம் இம்மண்ணில் காலூன்றியது. முசாபர் அகமது வாழக்கை வரலாற்று நூலில் இதன் வேர்களும் கூறுகளும் அடையாளம் காட்டப்பட்டுள்ளன.
சரிதை என்பதும் சுயசரிதை என்பதும் அது எவரை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதோ அவர் வாழ்ந்த காலகட்டத்தை; கடந்து வந்த பாதையை உற்றுநோக்கி அதிலிருந்து பயன்தரும் படிப்பினையைப் பெற்றுக்கொள்வதும் என்பதாகும். ஒரு சரிதையின் உருவாக்கத்திற்கு எத்தகைய உழைப்பும் ஆக்கத்திறனும் தேவைப்படுகிறது எத்தனை வருடங்கள் செலவிட வேண்டியுள்ளது என்பதை நூலாசிரியரின் உரையில் நன்குகாணலாம். இவ்வாறு தோழர் பி. ராமமூர்த்தி வாழ்க்கை வரலாற்று நூலுக்கு பதிப்புரை எழுதியுஎள்ள எம். பாலாஜி கூறுவது வெறும் வார்த்தைகளல்ல. நூற்றுக்கு நூறு உண்மை. இந்த 15 நூல்களும் ஏன் அவரின் மொத்த நூல்களும் இதன் சாட்சியே ஆகும்.
இதில் ஓர் இந்திய கம்யூனிஸ்டின் நினைவலைகள் எனும் இஎம்எஸ் வாழ்க்கை வரலாறு என். ராமகிருஷ்ணனின் ஆக்கம் அல்ல. மொழியாக்கம் செய்தவர்தாம் என். ராமகிருஷ்ணன். வேதங்களிலிருந்து மார்க்சியத்தை நோக்கி வளர்ந்த இஎம்எஸ் குறித்து இவர் தனியாகவும் நூல் எழுதியுள்ளார். இவரின் மொழியாக்கத் திறனுக்கு இந்நூல் சான்று பகர்கின்றது. இந்நூலின் ஆங்கிலப் பதிப்பிற்கான முன்னுரையில் இஎம்எஸ் எழுதுகிறார்:
ஒரு கம்யூனிஸ்ட் ஆவதற்காகதான் பிறந்து வளர்ந்த சமூக அரசியல் சூழ்நிலையை எதிர்த்துப்போராட வேண்டியிருந்த மனிதனின் கதை இது; பிறகு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தபின் முதலில் ஒன்றாயிருந்த கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் அதன்பின் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சிக்குள்ளும் நடந்த உட்கட்சிப் போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டியிருந்த மனிதனின் கதை இது
இந்த கணிப்பு அவரது, அதாவது இஎம்எஸ்ஸின் வாழ்க்கைக்கானது மட்டுமல்ல, ஏதாவது ஒரு வகையில் எல்லா தலைவர்கள் வாழ்க்கையிலும் இதனைக் காணமுடிகிறது. என். ராமகிருஷ்ணன் எழுத்தின் கூர்மை இதனை மையப்படுத்தியே தலைவர்கள் வாழ்வை சித்தரிப்பதிலும் செயல்பட்டிருப்பதை உறுதியாகக் கூறமுடியும்.
தோழர் பி. ராமமூர்த்தியின் வாழ்க்கை வரலாறு என்பது என். ராமகிருஷ்ணன் படைப்பிலே முத்திரை பதிக்கும் முதல்வரிசை நூல்களில் இடம் பெறும். இதனை அவரே ஒப்புக்கொள்வார்.
தன் வாழ்க்கை வரலாற்றை சுதந்திரப்போராட்ட, கம்யூனிஸ்ட் இயக்க, தொழிற்சங்க இயக்கப் பின்னணியோடு இணைத்து எழுத வேண்டும் என்றும், வெறும் தனிமனிதனின் வரலாறாக எழுதக்கூடாது என்றும் கூறினார். நான் அதற்கு ஒப்புக்கொண்டேன் என தோழர் பி. ராமமூர்த்தி விதித்த நிபந்தனைகளை ஒப்புக்கொண்டு பெருமளவு அதற்கு நியாயமும் வழங்கி இருக்கிறார்.
ஆயினும் இதே அளவுகோல் பிறவாழ்க்கை வரலாற்று நூல்களுக்கு முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டுள்ளதாக கூற இயலாது. அப்படி எதிர்பார்க்கவும் கூடாது. ஏனெனில் ஒவ்வொருவர் வாழ்க்கை வரலாற்றை எழுதும்போது வரலாற்றுச் சூழலை விவரிக்கத் துவங்கினால் பக்கங்கள் பெருத்துவிடும். கூறியது கூறல் மீண்டும் மீண்டும் நிகழும், ஆயினும் தேவையானவற்றை தேவைப்படும் இடத்தில் கூறவும் இவர் தவறவில்லை. இந்த நூல்களை எல்லாம் இணைத்துப் படிக்கும்பொழுது அன்றைய காலகட்டத்தின் அரசியல் சமூக பொருளாதார வரலாறும் இதில் இவர்கள் பங்களிப்பும் நன்கு புலனாகும்.
எந்த தனிமனிதரும் வரலாற்றின் படைப்புதான். அதே சமயம் அந்த வரலாற்றை முன்நகர்த்துவதில் அவரின் தனித்த ஆளுமைக்கும் முக்கிய பங்கு உண்டு. வள்ளுவர் காலத்தில் காரல் மார்க்ஸ் பிறந்திருந்தால் அவர் நிச்சயம் மூலதனம் எழுதியிருக்கமாட்டார், திருக்குறள் போல்தான் அறநூல், வாழ்வியல் நூல் படைத்திருப்பார். ஒரு வேளை வள்ளுவன் மார்க்ஸ் பிறந்த காலத்தில் இருந்திருந்தால் சமூக அறிவியல் நோக்கில் தத்துவ நூல் எழுதியிருப்பார். இருவருமே அவரவர் வாழ்ந்த காலத்தின் மாபெரும் கொடை; அதேபோல அவர்களின் ஆளுமை அந்தந்த காலத்தை முன்நகர்த்தும் நெம்புகோலாயின எனில் தவறல்ல.
இதை ஏன் சொல்லுகிறேன் எனில் இந்த மாபெரும் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்துவிட்டு அத்தகைய எளிமை, அத்தகைய அர்ப்பணிப்பு, அத்தகைய தியாகம் இன்றைய கம்யூனிஸ்ட்டுகளிடம் இல்லை என்று பலர் கூறுகின்றனர். வெளிப்பார்வைக்கு அது உண்மையெனினும் அது முழு உண்மையல்ல. அன்றைய காலகட்டத்தின் நெருக்குதல்களுக்கிடையே ஒடுக்குமுறைகளுக்கு இடையே வாழ்ந்த அவர்களுக்கு முன் நீண்டு கிடந்தது அத்தகைய கரடு முரடான பாதையே அதில் பயணிக்கிறபோது ஏற்பட்ட சிரமங்களும், அதைத் துணிந்து சீர்செய்து வழிஅமைத்த மனவுறுதியும் நம்மை வியக்கவைக்கும் அந்த பாதையில் நடைபோடும். மற்றவர்கள் அடுத்த கட்ட முன்னேற்றம் காணமுயற்சிக்கின்றனர். இவர்களின் வாழ்வும் பணியும் அதற்கொப்பவே அமையும்.
ஜோதிபாசுவின் வாழ்க்கை பாதை மேற்குவங்கத்தில் இடதுசாரிகள் பெற்றுவரும் வெற்றியின் பின்னால் உள்ள இரத்தத்தையும் வியர்வையையும் நமக்கு விளங்கவைக்கும்; சுர்ஜித்தின் வாழ்க்கைப் பாதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் செல்லும் திசை வழியின் அவசியத்தை; அதன் பரிணாமத்தை அதற்காக நடத்திய உள்கட்சி போராட்டத்தை படம் பிடிக்கும்.
இ.எம்.எஸ்., பி. ராமமூர்த்தி உட்பட மூத்த தோழர்களின் வாழ்க்கை வரலாறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறும் பிரிக்க முடியாது. அதே சமயம் வெறும் கட்சி வாழ்க்கை மட்டுமே தனிமனித வாழ்வு ஆகாது அல்லவா?
இ.எம்.எஸ். நூலுக்கு அணிந்துரை வழங்கிய ஏ. நல்லசிவன் கூறுவார், ஒரு கம்யூனிஸ்ட் தனது குடும்பத்தினருடன் கொண்டுள்ள உறவும் பாசமும் அரசியல் வாழ்வில் அவன் அடையும் கடும் துன்பங்களால் பல நேரங்களில் பாதிக்கப்படுவதும், அதனை உறுதியுடன் சமாளிப்பது மட்டுமின்றி பாசமிக்க குடும்பத்தினரை எப்படி அணுக வேண்டும் என்பதைனையும் விளக்குகிற பகுதியாகும்.
இதேபோன்ற கூறுகள் மற்றெல்லா நூல்களிலும் சுட்டிக்காட்ட என். ராமகிருஷ்ணன் தவறவில்லை. பி. ராமமூர்த்தி தன்தாயின் மனம் புண்படக்கூடாது என்பதற்காக தனது தாயார் மரணம் வரை திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்தது; மரணப் படுக்கையிலிருந்த தன் மனைவி சாராதாவை சந்திக்க தலைமறைவாய் இருந்த எம்.ஆர். வெங்கட்ராமன் சென்றதும், ..நீங்கள் ஏற்றுக்கொண்ட கொள்கைப்படியே நடந்துகொள்ளுங்கள், என்னைப் பற்றி கவலைப்படாதீர்கள்...சீக்கிரம் தப்பித்துவிடுங்கள்... என மனைவி கேட்டுக்கொண்டதும், என ஒவ்வொரு வரலாற்றிலும் பாசப்போராட்டங்கள் சிலவற்றை என். ராமகிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ள பாங்கு தனித்துவம் ஆனது. கம்யூனிஸ்டுகள் காதலும் பாசமும் இல்லாத இரும்பு இதயம் படைத்தவர்கள் அல்ல; உண்மையான காதலும் ஊற்றெடுக்கும் பாசமும் அவர்களின் தனித்துவம். ஆயினும் அரசியல் புறச்சூழலால் அவர்களும் அவர்களோடு சேர்ந்து அவர்கள் குடும்பமும் பட்ட சிரமங்கள் அளவற்றது. என். ராமகிருஷ்ணன் அந்த வாழ்வுக்கு உரிய நியாயம் அனைத்து நூல்களிலும் வழங்கியுள்ளார்.
தோழர் எ. பாலசுப்பிரமணியம், எம்.ஆர். வெங்கட்ராமன், பி. ராமமூர்த்தி என ஓரளவு வசதியும் வாய்ப்பும் படைத்த மத்திய தர வர்க்கத்திலிருந்து அதுவும் உயர் சாதியிலிருந்து வந்தவர்கள் சந்தித்த பிரச்சனைகள் தனித்துவமானது. சுயசாதி மறுப்பும் பூணூலை அறுத்தெறிந்து சனாதன தளை உடைத்து அடித்தட்டு மக்களோடு தங்களை ஐக்கியப்படுத்திக்கொள்வதும் மிகப்பெரிய அர்ப்பணிப்பாகும். இவர்கள் வாழ்க்கை வரலாற்று நூல் நெடுக இதன் அழுத்தமான சுவடுகளை என். ராமகிருஷ்ணன் பதிவு செய்துள்ளார். தோழர் ஏ. பாலசுப்பிரமணியம் திண்டுக்கல்லில் தாழ்த்தப்பட்ட மக்களை, தோல் பதனிடும் தொழிலாளர்களை அணிதிரட்ட அவர்களோடு இணைந்து போரிட்டது தனிக்காவியமாகும். வர்க்கப் போராட்டமும் சாதி எதிர்ப்பு போராட்டமும் இணைந்த அந்த போராட்ட களம் புதிய படிப்பினைதரும். அதேபோல பூதிப்புரம் என்ற இடத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் சுடுகாட்டுப் பாதையை மறுத்து ஆதிக்க சாதியினர் கட்டிய சுவரை இடித்துத் தகர்த்தும், அதற்கு மன்னிப்பு கேட்டால் மட்டுமே வாக்களிப்போம் என்ற மேல்சாதி நிர்பந்தத்திற்கு பணியமறுத்து அந்த சிறு அளவு வாக்கால் தோல்வியை சந்தோஷமாக ஏற்றதும் சாதாரணமானதா?
இவர்கள் வாழ்க்கை இப்படியெனில் தோழர் கே. ரமணியின் வாழ்க்கை ரொம்பவும் வித்தியாசமானது. வறுமையை சுவைத்த வாழ்க்கை கடைக்கோடியிலிருந்து போராடிப் போராடி அங்குலம் அங்குலமாக முன்னேறிய ஒரு ஏழை பஞ்சாலைத் தொழிலாளியின் புலம்பெயர்ந்த தொழிலாளியின் சோகக் கதையாகும். பி.ஆர். பரமேஸ்வரன், கே.எம். ஹரிபட், அனந்தநம்பியார் போன்றோர் வாழ்வுகளும் பிழைப்புத்தேடி புலம் பெயர்ந்த மனிதர்களின் போராட்ட வாழ்வின் கதையன்றோ? பி.எஸ்.தனுஷ்கோடியின் வாழ்வு தமிழக சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்ட எழுச்சியின் வரலாறாகும், ரமணியின் கதை கோவை மாவட்ட தொழிற்சங்க வரலாறு எனினும் மிகையல்ல, அதோடு மட்டுமல்ல தன்னம்பிக்கை சுயமுயற்சி இவைபற்றியெல்லாம் இப்போது வெளிவரும் ஆன்மீக நெடிமிக்க சுய முன்னேற்ற நூல்கள் தராத நம்பிக்கையை போராட்ட உணர்வை வைராக்கியத்தை இரத்தத்தோடு கலக்கச் செய்யும் வாழ்க்கை வரலாறு ரமணியுடையது. அதனை அந்த வாழ்க்கைப் போராட்ட வலியோடு என். ராமகிருஷ்ணன் பதிவு செய்துள்ளார். ஒரு வகையில் தற்போது அவரது வாழ்க்கைப் போராட்டமும் அத்தகையதுதானே!
ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் தனியான வார்ப்படத்தில் வார்க்கப்பட்டவன் என்றார் தோழர் ஸ்டாலின். ஆனால் தனிவார்ப்படமாக அவர்கள்பட்ட அடியும் பயணித்து கடந்த பாதையும் - அப்பப்பா நம்மை மலைக்கவைக்கிறது. ஆழமான தத்துவ மோதல்களும் உள்கட்சிப் போராட்டங்களும் நடைபெற்ற காலத்தில் கொண்ட கொள்கைக்காக அவமதிப்புகளையும், கட்சியின் தண்டனைகளையும் ஏற்று செயல்பட்ட தலைவர்கள் வாழ்க்கை வரலாற்று படிப்பினைகள் என்றும் பயன்தரும். தோழர் பி.டி. ரணதிவே வாழ்க்கை அதற்கு மிகச்சிறந்த உதாரணமாகும். தோழர் பி.டி. ரணதிவே சந்தித்த அவமானங்களைப்போல் வெறொருவர் சந்தித்திருக்கக் கூடுமோ என ஐயமே எழுகிறது. அதனை பி.டி. ஆர் எதிர் கொண்ட விதம்தான் இன்றைக்கும் வழிகாட்டியாக திகழ்கிறது.
இந்தியாவில் கம்யூனிட் கட்சியை கட்டி வளர்த்தவர்கள் வரிசையில் பி.டி ஆருக்கு தனி இடம் உண்டு. சிறந்த அறிவாளி. விடுதலைக்கு பின் கட்சிக்குள் ஏற்பட்ட அதி தீவிரவாத போக்குகள் கட்சிக்கு பெரும் சேதத்தை உருவாக்கியது. அதனால் கட்சிக்குள் கருத்து மோதல் தீவிரமானது. பி.டி. ஆர் பாதைக்கு எதிரானவர்கள் கைவலுப்பட்டது. முடிவெடுக்க முடியாமல் திணறல் ஏற்பட்டபோது அஜய் கோஷ், எ.ஏ டாங்கே, சி. ராஜேவர்ராவ், பசவபுன்னையா ஆகிய நால்வர் கொண்ட தூது குழு ரஷ்யா சென்று டாலினிடம் விவாதித்தது. டாலின் இந்திய கம்யூனிட் கட்சி மேற்கொண்ட இடது தீவிரவாத தவறுகளை சுட்டிக் காட்டியதுடன்; பி.டி ஆர் செயலாற்றல் மிக்க, திறமைமிக்க கம்யூனிட்- கட்சியிடம் இழப்பதற்கு திறமை மிக்க ஊழியர்கள் மிகக் குறைவு, எனவே அவரை இழந்து விடவேண்டாம் மத்தியக் குழுவில் சேர்க்க வேண்டாம் ஆனால் அவருடைய திறமைக்கும் தகுதிக்கும் ஏற்ப வேறு பொறுப்புகள் வழங்க வேண்டும் என்று யோசனை கூறினார்.
ஆயினும், அன்று கட்சியில் நிலவிய சூழ்நிலை வேறுமாதிரியாகவே இருந்தது. கட்சியின் மத்தியக்குழு விசாரணைக்கு பின் ரணதிவேயை இரண்டு ஆண்டுகள் கட்சியிலிருந்து நீக்கி வைக்கப்பட்டார். இதை விசுவாசமிக்க கம்யூனிடாக பி.டி ஆர் ஏற்றுக் கொண்டார்.
இப்பொழுது பல தோழர்களுக்கு அவர் வேண்டாத மனிதராக காணப்பட்டார். பலர் அவரை சந்தித்துப் பேசுவதையே தவிர்த்தனர். என்கிறார் அவர். வரலாற்றை எழுதிய என். ராமகிருஷ்ணன் அவரது மனைவி விமலா ரணதிவே வார்த்தையில் கூறுவதானால். 1951 முதல் 1955 வரைப்பட்ட கால கட்டமானது பி.டி ஆருக்கு மிகவும் சோதனை மிக்க காலகட்டமாகும். டாங்கேயும் அவரது ஆதரவாளர்களும் அவரை மிகவும் மட்டகரமாக நடத்தினார்கள்.
சாதியிலிருந்து நீக்கப்பட்டவரைப்போல் நடத்தினார்கள் என்று விமலா ரணதிவே கூறுவதிலிருந்து அந்த மன உழைச்சலைப் புரிந்து கொள்ள முடியும். பலமாதங்கள் கட்சி வழங்கும் ஊதியம் கூட வழங்கப்படவில்லை விமலா வேலைக்குப் போய் ஈட்டும் சொற்ப வருவாயும் லீலா சுந்தரய்யா அவ்வப்போது அனுப்பும் சிறு உதவியும் தான் வயிற்றுப்பாட்டுக்கானது.தனது சகோதரி அகல்யா ரங்கனேக்கள் வீட்டில் ஒரு அறையில் ஒட்டுக் குடித்தனமாக வாழ்ந்தார். மனைவி வேலைக்கு போனதும்; தனது மகன் உதய் தான் அவரது ஒரே பற்றுக்கோடு அவனை பராமரிப்பதிலும் புத்தகங்கள் படிப்பதிலும் நேரத்தை செலவிட்டார்.
அவருக்கு கட்சி வேலை எதுவும் தரப்படவில்லை. கட்சி அலுவலக வராண்டாவில் உட்கார்ந்து படிப்பதும் தனக்கு தானே சதுரங்கம் ஆடுவதுமாக கழித்தார். கட்சி அவருக்கு வேலைதரவில்லை எனினும் கட்சி அலுவலகம் செல்வதை நிறுத்தவில்லை.
இந்தச் சூழலில் 1953 ஆம் ஆண்டு கட்சித் தலைமைக்கு வரவாய்ப்பிருந்தும் அதனை பி.டி ஆர் நிராகரித்தார். இதுகுறித்து இந்திய கம்யூனிட் இயக்க முக்கியத் தலைவர்களில் ஒருவரான என். பிரசாத்ராவ் விவரித்து பிடி ஆரின் சுய கட்டுப்பாட்டை சுட்டிக் காட்டுகிறார். இதனை என். ராமகிருஷ்ணன் தான் எழுதிய நூலில் மேற் கோளாகவும் காட்டுகிறார்.
மதுரையில் கட்சிக் காங்கிர நடைபெற்ற சமயத்தில் பி.டி ஆரும் டாக்டர் அதிகாரியும் கட்சியின் சாதாரண உறுப்பினர்கள் தாம். டிராக்ஸிய வாதிகள், துருக்கியர்கள், பயங்கரவாதிகள் என்று வசைபாடபட்ட எங்களில் சிலர் இவ்விரு தலைவர்களுக்கும் கட்சியில் அவர்களுக்கு உரிய இடம் கிடைக்க வேண்டுமென்று விரும்பினோம். அவர்கள் இருவரும் மத்தியக் குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென நாங்கள் விரும்பினோம். இதற்காகப் பிரதிநிதிகளைத் திரட்டும் வேலை என்னிடம் ஒப்படைக்கப் பட்டது டாக்டர் அதிகாரி போட்டியிட சம்மதித்தார். ஆனால் பி.டி ஆர் போட்டியிட உறுதியாக மறுத்து விட்டார். அவர் மீது மத்தியக் குழுவின் தடை இருக்கும்வரை அவர் போட்டியிடப் போவதில்லை என்று கூறிவிட்டார். பெருத்த ஆதரவோடு அவர் வெற்றி பெறும் நிலை இருந்தது. ஆனால் அவர் கட்சிக் கட்டுப்பாட்டில் இறுதியாக இருந்தார்.
மத்தியக்குழு முன் மொழிந்த பெயர் பட்டியலில் டாக்டர் அதிகாரியின் பெயர் இல்லை. ஆனால் நாங்கள் அவர் பெயரை முன் மொழிந்தோம் அவர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்
தன் மீதிருந்த தடை நீக்கப்படும் வரை பி.டி ஆர் கட்சியின் சாதாரணச் சிப்பயாக இருந்தார். அதுதான் அவரது உருக்கு போன்ற கட்டுப்பாடு
1955 ஆம் ஆண்டு மீண்டும் மகாராஷ்டிர மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் என்பது வரலாறு. `உளிக்கு பயந்தால் சிலை இல்லை அதுபோல ஒவ்வொரு வெற்றியாளனும் அதற்காக அவன்பட்ட அவமானங்களும் காயங்களும் அளவற்றது. இந்த நூல் நெடுக இத்தகைய காயங்களின் பதிவு நிறையவே உண்டு. பி. ராமமூர்த்தியும், எ. பாலசுப்பிரமணியமும், எம்.ஆர். வெங்கட்ராமனு அவர் கொள்கையில் உறுதியாக நின்றபோது அதனை கொள்கை ரீதியாக எதிர்கொள்ள திராணியற்று; அவர்களே அறுத்தும் எறிந்துவிட்ட பூணூலையும், சாதி அடையாளத்தையும் அவர்கள் மீது பூசி அசிங்கப்படுத்திய வக்கிர அரசியல் வேட்டையை எப்படி எழுதுவது. அதே சமயம் இவர்களின் அப்பழுக்கற்ற - சாதி ஆணவமற்ற - ஒடுக்கப்பட்ட மக்கள்பால் அளவற்ற அக்கறையும் கொண்ட அவர்களின் வரலாற்றை உரிமைப் போர் களங்களினூடே நூலாசிரியர் சொல்லியுள்ள பாணி நெற்றியடி எனின் தவறு அல்ல.
அதேபோல கே. ரமணி, வி.பி. சிந்தன், அனந்தநம்பியார், பி.ஆர்.பரமேஸ்வரன் போன்றவர்கள் மலையாள தேசத்திலிருந்து வந்தவர்கள், ஆயினும் தமிழக உழைப்பாளி மக்களுக்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்டவர்கள். சிண்டன் என்ற பெயரையே சிந்தன் என மாற்றியமைத்தவர் பாரதிதாசன் அல்லவா? சென்னை நகர உழைக்கும் மக்களை திரட்டியதில் முன்நின்றவர் வி.பி.சி. அல்லவா? சென்னையில் கம்யூனிஸ்ட் இயக்கம் என்ற ஒன்று இன்று இருக்கிறது என்றால் அது தோழர் பி.ஆர். பரமேஸ்வரனும், வி.பி. சிந்தனும், கே.எம். ஹரிபட்டும், பி.ஜி.கே. கிருஷ்ணனும், கே. கஜபதியும் விதைத்த விதைகளின் - உழைத்த உழைப்பின் அறுவடையே ஆகும். பி.ஆர்.பரமேஸ்வரன் வாழ்க்கை வரலாற்றில் ஒரு அத்தியாயத்துக்கு `அமைப்பு மனிதர் என என். ராமகிருஷ்ணன் தலைப்பிட்டிருப்பது தற்செயலானது அல்ல. பொருள் பொதிந்தது. நூற்றுக்கு நூறு உண்மையாகும். தோழர் ஏ. நல்லசிவன் வாழ்க்கைக் கதையிலும் இது பொருந்தும். தத்துவ விவாதத்திலும் பிரச்சனைகளை அடியாளம் வரை ஊடுருவி பரிசீலிப்பதிலும் அவர் பாணியே தனி. எளிமையின் இலக்கணம். அவர் சிறைவாழ்க்கை தலைமறைவு வாழ்க்கை என பெரும் தியாகம் செய்தவர். இதை எழுதுகிறபோதே அவருடைய கையொடிந்தது சுதந்திரப்போரில் என்று பொய் எழுதவில்லை மாறாக கிரிக்கெட் பார்க்க மரம் ஏறி கீழே விழுந்து கையை ஒடித்துக்கொண்டார் என்றே எழுதினார் என்.ராமகிருஷ்ணன்.
தொழிலாளி வர்க்கத்தை உசுப்பி எழுப்புவது மட்டுமே தலைமைப் பண்பு ஆகாது. சில நேரங்களில் தொழிலாளி வர்க்கம் தவறி தறிகெட்டு புறப்பட்டு விடுவதுமுண்டு. அப்போது கரைவுடைத்து வரும் அந்த காட்டுவெள்ளத்தை எதிர்த்து நின்று மடைமாற்றிவிடுவது அசாதாரணமானது. நூல் நெடுக அத்தகைய சாட்சிகள் உண்டு. போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும் மாணவர்களுக்கும் சென்னையில் மோதல் ஏற்பட்டபோது அதனை துணிச்சலாக எதிர்நின்ற தொழிலாளர்களை அமைதிப்படுத்திய வி.பி. சிந்தன் பணி அடடா... அடடாவே. என். ராமகிருஷ்ணன் இதனை உரிய முறையில் பதிவு செய்துள்ளார்.
அதுமட்டுமல்ல ஒருவர் வாழ்க்கை வரலாற்றை எழுதப்புகும்போது உற்சாக மூட்டும் அம்சங்கள் மட்டுமல்ல, ஊக்கத்தை கெடுக்கும் அம்சங்கள் பலவும் தெரியவரும். இப்போதுதான் எழுத்தாளர் இதய சுத்தியோடும் இயக்க அக்கறையோடும் செயல்பட வேண்டியவராக உள்ளார். எல்லா நூல்களிலும் என்.ராமகிருஷ்ணன் இதனை கறாராக பின்பற்றியுள்ளார். பி.டி. ரணதிவே வாழ்க்கை வரலாற்று நூலுக்கு முன்னுரை எழுதிய எம்.கே. பாந்தே கூறுகிறார், பி.டி.ஆருடன் நெருக்கமாக சம்பந்தப்பட்ட பலகருத்து வேறுபாடுகள் கொண்ட விபரங்களுக்குள் போக ராமகிருஷ்ணன் உணர்வுபூர்வமாக எந்த முயற்சியும் செய்யவில்லை. வாசகர்களின் தகவலுக்காக மட்டுமே அவற்றைக் குறிப்பிட்டுள்ளார். (ஏற்கெனவே இதைக் கூறியுள்ளேன்)
ஆம், அங்கேதான் என். ராமகிருஷ்ணன் நிமிர்ந்து நிற்கிறார். மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு நிற்கிறார். கடந்த காலத்தைப் பற்றிய அறிவு-தெளிவு-உணர்வு இவைதான் வரலாறு என பேராசிரியர் கருணானந்தன் கூறியது. இவர் எழுத்தில் உண்மையாகியுள்ளது. எந்தச் சூழலிலும் தனது கருத்தை யார்மீதும் ஏற்றிச்சொல்ல என். ராமகிருஷ்ணன் முயலவே இல்லை. பல ஆயிரம் மைல்கள் பயணம் செய்து பலநூறுபேர்களை பேட்டிகண்டு, நூற்றுக்கணக்கான நூல்களை ஏடுகளைப் படித்துச் சலித்து சேகரித்த விபரங்களை ஒப்பனையின்றி - கற்பனைச் சரடு இன்றி - எளிமையாய் கோர்வையாய் தந்ததில்தான் என். ராமகிருஷ்ணன் வெற்றியுள்ளது.
எம்.கே. பாந்தே வரலாறு சிஐடியு வரலாற்றோடும் அனந்தநம்பியார் வரலாறு ரயில்வே தொழிலாளர் போராட்டத்துடனும் இணைத்தே தரப்பட்டுள்ளது. ஏ. நல்லசிவன் வாழ்க்கை தமிழக கம்யூனிஸ்ட் கட்சி - குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் வரலாற்றோடு பின்னிப்பிணைந்தது.
`அந்தமான் தீவுச்சிறை நூல் அற்புதமானது. சிறைத்தண்டனை தியாகிகள் மனதை உருக்குலைக்கவில்லை. மாறாக புடம்போட்டது. புத்தகம் அவர்களின் போர்வாளானது. கல்வி அவர்களுக்கு கேடயமானதும் ஆச்சரியமான உண்மை. சமரசங்களுக்கு இடமற்ற போராட்ட குணம், சிறைக்குள்ளும் போராட்டங்கள், படிப்பு, விவாத மேடைகள், மாநாடுகள், கையெழுத்துப் பத்திரிகைகள், தாங்கள் சிறையில் உழைத்துப்பெற்ற சம்பளத்தில் வீரர்கள்வாங்கிய (70 வருடங்களுக்கு முன்பு) தூரகிழக்கின் பிரச்சனைகள், பால்கன் நாடுகள், சோஷலிசம் எதற்காக? என்று நீளும் புத்தகங்களின் பட்டியல் - வெளிநாடுகளுக்கு சந்தா அனுப்பி படித்த நியூயார்க் டைம்ஸ், நியூ ஸ்டேட் மென், லண்டன் டைம்ஸ் என்று நீளும் இதழ்களின் பட்டியல் - இவையெல்லாம் தமது மந்தைத்தனமுள்ள முகத்தில் ஓங்கி அறைகின்றன என்கிறார் வாசல் வெளியீட்டகத்தைச் சார்ந்த ஸ்ரீரசா நூலைப் படித்தபின் அது முழுக்க முழுக்க மெய் என்பதை உணர முடியும்.
இங்கு பட்டியலில் உள்ள 14 தலைவர்களின் வாழ்க்கை சுருக்கத்தையோ - உணர்ச்சி பதிவுகளையோ எடுத்துச்சொல்வது இங்கு என் வேலை அல்ல. அந்நூல்களை படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். இந்நூல்களை என். ராமகிருஷ்ணன் எப்படி நேர்மையாக தந்துள்ளார் என்பதுதான் நம்முன் உள்ள பிரதான அம்சம்.
சமீபத்தில் ஒரு பேராசிரியர் எழுதிய ஒரு கம்யூனிஸ்ட் தலைவனின் வாழ்க்கை வரலாற்றைப் புரட்ட நேர்ந்தது. அப்போது என். ராமகிருஷ்ணனின் உழைப்பும் நேர்மையும் கறார் அளவுகோலும் பளிச்சென துலக்கமாயின. உதாரணமாக விடுதலைக்கு முன் எட்டு ஆண்டுகள் விடுதலைக்குப் பின் எட்டு ஆண்டுகள் என பேராசிரியர் அத்தலைவரின் சிறைவாழ்வை குறிப்பிட்டுவிட்டு, அடுத்த வரியிலேயே பல்வேறு கட்டங்களாக மொத்தம் இருபது ஆண்டுகளுக்கு மேலே என தொடர்கிறார். கணக்கு இடிக்கிறது. உண்மையின் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் சிறைப்பட்ட அவரின் தியாகம் கூட இவரது பொறுப்பற்ற எழுத்தால் நாளை ஆய்வாளர் சந்தேகப்படுவதாக ஆகிவிடும்.
ஆனால் ராமகிருஷ்ணன் நூல்கள் பல செய்திகள் கட்சி வரலாற்றிலும் - மாவட்ட கட்சி வரலாற்றிலும் ஒன்றுக்கும் மேற்பட்டோர் வாழ்க்கை வரலாறுகளிலும் திரும்பத் திரும்ப வருவது தவிர்க்க முடியாது. சில இடங்களில் சுருக்கமாகவும் சில இடங்களில் விரிவாகவும் வரும். ஆனால் அவற்றுக்கு இடையே தகவல் முரண்பாடு இருக்காது. இதனை பலமுறை நான் ஒப்பிட்டுப்பார்த்துள்ளேன். ஆர். உமாநாத் வாழ்க்கை வரலாற்றை எழுதும்போது இந்த ஒப்பிட்டுப்பார்க்கும் தேவை எனக்கு ஏற்பட்டது. அதன் பின்னரும் பல நூல்கள் எழுதும்போது இவ்வாறு ஒப்பிட்டுப் பார்த்துள்ளேன்.
வார்த்தை ஜோடனைகளுக்காக கூட்டவோ குறைக்கவோ செய்யாமல், தகவல்களை உள்ளது உள்ளபடி தருவதும், அதனை தகவல்கள் சிலரின் வாய்மொழிக் கூற்றாகவோ அல்லது நூல் ஆதாரங்களின் அடிப்படையிலோ அமைந்திருப்பதும் அவரது எழுத்தின் சிறப்பு அம்சங்களாகும்.
உன்னுடைய வாழ்க்கையை விவரித்த பின்னரும்
பயன்படுத்துவதற்கு இன்னும் ஏராளமான
வார்த்தைகள் உள்ளன என்றால்,
சொல்ல வேண்டியதை எல்லாம்
சொல்லிவிட்டோம் என்பதல்ல, ஆனால்
உன்னைக் குறித்து
முழுமையாகச் சொல்வதற்கு
நாங்கள் சக்தியற்றவர்களாக இருக்கிறோம்
என்ற காரணத்தால்தான் என்கிற மகாகவி காளிதாஸ் கவிதை வரிகள்
பி.ஆர். நூலின் முதல் பக்கத்தில் இடம் பெறச் செய்திருப்பார். அதே கவிதையை இவருக்கு அப்போது நாம் சமர்ப்பிக்கலாம். அது வெறும் புகழ்ச்சி ஆகாது, உண்மையாகும்.
தமிழக கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் குறித்து அவர் நிறையவே சொல்லியிருப்பினும் சிங்காரவேலர் குறித்து இவர் தனியாக எழுதவில்லை.தோழர் ஏ.கே. கோபாலன், சுந்தரய்யா போன்றோர் வாழ்க்கை சுயவரலாறு வெளிவந்துவிட்டதால் இவர் எழுதாமல் தவிர்த்திருக்கக்கூடும்; அதே சமயம் பிரமோத் தாஸ்குப்தா, பசவபுன்னையா போன்றோர்க் பற்றிய பதிவும் சென்னை, தஞ்சை மாவட்ட(இன்று அதுவே பலமாவட்டங்களாகிவிட்டன) வரலாறுகள் எழுதப்படுவதும் அவசியம். அவரிடம் உரிமையோடு இவற்றை எதிர்பார்க்கிறேன்.
இறுதியாக மேல் கூறியவற்றையும் எழுதியபின், இவரது நூல்களை வரிசைக்கிரமமாகத் தொகுத்து. கூறியதை கூறாமல் எடிட் செய்து நான்கைந்து பாகங்களைக் கொண்ட தொகுப்பாக வெளியிடுவது மிகமிக அவசியம். நாளை நிச்சயம் உழைக்கும் மக்கள் ஆட்சி செய்வார்கள். அப்போது வரலாற்றை உண்மையாக எழுத முயற்சிப்பார்கள். அதற்கு ஆவணமாக இத்தொகுப்புகள் அமையும். தமிழக உழைக்கும் மக்கள் போராட்ட வரலாற்றை நேர்மையாக எழுத முயலும் எந்தத் கொம்பனும் இவரது நூல்களை மேற்கோள் காட்டாமல், இதிலிருந்து விபரங்களை எடுத்தாளாமல் எழுதவே இயலாது. ஏனெனில் இது அடிப்படை ஆதாரமாக ஆவணமாக அத்தாட்சியாக அடிப்படையாக உள்ளது.
என். ராமகிருஷ்ணனின் எழுத்துப்பணிக்கு என் தலைதாழ்ந்த வணக்கங்கள். உங்கள் உழைப்பும் நேர்மையும் எளிமையும் இனி யாருக்கும் வராது. உங்கள் முன் நாங்கள் மண்டியிடுகிறோம். வணங்குகிறோம். எங்களின் வேர்களை எங்களுக்குக் காட்டியதற்காக....
டால்ஸ்டாயின் கவித்துவமான வரிகளோடு என் உரையை நிறைவு செய்ய விழைகிறேன்.


ஒரு தேனீ பூவின் மேல் அமரும்
வேளையில் ஒரு குழந்தையை கொட்டியது
தேனீயைக் கண்டு அஞ்சிய அக்குழந்தை
மக்களைக் கொட்டுவதற்காகவே தேனீக்கள்
வாழ்கின்றன என்றது.

தேனீ பூவிதழ்களை ருசிப்பதைப்பார்த்த ஒரு கவிஞன்
பூக்களின் நறுமணத்தை நுகர்வதற்காகவே
தேனீக்கள் வாழ்கின்றன என்றான்

மற்றொரு தேனி வளர்ப்பவன்
தேன்கூடுகளின் உயிரியலை
நெருக்கமாகப் பார்த்து
தேனீ மகரந்தத் தூள்களை எடுத்துக் குட்டித் தேனீகளுக்கு உணவு அளிப்பதற்கும்
ராணித் தேனீயை மகிழ் விப்பதற்கும் - அவை தனது
வம்சத்தை விருத்தி செய்வதற்காகவும்
வாழ்கின்றன என்றான்.

தேனீ ஆண்மலரின் மகரந்தத்தை
பெண்மை உறுப்புக்கு
எடுத்துப் பறந்து செல்வதைப் பார்த்த
ஒரு தாவரவியல் அறிஞர்
அது அம்மலரை
செழிப்பாக்குவதற்குத்தான் செல்கிறது;
அதுவே அதன் இருத்தலுக்கான அம்சம் என்றான்

தாவரங்களின் குடிபெயர்வை
பார்த்த இன்னொருவன்
தேனீக்கள்
இந்த குடிபெயர்வுக்கு
உதவுவதாக கூறினான்
தேனியின் வாழ்வின் அர்த்தம் என்றான்
ஆனால்

தேனீயின் தேடல்
முதலில் கூறியதிலோ
இரண்டாவது கூறியதிலோ
அல்லது மனித அறிவில்
பகுத்துப்பார்க்க முடிகிற பலவற்றாலோ
முடிந்த முடிவாவதில்லை

தேனீயின் தேடல் பற்றிய
கண்டுபிடிப்புகள் மனித அறிவு வளர வளர
அதன் இருத்தலுக்கான அர்த்தம்
மேலும் மேலும் நம்முடைய புரிதலுக்கும்
அப்பால் இட்டுச் செல்கிறது

மனிதன் பார்க்க முடிவதெல்லாம்
தேனீயின் வாழ்வியலோடு
பிற உயிர்களின் உறவை மட்டும்தான்
எனவே அதுபோலவேதான்
வரலாற்றுக் கதாபாத்திரங்களின்
இருத்தலும் தேசத்தின் இருத்தலும்



(வரலாறு படைத்த என்.ராமகிருஷ்ணன் நூல்களை முன்வைத்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் தென்சென்னை மாவட்டக் குழு சார்பில் அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற்ற படைப்பரங்கில் சு.பொ.அகத்தியலிங்கம் வாசித்த கட்டுரை)

வரலாறு படைத்த என். ராமகிருஷ்ணன் நூல்களில் வரலாற்றின் நாயகர்கள்

Posted by அகத்தீ



வரலாற்றைப் படிக்க வேண்டாம்; வரலாற்றைப் படைப்போம் என ஒருமுறை முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மாணவர்களிடையே பேசினார். இதனை அறிஞர் பெருமக்கள் கண்டித்தனர். வரலாற்றை முறையாக படிக்காமல் - உள்வாங்காமல் புதிய வரலாற்றைப் படைக்க முடியாது என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.
ஒவ்வொருவருக்கும், ஒவ்வொன்றிற்கும் கடந்த காலம் என்ற ஒன்று உண்டு. கடந்த காலம் என்று இல்லாத ஒன்று இவ்வுலகில் உண்டா? தாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கடந்த காலம் என்பது ஓர் உண்மைதான். நிகழ்காலத்தின் மூலத்தை கடந்த காலத்திலும், விளைவுகளை எதிர்காலத்திலும் தேடுவது தவிர்க்க முடியாதது. நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் சீர்படுத்த விரும்புவோருக்கும், சீர்கேடுகளைத் தவிர்க்க விரும்புவோருக்கும், கடந்த காலத்தைப் பற்றிய அறிவும், புரிதலும், உணர்வும் பயனுள்ளவையாக அமையும். அத்தகைய கடந்தகால அறிவு-தெளிவு-உணர்வு இவற்றைத்தான் வரலாறு என்று குறிப்பிட வேண்டும் என்கிறார் பேராசிரியர் அ. கருணானந்தன்.
நாம் இன்று பள்ளிகளில் படிக்கும் வரலாறு எத்தன்மையது? இதுகாறும் உருவாக்கப்பட்ட, தரப்பட்ட வரலாறுகள் ஆதிக்க சக்திகளின் வரலாறுகளாகவே, ஆதிக்க சக்திகளைப் பெருமைப்படுத்தும் வரலாறுகளாகவே இருந்திருக்கின்றன. ஆதிக்க சக்திகளின் கருவியாகவே வரலாறு பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும் என்று கருணானந்தன் மேலும் கூறுகிறார்:
தற்கால இந்திய வரலாற்று அணுகுமுறை ஆங்கில ஆதிக்கத்தின் போது இருந்த அணுகுமுறையிலிருந்து பெரிய அளவில் மாறவில்லை. இரண்டிலுமே அரசியல் கிளர்ச்சிகள், ஆட்சி மாற்ற கிளர்ச்சிகள், சமூக மாற்ற கிளர்ச்சிகள், விவசாயிகள் கிளர்ச்சிகள், தொழிலாளர் கிளர்ச்சிகள் போன்றவற்றிற்கு இடம் அளிக்கப்படுவதில்லை. இராஜாராம் மோகன்ராய், வித்யாசாகர், இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், தயானந்த சரஸ்வதி, அலிகார் இயக்கம் ஆகியோர்கள் இடம்பெறும் வரலாற்றில் இராமலிங்க வள்ளலார், மகாத்மா பூலே, சாகுமகராஜ், நாராயணகுரு, இராமசாமிபெரியார், அம்பேத்கார் போன்றவர்கள் ஏன் இடம் பெறுவதில்லை? தெலுங்கானா கிளர்ச்சி, புன்னப்புரா, வயலார், கிளர்ச்சி, கோவை மில் தொழிலாளர் கிளர்ச்சி போன்றவை மறைக்கப்படுவது ஏன்?
வரலாறு கொடுக்கப்படுவதற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது - வரலாறு திரிக்கப்படுவதற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது-வரலாறு மறைக்கப்படுவதற்கும் நோக்கம் இருக்கிறது என்கிறார் கருணானந்தன்.
இங்கே நாம் பேசிக்கொண்டிருக்கிற வரலாறும் சரி, வரலாற்று நாயகர்களும் சரி, மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் ஒரு பகுதியே எனில் மிகையல்ல.
வரலாற்று நாயகர்கள் என இங்கே நாம் குறிப்பிடுவது; கம்யூனிஸ்ட் இயக்கத்தை - உழைப்பாளி மக்கள் இயக்கத்தை இந்திய தேசத்தில் கட்டி எழுப்ப முன்னத்தி ஏர் ஓட்டியவர்கள் - தமிழகத்தில் இப்பணியில் முதல் சாலை போட்டவர்கள் பற்றிய வரலாறே ஆகும்.
இங்கே எனக்கு பரிசீலனைக்காக ஒதுக்கப்பட்ட நூல்கள் 15 ஆகும்.
1) முசாபர் அகமது
2) இ.எம்.எஸ்.
3) பி.டி. ரணதிவே
4) ஹர்கிஷன் சிங் சுர்ஜித்
5) ஜோதிபாசு
6) பி. ராமமூர்த்தி
7) எ. பாலசுப்பிரமணியம்
8) ஏ. நல்லசிவன்
9) எம். ஆர். வெங்கட்ராமன்
10) கே. ரமணி
11) பி.ஆர்.பரமேஸ்வரன்
12) வி.பி. சிந்தன்
13) கே. அனந்தன் நம்பியார்
14) எம்.கே.பாந்தே
15) அந்தமான் தீவுச்சிறை
இதில் முதல் 13 பேரும் இப்போது உயிரோடு இல்லை; எம்.கே. பாந்தே நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்; அந்தமான் தீவுச் சிறை ஓராயிரம் தியாகக்கதை சொல்லும் குறிப்புகள்.
இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் கருக்கொண்ட போதே சதி வழக்குகளை எதிர்கொண்டது. இன்னும் சொல்லப்போனால் கருக்கொலை முயற்சி, சிசுக்கொலை முயற்சி இவற்றிற்கு தப்பி அதன் விளைவுகளோடு வளர்ந்த குழந்தையைப் போன்றதுதான் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆரம்பகால வரலாறு. அப்படியெனில் அந்த வரலாற்று நாயகர்களின் வாழ்க்கை எத்தகையதாக இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நெருப்பாற்றில் எதிர் நீச்சல் போட்டு எஃகாக உருமாறியவர்கள் என செக்கோஸ்லேவேகிய மாவீரன் ஜூலியஸ் பூசிக் கூறுவது மிகையல்ல என்பதை இந்நூல்கள் நிறுவுகின்றன.
தாஷ்கண்ட் - பெஷாவர் சதிவழக்குகள், கான்பூர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு என மூன்று முக்கிய சதிவழக்குகளை எதிர்கொண்டுதான் கம்யூனிஸ்ட் இயக்கம் இம்மண்ணில் காலூன்றியது. முசாபர் அகமது வாழக்கை வரலாற்று நூலில் இதன் வேர்களும் கூறுகளும் அடையாளம் காட்டப்பட்டுள்ளன.
சரிதை என்பதும் சுயசரிதை என்பதும் அது எவரை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதோ அவர் வாழ்ந்த காலகட்டத்தை; கடந்து வந்த பாதையை உற்றுநோக்கி அதிலிருந்து பயன்தரும் படிப்பினையைப் பெற்றுக்கொள்வதும் என்பதாகும். ஒரு சரிதையின் உருவாக்கத்திற்கு எத்தகைய உழைப்பும் ஆக்கத்திறனும் தேவைப்படுகிறது எத்தனை வருடங்கள் செலவிட வேண்டியுள்ளது என்பதை நூலாசிரியரின் உரையில் நன்குகாணலாம். இவ்வாறு தோழர் பி. ராமமூர்த்தி வாழ்க்கை வரலாற்று நூலுக்கு பதிப்புரை எழுதியுஎள்ள எம். பாலாஜி கூறுவது வெறும் வார்த்தைகளல்ல. நூற்றுக்கு நூறு உண்மை. இந்த 15 நூல்களும் ஏன் அவரின் மொத்த நூல்களும் இதன் சாட்சியே ஆகும்.
இதில் ஓர் இந்திய கம்யூனிஸ்டின் நினைவலைகள் எனும் இஎம்எஸ் வாழ்க்கை வரலாறு என். ராமகிருஷ்ணனின் ஆக்கம் அல்ல. மொழியாக்கம் செய்தவர்தாம் என். ராமகிருஷ்ணன். வேதங்களிலிருந்து மார்க்சியத்தை நோக்கி வளர்ந்த இஎம்எஸ் குறித்து இவர் தனியாகவும் நூல் எழுதியுள்ளார். இவரின் மொழியாக்கத் திறனுக்கு இந்நூல் சான்று பகர்கின்றது. இந்நூலின் ஆங்கிலப் பதிப்பிற்கான முன்னுரையில் இஎம்எஸ் எழுதுகிறார்:
ஒரு கம்யூனிஸ்ட் ஆவதற்காகதான் பிறந்து வளர்ந்த சமூக அரசியல் சூழ்நிலையை எதிர்த்துப்போராட வேண்டியிருந்த மனிதனின் கதை இது; பிறகு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தபின் முதலில் ஒன்றாயிருந்த கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் அதன்பின் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சிக்குள்ளும் நடந்த உட்கட்சிப் போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டியிருந்த மனிதனின் கதை இது
இந்த கணிப்பு அவரது, அதாவது இஎம்எஸ்ஸின் வாழ்க்கைக்கானது மட்டுமல்ல, ஏதாவது ஒரு வகையில் எல்லா தலைவர்கள் வாழ்க்கையிலும் இதனைக் காணமுடிகிறது. என். ராமகிருஷ்ணன் எழுத்தின் கூர்மை இதனை மையப்படுத்தியே தலைவர்கள் வாழ்வை சித்தரிப்பதிலும் செயல்பட்டிருப்பதை உறுதியாகக் கூறமுடியும்.
தோழர் பி. ராமமூர்த்தியின் வாழ்க்கை வரலாறு என்பது என். ராமகிருஷ்ணன் படைப்பிலே முத்திரை பதிக்கும் முதல்வரிசை நூல்களில் இடம் பெறும். இதனை அவரே ஒப்புக்கொள்வார்.
தன் வாழ்க்கை வரலாற்றை சுதந்திரப்போராட்ட, கம்யூனிஸ்ட் இயக்க, தொழிற்சங்க இயக்கப் பின்னணியோடு இணைத்து எழுத வேண்டும் என்றும், வெறும் தனிமனிதனின் வரலாறாக எழுதக்கூடாது என்றும் கூறினார். நான் அதற்கு ஒப்புக்கொண்டேன் என தோழர் பி. ராமமூர்த்தி விதித்த நிபந்தனைகளை ஒப்புக்கொண்டு பெருமளவு அதற்கு நியாயமும் வழங்கி இருக்கிறார்.
ஆயினும் இதே அளவுகோல் பிறவாழ்க்கை வரலாற்று நூல்களுக்கு முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டுள்ளதாக கூற இயலாது. அப்படி எதிர்பார்க்கவும் கூடாது. ஏனெனில் ஒவ்வொருவர் வாழ்க்கை வரலாற்றை எழுதும்போது வரலாற்றுச் சூழலை விவரிக்கத் துவங்கினால் பக்கங்கள் பெருத்துவிடும். கூறியது கூறல் மீண்டும் மீண்டும் நிகழும், ஆயினும் தேவையானவற்றை தேவைப்படும் இடத்தில் கூறவும் இவர் தவறவில்லை. இந்த நூல்களை எல்லாம் இணைத்துப் படிக்கும்பொழுது அன்றைய காலகட்டத்தின் அரசியல் சமூக பொருளாதார வரலாறும் இதில் இவர்கள் பங்களிப்பும் நன்கு புலனாகும்.
எந்த தனிமனிதரும் வரலாற்றின் படைப்புதான். அதே சமயம் அந்த வரலாற்றை முன்நகர்த்துவதில் அவரின் தனித்த ஆளுமைக்கும் முக்கிய பங்கு உண்டு. வள்ளுவர் காலத்தில் காரல் மார்க்ஸ் பிறந்திருந்தால் அவர் நிச்சயம் மூலதனம் எழுதியிருக்கமாட்டார், திருக்குறள் போல்தான் அறநூல், வாழ்வியல் நூல் படைத்திருப்பார். ஒரு வேளை வள்ளுவன் மார்க்ஸ் பிறந்த காலத்தில் இருந்திருந்தால் சமூக அறிவியல் நோக்கில் தத்துவ நூல் எழுதியிருப்பார். இருவருமே அவரவர் வாழ்ந்த காலத்தின் மாபெரும் கொடை; அதேபோல அவர்களின் ஆளுமை அந்தந்த காலத்தை முன்நகர்த்தும் நெம்புகோலாயின எனில் தவறல்ல.
இதை ஏன் சொல்லுகிறேன் எனில் இந்த மாபெரும் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்துவிட்டு அத்தகைய எளிமை, அத்தகைய அர்ப்பணிப்பு, அத்தகைய தியாகம் இன்றைய கம்யூனிஸ்ட்டுகளிடம் இல்லை என்று பலர் கூறுகின்றனர். வெளிப்பார்வைக்கு அது உண்மையெனினும் அது முழு உண்மையல்ல. அன்றைய காலகட்டத்தின் நெருக்குதல்களுக்கிடையே ஒடுக்குமுறைகளுக்கு இடையே வாழ்ந்த அவர்களுக்கு முன் நீண்டு கிடந்தது அத்தகைய கரடு முரடான பாதையே அதில் பயணிக்கிறபோது ஏற்பட்ட சிரமங்களும், அதைத் துணிந்து சீர்செய்து வழிஅமைத்த மனவுறுதியும் நம்மை வியக்கவைக்கும் அந்த பாதையில் நடைபோடும். மற்றவர்கள் அடுத்த கட்ட முன்னேற்றம் காணமுயற்சிக்கின்றனர். இவர்களின் வாழ்வும் பணியும் அதற்கொப்பவே அமையும்.
ஜோதிபாசுவின் வாழ்க்கை பாதை மேற்குவங்கத்தில் இடதுசாரிகள் பெற்றுவரும் வெற்றியின் பின்னால் உள்ள இரத்தத்தையும் வியர்வையையும் நமக்கு விளங்கவைக்கும்; சுர்ஜித்தின் வாழ்க்கைப் பாதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் செல்லும் திசை வழியின் அவசியத்தை; அதன் பரிணாமத்தை அதற்காக நடத்திய உள்கட்சி போராட்டத்தை படம் பிடிக்கும்.
இ.எம்.எஸ்., பி. ராமமூர்த்தி உட்பட மூத்த தோழர்களின் வாழ்க்கை வரலாறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறும் பிரிக்க முடியாது. அதே சமயம் வெறும் கட்சி வாழ்க்கை மட்டுமே தனிமனித வாழ்வு ஆகாது அல்லவா?
இ.எம்.எஸ். நூலுக்கு அணிந்துரை வழங்கிய ஏ. நல்லசிவன் கூறுவார், ஒரு கம்யூனிஸ்ட் தனது குடும்பத்தினருடன் கொண்டுள்ள உறவும் பாசமும் அரசியல் வாழ்வில் அவன் அடையும் கடும் துன்பங்களால் பல நேரங்களில் பாதிக்கப்படுவதும், அதனை உறுதியுடன் சமாளிப்பது மட்டுமின்றி பாசமிக்க குடும்பத்தினரை எப்படி அணுக வேண்டும் என்பதைனையும் விளக்குகிற பகுதியாகும்.
இதேபோன்ற கூறுகள் மற்றெல்லா நூல்களிலும் சுட்டிக்காட்ட என். ராமகிருஷ்ணன் தவறவில்லை. பி. ராமமூர்த்தி தன்தாயின் மனம் புண்படக்கூடாது என்பதற்காக தனது தாயார் மரணம் வரை திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்தது; மரணப் படுக்கையிலிருந்த தன் மனைவி சாராதாவை சந்திக்க தலைமறைவாய் இருந்த எம்.ஆர். வெங்கட்ராமன் சென்றதும், ..நீங்கள் ஏற்றுக்கொண்ட கொள்கைப்படியே நடந்துகொள்ளுங்கள், என்னைப் பற்றி கவலைப்படாதீர்கள்...சீக்கிரம் தப்பித்துவிடுங்கள்... என மனைவி கேட்டுக்கொண்டதும், என ஒவ்வொரு வரலாற்றிலும் பாசப்போராட்டங்கள் சிலவற்றை என். ராமகிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ள பாங்கு தனித்துவம் ஆனது. கம்யூனிஸ்டுகள் காதலும் பாசமும் இல்லாத இரும்பு இதயம் படைத்தவர்கள் அல்ல; உண்மையான காதலும் ஊற்றெடுக்கும் பாசமும் அவர்களின் தனித்துவம். ஆயினும் அரசியல் புறச்சூழலால் அவர்களும் அவர்களோடு சேர்ந்து அவர்கள் குடும்பமும் பட்ட சிரமங்கள் அளவற்றது. என். ராமகிருஷ்ணன் அந்த வாழ்வுக்கு உரிய நியாயம் அனைத்து நூல்களிலும் வழங்கியுள்ளார்.
தோழர் எ. பாலசுப்பிரமணியம், எம்.ஆர். வெங்கட்ராமன், பி. ராமமூர்த்தி என ஓரளவு வசதியும் வாய்ப்பும் படைத்த மத்திய தர வர்க்கத்திலிருந்து அதுவும் உயர் சாதியிலிருந்து வந்தவர்கள் சந்தித்த பிரச்சனைகள் தனித்துவமானது. சுயசாதி மறுப்பும் பூணூலை அறுத்தெறிந்து சனாதன தளை உடைத்து அடித்தட்டு மக்களோடு தங்களை ஐக்கியப்படுத்திக்கொள்வதும் மிகப்பெரிய அர்ப்பணிப்பாகும். இவர்கள் வாழ்க்கை வரலாற்று நூல் நெடுக இதன் அழுத்தமான சுவடுகளை என். ராமகிருஷ்ணன் பதிவு செய்துள்ளார். தோழர் ஏ. பாலசுப்பிரமணியம் திண்டுக்கல்லில் தாழ்த்தப்பட்ட மக்களை, தோல் பதனிடும் தொழிலாளர்களை அணிதிரட்ட அவர்களோடு இணைந்து போரிட்டது தனிக்காவியமாகும். வர்க்கப் போராட்டமும் சாதி எதிர்ப்பு போராட்டமும் இணைந்த அந்த போராட்ட களம் புதிய படிப்பினைதரும். அதேபோல பூதிப்புரம் என்ற இடத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் சுடுகாட்டுப் பாதையை மறுத்து ஆதிக்க சாதியினர் கட்டிய சுவரை இடித்துத் தகர்த்தும், அதற்கு மன்னிப்பு கேட்டால் மட்டுமே வாக்களிப்போம் என்ற மேல்சாதி நிர்பந்தத்திற்கு பணியமறுத்து அந்த சிறு அளவு வாக்கால் தோல்வியை சந்தோஷமாக ஏற்றதும் சாதாரணமானதா?
இவர்கள் வாழ்க்கை இப்படியெனில் தோழர் கே. ரமணியின் வாழ்க்கை ரொம்பவும் வித்தியாசமானது. வறுமையை சுவைத்த வாழ்க்கை கடைக்கோடியிலிருந்து போராடிப் போராடி அங்குலம் அங்குலமாக முன்னேறிய ஒரு ஏழை பஞ்சாலைத் தொழிலாளியின் புலம்பெயர்ந்த தொழிலாளியின் சோகக் கதையாகும். பி.ஆர். பரமேஸ்வரன், கே.எம். ஹரிபட், அனந்தநம்பியார் போன்றோர் வாழ்வுகளும் பிழைப்புத்தேடி புலம் பெயர்ந்த மனிதர்களின் போராட்ட வாழ்வின் கதையன்றோ? பி.எஸ்.தனுஷ்கோடியின் வாழ்வு தமிழக சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்ட எழுச்சியின் வரலாறாகும், ரமணியின் கதை கோவை மாவட்ட தொழிற்சங்க வரலாறு எனினும் மிகையல்ல, அதோடு மட்டுமல்ல தன்னம்பிக்கை சுயமுயற்சி இவைபற்றியெல்லாம் இப்போது வெளிவரும் ஆன்மீக நெடிமிக்க சுய முன்னேற்ற நூல்கள் தராத நம்பிக்கையை போராட்ட உணர்வை வைராக்கியத்தை இரத்தத்தோடு கலக்கச் செய்யும் வாழ்க்கை வரலாறு ரமணியுடையது. அதனை அந்த வாழ்க்கைப் போராட்ட வலியோடு என். ராமகிருஷ்ணன் பதிவு செய்துள்ளார். ஒரு வகையில் தற்போது அவரது வாழ்க்கைப் போராட்டமும் அத்தகையதுதானே!
ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் தனியான வார்ப்படத்தில் வார்க்கப்பட்டவன் என்றார் தோழர் ஸ்டாலின். ஆனால் தனிவார்ப்படமாக அவர்கள்பட்ட அடியும் பயணித்து கடந்த பாதையும் - அப்பப்பா நம்மை மலைக்கவைக்கிறது. ஆழமான தத்துவ மோதல்களும் உள்கட்சிப் போராட்டங்களும் நடைபெற்ற காலத்தில் கொண்ட கொள்கைக்காக அவமதிப்புகளையும், கட்சியின் தண்டனைகளையும் ஏற்று செயல்பட்ட தலைவர்கள் வாழ்க்கை வரலாற்று படிப்பினைகள் என்றும் பயன்தரும். தோழர் பி.டி. ரணதிவே வாழ்க்கை அதற்கு மிகச்சிறந்த உதாரணமாகும். தோழர் பி.டி. ரணதிவே சந்தித்த அவமானங்களைப்போல் வெறொருவர் சந்தித்திருக்கக் கூடுமோ என ஐயமே எழுகிறது. அதனை பி.டி. ஆர் எதிர் கொண்ட விதம்தான் இன்றைக்கும் வழிகாட்டியாக திகழ்கிறது.
இந்தியாவில் கம்யூனிட் கட்சியை கட்டி வளர்த்தவர்கள் வரிசையில் பி.டி ஆருக்கு தனி இடம் உண்டு. சிறந்த அறிவாளி. விடுதலைக்கு பின் கட்சிக்குள் ஏற்பட்ட அதி தீவிரவாத போக்குகள் கட்சிக்கு பெரும் சேதத்தை உருவாக்கியது. அதனால் கட்சிக்குள் கருத்து மோதல் தீவிரமானது. பி.டி. ஆர் பாதைக்கு எதிரானவர்கள் கைவலுப்பட்டது. முடிவெடுக்க முடியாமல் திணறல் ஏற்பட்டபோது அஜய் கோஷ், எ.ஏ டாங்கே, சி. ராஜேவர்ராவ், பசவபுன்னையா ஆகிய நால்வர் கொண்ட தூது குழு ரஷ்யா சென்று டாலினிடம் விவாதித்தது. டாலின் இந்திய கம்யூனிட் கட்சி மேற்கொண்ட இடது தீவிரவாத தவறுகளை சுட்டிக் காட்டியதுடன்; பி.டி ஆர் செயலாற்றல் மிக்க, திறமைமிக்க கம்யூனிட்- கட்சியிடம் இழப்பதற்கு திறமை மிக்க ஊழியர்கள் மிகக் குறைவு, எனவே அவரை இழந்து விடவேண்டாம் மத்தியக் குழுவில் சேர்க்க வேண்டாம் ஆனால் அவருடைய திறமைக்கும் தகுதிக்கும் ஏற்ப வேறு பொறுப்புகள் வழங்க வேண்டும் என்று யோசனை கூறினார்.
ஆயினும், அன்று கட்சியில் நிலவிய சூழ்நிலை வேறுமாதிரியாகவே இருந்தது. கட்சியின் மத்தியக்குழு விசாரணைக்கு பின் ரணதிவேயை இரண்டு ஆண்டுகள் கட்சியிலிருந்து நீக்கி வைக்கப்பட்டார். இதை விசுவாசமிக்க கம்யூனிடாக பி.டி ஆர் ஏற்றுக் கொண்டார்.
இப்பொழுது பல தோழர்களுக்கு அவர் வேண்டாத மனிதராக காணப்பட்டார். பலர் அவரை சந்தித்துப் பேசுவதையே தவிர்த்தனர். என்கிறார் அவர். வரலாற்றை எழுதிய என். ராமகிருஷ்ணன் அவரது மனைவி விமலா ரணதிவே வார்த்தையில் கூறுவதானால். 1951 முதல் 1955 வரைப்பட்ட கால கட்டமானது பி.டி ஆருக்கு மிகவும் சோதனை மிக்க காலகட்டமாகும். டாங்கேயும் அவரது ஆதரவாளர்களும் அவரை மிகவும் மட்டகரமாக நடத்தினார்கள்.
சாதியிலிருந்து நீக்கப்பட்டவரைப்போல் நடத்தினார்கள் என்று விமலா ரணதிவே கூறுவதிலிருந்து அந்த மன உழைச்சலைப் புரிந்து கொள்ள முடியும். பலமாதங்கள் கட்சி வழங்கும் ஊதியம் கூட வழங்கப்படவில்லை விமலா வேலைக்குப் போய் ஈட்டும் சொற்ப வருவாயும் லீலா சுந்தரய்யா அவ்வப்போது அனுப்பும் சிறு உதவியும் தான் வயிற்றுப்பாட்டுக்கானது.தனது சகோதரி அகல்யா ரங்கனேக்கள் வீட்டில் ஒரு அறையில் ஒட்டுக் குடித்தனமாக வாழ்ந்தார். மனைவி வேலைக்கு போனதும்; தனது மகன் உதய் தான் அவரது ஒரே பற்றுக்கோடு அவனை பராமரிப்பதிலும் புத்தகங்கள் படிப்பதிலும் நேரத்தை செலவிட்டார்.
அவருக்கு கட்சி வேலை எதுவும் தரப்படவில்லை. கட்சி அலுவலக வராண்டாவில் உட்கார்ந்து படிப்பதும் தனக்கு தானே சதுரங்கம் ஆடுவதுமாக கழித்தார். கட்சி அவருக்கு வேலைதரவில்லை எனினும் கட்சி அலுவலகம் செல்வதை நிறுத்தவில்லை.
இந்தச் சூழலில் 1953 ஆம் ஆண்டு கட்சித் தலைமைக்கு வரவாய்ப்பிருந்தும் அதனை பி.டி ஆர் நிராகரித்தார். இதுகுறித்து இந்திய கம்யூனிட் இயக்க முக்கியத் தலைவர்களில் ஒருவரான என். பிரசாத்ராவ் விவரித்து பிடி ஆரின் சுய கட்டுப்பாட்டை சுட்டிக் காட்டுகிறார். இதனை என். ராமகிருஷ்ணன் தான் எழுதிய நூலில் மேற் கோளாகவும் காட்டுகிறார்.
மதுரையில் கட்சிக் காங்கிர நடைபெற்ற சமயத்தில் பி.டி ஆரும் டாக்டர் அதிகாரியும் கட்சியின் சாதாரண உறுப்பினர்கள் தாம். டிராக்ஸிய வாதிகள், துருக்கியர்கள், பயங்கரவாதிகள் என்று வசைபாடபட்ட எங்களில் சிலர் இவ்விரு தலைவர்களுக்கும் கட்சியில் அவர்களுக்கு உரிய இடம் கிடைக்க வேண்டுமென்று விரும்பினோம். அவர்கள் இருவரும் மத்தியக் குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென நாங்கள் விரும்பினோம். இதற்காகப் பிரதிநிதிகளைத் திரட்டும் வேலை என்னிடம் ஒப்படைக்கப் பட்டது டாக்டர் அதிகாரி போட்டியிட சம்மதித்தார். ஆனால் பி.டி ஆர் போட்டியிட உறுதியாக மறுத்து விட்டார். அவர் மீது மத்தியக் குழுவின் தடை இருக்கும்வரை அவர் போட்டியிடப் போவதில்லை என்று கூறிவிட்டார். பெருத்த ஆதரவோடு அவர் வெற்றி பெறும் நிலை இருந்தது. ஆனால் அவர் கட்சிக் கட்டுப்பாட்டில் இறுதியாக இருந்தார்.
மத்தியக்குழு முன் மொழிந்த பெயர் பட்டியலில் டாக்டர் அதிகாரியின் பெயர் இல்லை. ஆனால் நாங்கள் அவர் பெயரை முன் மொழிந்தோம் அவர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்
தன் மீதிருந்த தடை நீக்கப்படும் வரை பி.டி ஆர் கட்சியின் சாதாரணச் சிப்பயாக இருந்தார். அதுதான் அவரது உருக்கு போன்ற கட்டுப்பாடு
1955 ஆம் ஆண்டு மீண்டும் மகாராஷ்டிர மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் என்பது வரலாறு. `உளிக்கு பயந்தால் சிலை இல்லை அதுபோல ஒவ்வொரு வெற்றியாளனும் அதற்காக அவன்பட்ட அவமானங்களும் காயங்களும் அளவற்றது. இந்த நூல் நெடுக இத்தகைய காயங்களின் பதிவு நிறையவே உண்டு. பி. ராமமூர்த்தியும், எ. பாலசுப்பிரமணியமும், எம்.ஆர். வெங்கட்ராமனு அவர் கொள்கையில் உறுதியாக நின்றபோது அதனை கொள்கை ரீதியாக எதிர்கொள்ள திராணியற்று; அவர்களே அறுத்தும் எறிந்துவிட்ட பூணூலையும், சாதி அடையாளத்தையும் அவர்கள் மீது பூசி அசிங்கப்படுத்திய வக்கிர அரசியல் வேட்டையை எப்படி எழுதுவது. அதே சமயம் இவர்களின் அப்பழுக்கற்ற - சாதி ஆணவமற்ற - ஒடுக்கப்பட்ட மக்கள்பால் அளவற்ற அக்கறையும் கொண்ட அவர்களின் வரலாற்றை உரிமைப் போர் களங்களினூடே நூலாசிரியர் சொல்லியுள்ள பாணி நெற்றியடி எனின் தவறு அல்ல.
அதேபோல கே. ரமணி, வி.பி. சிந்தன், அனந்தநம்பியார், பி.ஆர்.பரமேஸ்வரன் போன்றவர்கள் மலையாள தேசத்திலிருந்து வந்தவர்கள், ஆயினும் தமிழக உழைப்பாளி மக்களுக்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்டவர்கள். சிண்டன் என்ற பெயரையே சிந்தன் என மாற்றியமைத்தவர் பாரதிதாசன் அல்லவா? சென்னை நகர உழைக்கும் மக்களை திரட்டியதில் முன்நின்றவர் வி.பி.சி. அல்லவா? சென்னையில் கம்யூனிஸ்ட் இயக்கம் என்ற ஒன்று இன்று இருக்கிறது என்றால் அது தோழர் பி.ஆர். பரமேஸ்வரனும், வி.பி. சிந்தனும், கே.எம். ஹரிபட்டும், பி.ஜி.கே. கிருஷ்ணனும், கே. கஜபதியும் விதைத்த விதைகளின் - உழைத்த உழைப்பின் அறுவடையே ஆகும். பி.ஆர்.பரமேஸ்வரன் வாழ்க்கை வரலாற்றில் ஒரு அத்தியாயத்துக்கு `அமைப்பு மனிதர் என என். ராமகிருஷ்ணன் தலைப்பிட்டிருப்பது தற்செயலானது அல்ல. பொருள் பொதிந்தது. நூற்றுக்கு நூறு உண்மையாகும். தோழர் ஏ. நல்லசிவன் வாழ்க்கைக் கதையிலும் இது பொருந்தும். தத்துவ விவாதத்திலும் பிரச்சனைகளை அடியாளம் வரை ஊடுருவி பரிசீலிப்பதிலும் அவர் பாணியே தனி. எளிமையின் இலக்கணம். அவர் சிறைவாழ்க்கை தலைமறைவு வாழ்க்கை என பெரும் தியாகம் செய்தவர். இதை எழுதுகிறபோதே அவருடைய கையொடிந்தது சுதந்திரப்போரில் என்று பொய் எழுதவில்லை மாறாக கிரிக்கெட் பார்க்க மரம் ஏறி கீழே விழுந்து கையை ஒடித்துக்கொண்டார் என்றே எழுதினார் என்.ராமகிருஷ்ணன்.
தொழிலாளி வர்க்கத்தை உசுப்பி எழுப்புவது மட்டுமே தலைமைப் பண்பு ஆகாது. சில நேரங்களில் தொழிலாளி வர்க்கம் தவறி தறிகெட்டு புறப்பட்டு விடுவதுமுண்டு. அப்போது கரைவுடைத்து வரும் அந்த காட்டுவெள்ளத்தை எதிர்த்து நின்று மடைமாற்றிவிடுவது அசாதாரணமானது. நூல் நெடுக அத்தகைய சாட்சிகள் உண்டு. போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும் மாணவர்களுக்கும் சென்னையில் மோதல் ஏற்பட்டபோது அதனை துணிச்சலாக எதிர்நின்ற தொழிலாளர்களை அமைதிப்படுத்திய வி.பி. சிந்தன் பணி அடடா... அடடாவே. என். ராமகிருஷ்ணன் இதனை உரிய முறையில் பதிவு செய்துள்ளார்.
அதுமட்டுமல்ல ஒருவர் வாழ்க்கை வரலாற்றை எழுதப்புகும்போது உற்சாக மூட்டும் அம்சங்கள் மட்டுமல்ல, ஊக்கத்தை கெடுக்கும் அம்சங்கள் பலவும் தெரியவரும். இப்போதுதான் எழுத்தாளர் இதய சுத்தியோடும் இயக்க அக்கறையோடும் செயல்பட வேண்டியவராக உள்ளார். எல்லா நூல்களிலும் என்.ராமகிருஷ்ணன் இதனை கறாராக பின்பற்றியுள்ளார். பி.டி. ரணதிவே வாழ்க்கை வரலாற்று நூலுக்கு முன்னுரை எழுதிய எம்.கே. பாந்தே கூறுகிறார், பி.டி.ஆருடன் நெருக்கமாக சம்பந்தப்பட்ட பலகருத்து வேறுபாடுகள் கொண்ட விபரங்களுக்குள் போக ராமகிருஷ்ணன் உணர்வுபூர்வமாக எந்த முயற்சியும் செய்யவில்லை. வாசகர்களின் தகவலுக்காக மட்டுமே அவற்றைக் குறிப்பிட்டுள்ளார். (ஏற்கெனவே இதைக் கூறியுள்ளேன்)
ஆம், அங்கேதான் என். ராமகிருஷ்ணன் நிமிர்ந்து நிற்கிறார். மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு நிற்கிறார். கடந்த காலத்தைப் பற்றிய அறிவு-தெளிவு-உணர்வு இவைதான் வரலாறு என பேராசிரியர் கருணானந்தன் கூறியது. இவர் எழுத்தில் உண்மையாகியுள்ளது. எந்தச் சூழலிலும் தனது கருத்தை யார்மீதும் ஏற்றிச்சொல்ல என். ராமகிருஷ்ணன் முயலவே இல்லை. பல ஆயிரம் மைல்கள் பயணம் செய்து பலநூறுபேர்களை பேட்டிகண்டு, நூற்றுக்கணக்கான நூல்களை ஏடுகளைப் படித்துச் சலித்து சேகரித்த விபரங்களை ஒப்பனையின்றி - கற்பனைச் சரடு இன்றி - எளிமையாய் கோர்வையாய் தந்ததில்தான் என். ராமகிருஷ்ணன் வெற்றியுள்ளது.
எம்.கே. பாந்தே வரலாறு சிஐடியு வரலாற்றோடும் அனந்தநம்பியார் வரலாறு ரயில்வே தொழிலாளர் போராட்டத்துடனும் இணைத்தே தரப்பட்டுள்ளது. ஏ. நல்லசிவன் வாழ்க்கை தமிழக கம்யூனிஸ்ட் கட்சி - குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் வரலாற்றோடு பின்னிப்பிணைந்தது.
`அந்தமான் தீவுச்சிறை நூல் அற்புதமானது. சிறைத்தண்டனை தியாகிகள் மனதை உருக்குலைக்கவில்லை. மாறாக புடம்போட்டது. புத்தகம் அவர்களின் போர்வாளானது. கல்வி அவர்களுக்கு கேடயமானதும் ஆச்சரியமான உண்மை. சமரசங்களுக்கு இடமற்ற போராட்ட குணம், சிறைக்குள்ளும் போராட்டங்கள், படிப்பு, விவாத மேடைகள், மாநாடுகள், கையெழுத்துப் பத்திரிகைகள், தாங்கள் சிறையில் உழைத்துப்பெற்ற சம்பளத்தில் வீரர்கள்வாங்கிய (70 வருடங்களுக்கு முன்பு) தூரகிழக்கின் பிரச்சனைகள், பால்கன் நாடுகள், சோஷலிசம் எதற்காக? என்று நீளும் புத்தகங்களின் பட்டியல் - வெளிநாடுகளுக்கு சந்தா அனுப்பி படித்த நியூயார்க் டைம்ஸ், நியூ ஸ்டேட் மென், லண்டன் டைம்ஸ் என்று நீளும் இதழ்களின் பட்டியல் - இவையெல்லாம் தமது மந்தைத்தனமுள்ள முகத்தில் ஓங்கி அறைகின்றன என்கிறார் வாசல் வெளியீட்டகத்தைச் சார்ந்த ஸ்ரீரசா நூலைப் படித்தபின் அது முழுக்க முழுக்க மெய் என்பதை உணர முடியும்.
இங்கு பட்டியலில் உள்ள 14 தலைவர்களின் வாழ்க்கை சுருக்கத்தையோ - உணர்ச்சி பதிவுகளையோ எடுத்துச்சொல்வது இங்கு என் வேலை அல்ல. அந்நூல்களை படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். இந்நூல்களை என். ராமகிருஷ்ணன் எப்படி நேர்மையாக தந்துள்ளார் என்பதுதான் நம்முன் உள்ள பிரதான அம்சம்.
சமீபத்தில் ஒரு பேராசிரியர் எழுதிய ஒரு கம்யூனிஸ்ட் தலைவனின் வாழ்க்கை வரலாற்றைப் புரட்ட நேர்ந்தது. அப்போது என். ராமகிருஷ்ணனின் உழைப்பும் நேர்மையும் கறார் அளவுகோலும் பளிச்சென துலக்கமாயின. உதாரணமாக விடுதலைக்கு முன் எட்டு ஆண்டுகள் விடுதலைக்குப் பின் எட்டு ஆண்டுகள் என பேராசிரியர் அத்தலைவரின் சிறைவாழ்வை குறிப்பிட்டுவிட்டு, அடுத்த வரியிலேயே பல்வேறு கட்டங்களாக மொத்தம் இருபது ஆண்டுகளுக்கு மேலே என தொடர்கிறார். கணக்கு இடிக்கிறது. உண்மையின் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் சிறைப்பட்ட அவரின் தியாகம் கூட இவரது பொறுப்பற்ற எழுத்தால் நாளை ஆய்வாளர் சந்தேகப்படுவதாக ஆகிவிடும்.
ஆனால் ராமகிருஷ்ணன் நூல்கள் பல செய்திகள் கட்சி வரலாற்றிலும் - மாவட்ட கட்சி வரலாற்றிலும் ஒன்றுக்கும் மேற்பட்டோர் வாழ்க்கை வரலாறுகளிலும் திரும்பத் திரும்ப வருவது தவிர்க்க முடியாது. சில இடங்களில் சுருக்கமாகவும் சில இடங்களில் விரிவாகவும் வரும். ஆனால் அவற்றுக்கு இடையே தகவல் முரண்பாடு இருக்காது. இதனை பலமுறை நான் ஒப்பிட்டுப்பார்த்துள்ளேன். ஆர். உமாநாத் வாழ்க்கை வரலாற்றை எழுதும்போது இந்த ஒப்பிட்டுப்பார்க்கும் தேவை எனக்கு ஏற்பட்டது. அதன் பின்னரும் பல நூல்கள் எழுதும்போது இவ்வாறு ஒப்பிட்டுப் பார்த்துள்ளேன்.
வார்த்தை ஜோடனைகளுக்காக கூட்டவோ குறைக்கவோ செய்யாமல், தகவல்களை உள்ளது உள்ளபடி தருவதும், அதனை தகவல்கள் சிலரின் வாய்மொழிக் கூற்றாகவோ அல்லது நூல் ஆதாரங்களின் அடிப்படையிலோ அமைந்திருப்பதும் அவரது எழுத்தின் சிறப்பு அம்சங்களாகும்.
உன்னுடைய வாழ்க்கையை விவரித்த பின்னரும்
பயன்படுத்துவதற்கு இன்னும் ஏராளமான
வார்த்தைகள் உள்ளன என்றால்,
சொல்ல வேண்டியதை எல்லாம்
சொல்லிவிட்டோம் என்பதல்ல, ஆனால்
உன்னைக் குறித்து
முழுமையாகச் சொல்வதற்கு
நாங்கள் சக்தியற்றவர்களாக இருக்கிறோம்
என்ற காரணத்தால்தான் என்கிற மகாகவி காளிதாஸ் கவிதை வரிகள்
பி.ஆர். நூலின் முதல் பக்கத்தில் இடம் பெறச் செய்திருப்பார். அதே கவிதையை இவருக்கு அப்போது நாம் சமர்ப்பிக்கலாம். அது வெறும் புகழ்ச்சி ஆகாது, உண்மையாகும்.
தமிழக கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் குறித்து அவர் நிறையவே சொல்லியிருப்பினும் சிங்காரவேலர் குறித்து இவர் தனியாக எழுதவில்லை.தோழர் ஏ.கே. கோபாலன், சுந்தரய்யா போன்றோர் வாழ்க்கை சுயவரலாறு வெளிவந்துவிட்டதால் இவர் எழுதாமல் தவிர்த்திருக்கக்கூடும்; அதே சமயம் பிரமோத் தாஸ்குப்தா, பசவபுன்னையா போன்றோர்க் பற்றிய பதிவும் சென்னை, தஞ்சை மாவட்ட(இன்று அதுவே பலமாவட்டங்களாகிவிட்டன) வரலாறுகள் எழுதப்படுவதும் அவசியம். அவரிடம் உரிமையோடு இவற்றை எதிர்பார்க்கிறேன்.
இறுதியாக மேல் கூறியவற்றையும் எழுதியபின், இவரது நூல்களை வரிசைக்கிரமமாகத் தொகுத்து. கூறியதை கூறாமல் எடிட் செய்து நான்கைந்து பாகங்களைக் கொண்ட தொகுப்பாக வெளியிடுவது மிகமிக அவசியம். நாளை நிச்சயம் உழைக்கும் மக்கள் ஆட்சி செய்வார்கள். அப்போது வரலாற்றை உண்மையாக எழுத முயற்சிப்பார்கள். அதற்கு ஆவணமாக இத்தொகுப்புகள் அமையும். தமிழக உழைக்கும் மக்கள் போராட்ட வரலாற்றை நேர்மையாக எழுத முயலும் எந்தத் கொம்பனும் இவரது நூல்களை மேற்கோள் காட்டாமல், இதிலிருந்து விபரங்களை எடுத்தாளாமல் எழுதவே இயலாது. ஏனெனில் இது அடிப்படை ஆதாரமாக ஆவணமாக அத்தாட்சியாக அடிப்படையாக உள்ளது.
என். ராமகிருஷ்ணனின் எழுத்துப்பணிக்கு என் தலைதாழ்ந்த வணக்கங்கள். உங்கள் உழைப்பும் நேர்மையும் எளிமையும் இனி யாருக்கும் வராது. உங்கள் முன் நாங்கள் மண்டியிடுகிறோம். வணங்குகிறோம். எங்களின் வேர்களை எங்களுக்குக் காட்டியதற்காக....
டால்ஸ்டாயின் கவித்துவமான வரிகளோடு என் உரையை நிறைவு செய்ய விழைகிறேன்.


ஒரு தேனீ பூவின் மேல் அமரும்
வேளையில் ஒரு குழந்தையை கொட்டியது
தேனீயைக் கண்டு அஞ்சிய அக்குழந்தை
மக்களைக் கொட்டுவதற்காகவே தேனீக்கள்
வாழ்கின்றன என்றது.

தேனீ பூவிதழ்களை ருசிப்பதைப்பார்த்த ஒரு கவிஞன்
பூக்களின் நறுமணத்தை நுகர்வதற்காகவே
தேனீக்கள் வாழ்கின்றன என்றான்

மற்றொரு தேனி வளர்ப்பவன்
தேன்கூடுகளின் உயிரியலை
நெருக்கமாகப் பார்த்து
தேனீ மகரந்தத் தூள்களை எடுத்துக் குட்டித் தேனீகளுக்கு உணவு அளிப்பதற்கும்
ராணித் தேனீயை மகிழ் விப்பதற்கும் - அவை தனது
வம்சத்தை விருத்தி செய்வதற்காகவும்
வாழ்கின்றன என்றான்.

தேனீ ஆண்மலரின் மகரந்தத்தை
பெண்மை உறுப்புக்கு
எடுத்துப் பறந்து செல்வதைப் பார்த்த
ஒரு தாவரவியல் அறிஞர்
அது அம்மலரை
செழிப்பாக்குவதற்குத்தான் செல்கிறது;
அதுவே அதன் இருத்தலுக்கான அம்சம் என்றான்

தாவரங்களின் குடிபெயர்வை
பார்த்த இன்னொருவன்
தேனீக்கள்
இந்த குடிபெயர்வுக்கு
உதவுவதாக கூறினான்
தேனியின் வாழ்வின் அர்த்தம் என்றான்
ஆனால்

தேனீயின் தேடல்
முதலில் கூறியதிலோ
இரண்டாவது கூறியதிலோ
அல்லது மனித அறிவில்
பகுத்துப்பார்க்க முடிகிற பலவற்றாலோ
முடிந்த முடிவாவதில்லை

தேனீயின் தேடல் பற்றிய
கண்டுபிடிப்புகள் மனித அறிவு வளர வளர
அதன் இருத்தலுக்கான அர்த்தம்
மேலும் மேலும் நம்முடைய புரிதலுக்கும்
அப்பால் இட்டுச் செல்கிறது

மனிதன் பார்க்க முடிவதெல்லாம்
தேனீயின் வாழ்வியலோடு
பிற உயிர்களின் உறவை மட்டும்தான்
எனவே அதுபோலவேதான்
வரலாற்றுக் கதாபாத்திரங்களின்
இருத்தலும் தேசத்தின் இருத்தலும்



(வரலாறு படைத்த என்.ராமகிருஷ்ணன் நூல்களை முன்வைத்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் தென்சென்னை மாவட்டக் குழு சார்பில் அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற்ற படைப்பரங்கில் சு.பொ.அகத்தியலிங்கம் வாசித்த கட்டுரை)

மாவோயிஸ்டுகள் சுயரூபம் அறிய....

Posted by அகத்தீ Labels:


மாவோயிஸ்டுகள் வன்முறை குறித்த செய்திகள் கிட்டத்தட்ட தினசரி கேள்விப் படுகிறோம். அறிவு ஜீவிகள், எழுத்தாளர்கள் சிலர் இந்த மாவோயிஸ்டுகள் பழங்குடி மக்கள் நலனுக்காக நிற்பதாக பேசியும் எழுதியும் வருகின்றனர். ஆக ஒரு பக்கம் அராஜக முகமும் மறுபக்கம் பழங்குடிகள் காவலர் முகமும் என இரு தோற்றமளிக்கும் இவர்கள் யார்? இவர்களின் நோக்கம் என்ன? தத்துவம் என்ன? இவர்கள் எப்படி வளர்ந்தார்கள்? இவர்களின் மூலம் எது? இவர்கள் இரக்கமற்ற வன்முறை மூலம் எதைச் சாதிக்கப் போகிறார்கள்? இவர்கள் பால் ஊடகங்கள் சில அக்கறை காட்டுவது ஏன்? இப்படி அடுக்கடுக்காய் எழும் கேள்விகளுக்கு விடையாக நக்சலிசம் முதல் மாவோயிசம் வரைஎனும் நூல் வெளிவந்ததுள்ளது. அன்வர் உசேன் இந்நூல் மூலம் ஒரு தத்துவப் போராட்டத்திற்கு வாசலைத்திறந்துள்ளார். பாராட்டுகள்.

ஒரு நூலின் முன்னுரையை படித்துவிட்டு நூலுக்குள் செல்வதா? அல்லது நூலைப்படித்த பின் முன்னுரையை படிப்பதா?இரண்டு வழக்கமும் நடப்பில் உண்டு. முன்னுரையை, அணிந்துரையை படிக்காமல் போகிறவர்களும் உண்டு. இதில் எது சரி? இது அவரவர் தேர்வு. ஆயினும் இந்நூலைப் பொறுத்தவரை வே. மீனாட்சி சுந்தரம் எழுதியுள்ள முன்னுரை மிக முக்கியமானது இதில் இந்த பயங்காரவாத நோய் எப்படி பிரெஞ்சுப் புரட்சியின் போது உருவானது என்பதை விவரிப்பதை கட்டாயம் முதலில் படிப்பது அவசியம். நூலைப் புரிந்து கொள்ள அது சாவி ஆகிறது.

வரலாற்றைக் கவனித்தால் அரசு அடக்கு முறைக் கருவியாக இருக்கும் வரை பயங்கரவாதஅரசியலும் விளைந்து கொண்டே இருக்கும் என உறுதிபடக் கூறுவதுடன் மார்க்சியவாதிகள் மட்டுமே இதனை எதிர்ந்து சித்தாந்தப் போரை பிரெஞ்சுப் புரட்சி காலம் தொட்டு இன்றுவரை நடத்தி வருகின்றனர் என்கிறார் வே. மீனாட்சி சுந்தரம்

பயங்காரவாத அரசியலை ஒரு அரசு எதிர்கொள்வது எப்படி என்ற சர்ச்சை இன்று உலகளவிலும் நாட்டிற்குள்ளும் சூடாக நடைபெறுகிறது என்று கூறும் இவர்; சரியான அரசியல்,பொருளாதார மேம்பாடு, மக்களின் உன்னத உணர்வுகளை மதிக்கும் சிவில் உரிமைகள் பாதுகாப்பு எனப்பாதையும் காட்டுகிறார். பிரெஞ்சுப் புரட்சியின் போது மாக்சிமிலியன் ராபஸ்பியர் தொடங்கிய இந்த தீமை அவரையே பலிவாங்கியதையும் இன்றும் தொடர்வதையும் முன்னுரை பதிவு செய்துள்ளது. இந்த அறிமுகத்தோடு அன்வர் உசேன் எழுத்துகளுக்குள் நுழைவது புரிதலை வலுவாக்கும்.

152 பக்கங்களில் 40 அத்தியாயங்களில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் நிலை பாட்டிலிருந்தும் ஆவண ஆதாரங்களிலிருந்தும் எளிமையாக ஆனால் வலுவாக இப்பிரச்சனை குறித்து எடுத்து வைக்கிறார் அன்வர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து இந்த தீவிரவாத குழுக்கள் பிளவு பட்டவர்கள் எனினும். இவர்கள் அடிப்படையான மார்க்சியப் பார்வையைக் கைவிட்டவர்கள் என்பதை வரலாற்றுப் பின்புலத்தோடு கூறுகிறார். மேற்கு வங்கத்தில் நக்சல்பாரி என்ற இடத்தில் பிறந்த இந்த இயக்கம்; சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவோடு ஆரம்பத்தில் செயல்பட்டதை எடுத்துக் காட்டுகிறார்.
ஆரம்பத்தில் உற்சாகமான எழுச்சி என்கிற தோற்றத்தோடு எழுந்த இயக்கம் எப்படி சீரழிந்து உடைந்து உருமாறி இணைந்து பிரித்து என பல அவதாரம் எடுத்ததை காட்டுகிறார்.

நக்சல்பாரிகள் ஆரம்பத்தில் கொன்றழிக்கும் வேலைகளில் ஈடுபட்டபோது எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை இந்நூலை படிக்கிற யாருக்கும் இவர்களின் குரூரமனம் நிச்சயம் புலப்படும்

இடது சாரிகள் என்று கூறிக் கொண்டாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு எதிராக அவர்கள் இருப்பது ஏன்? ஜோதிபாசு தலைமையில் அன்று மேற்கு வங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இவர்களை எப்படி எதிர்கொண்டது?ஒருபுறம் சித்தாந்தப் போராட்டம்; மறுபுறம் சிபிஎம் தொண்டர்களின் உயிர்த்தியாகம், அரசின் உறுதியான அரசியல் நடவடிக்கைகள், நிலவிநியோகம் இவற்றை நாம் அறிய இந்நூல் உதவுகிறது. இதனைபிரச்சாரம் செய்தாக வேண்டும்.

அதுபோல நக்சலிசம் முதல் இன்றைய மாவோயிசம் வரை எல்லோரும் தங்களை தெலுங்கானா வீரப்போராட்டத்தின் வாரிசுகள் என்று கூறிக் கொண்டாலும் உண்மையில் அவர்கள் அந்த தியாக பராரம்பரியத்தின் வாரிசு அல்ல என்பதையும்; தரகு முதலாளித்துவம், தனிநபர் படுகொலை போன்றவை தவறான கணிப்புகள் என்பதையும்; கொன்றழிக்கும் பயங்கரவாதம், போன்ற அச்சுறுத்தல் மூலம் எதையும் சாதிக்க முடியாது என்பதையும் கடந்தகால வரலாற்று அனுபவம் மூலம் நன்றாக இந்நூலில் அன்வர் வாதிடுகிறார்.

சில வாதங்களும், பதில்களும் திரும்பத் திரும்பச் சொல்லுவது பல அத்தியாயங்களில் உள்ளன. ஆனால் அவர்களின் தவறான தத்துவத்தை தவறான பாதையை திரும்பத் திரும்ப எடுத்துக் காட்டுவது தவிர்க்க முடியாதது. காங்கிரஸ் கட்சி, மம்தா கட்சி, ஊடகங்கள் இவைகள் கண்மூடித்தனமாக மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பு மனோநிலையில் பயங்கரவாதத்துக்கு துணைபோவதும்; அதன் நாசகர விளைவுகளும் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. உண்மையில் மார்க்சிஸ்ட் கட்சித் தொண்டர்களே தொடர்ந்து இவர்களின் வன்முறைக்கு பலியாகி வருகின்றனர். என்ற உண்மையை இந்நூல் சரியாக பட்டியலிட்டு காட்டுகிறது.

மாவோயிஸ்டுகள் செயல்பாடு இடதுசாரி சக்திகளை சீர் குலைக்கவே பயன்படுகிறது. என்று கூறுகிற அன்வர்; அவ்வாறு இடது சாரிகள் பலவீனப்பட்டால் பலனடைவது யார்? என்ற கேள்வியை எழுப்புகிறார். சிபிஐ (எம்) ஐ பலவீனப்படுத்த மாவோயிஸ்டுகள் செய்யும் ஒவ்வொரு செயலும் வலதுசாரி சக்திகளுக்கு, உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.மாவோயிஸ்டுகள் ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்கின்றனர் என்பதை அழுத்தம் திருத்தமாக அன்வர் இந்நூலில் பதிவு செய்துள்ளார்.

காவிப்படை வலுவாக உருவான கடந்த பத்து ஆண்டுகளில் பல நக்சல் அமைப்புகளும் சரி, ஆயுதப் போராட்டத்தினரும் சரி -ஏனையோரும் சரி-எந்த எதிர்ப்பையும் காட்டாமலே இருந்தனர். அத்வானியின் ரதயாத்திரையையோ அல்லது அர்எஸ்எஸ் பஜ்ரங்கள் கொலைக்காரக் கும்பலையோ எதிர்த்து எந்த நக்சல் அமைப்பும் வீதிக்கு வரவில்லை அல்லது தமது ஆயுதக் குழுக்களை சங்பரிவாரத்திற்கு எதிராக அனுப்பவில்லை (EPW நவம்பர் 1,2003) சுமந்தர் பானர்ஜியின் மேற்கோள்களை சுட்டிக் காட்டி இந்த பயங்கரவாத அமைப்புகளின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டுகின்றார் அன்வர்.

அது மட்டுமல்ல ஏகாதிபத்திய சக்திகள் இவர்களுக்குள் எப்படி ஊடுருவி உள்ளனர். என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். எப்படி ஏகாதிபத்தியம் காசு பணத்தைக் கொட்டி இவர்களை விலைக்கு வாங்கியது என்பது அதிர்ச்சியான உண்மை.

குட்டி பூர்ஷ்வாக்கள், மத்திய தர வர்கத்தினர், உதிரிப்பாட்டாளிகள் என சமூகத்தில் குறிப்பிட்ட பகுதியினரே இவர்களின் அதிதீவிர பேச்சிலும் செயலிலும் மயங்குவதை, தடுமாறி திசைமாறுவதை; தாக்குதலை எதிர்கொள்ளும் போது சிதறி ஒடுவதை வரலாற்று அனுபவங்களூடே இந்நூலில் அன்வர் பதிவு செய்துள்ளார்.

அதே சமயம் நேற்றை நக்சலைட்டுகள் அல்ல இன்றைய மாவோயிஸ்டுகள்; இவர்களுக்கு பழங்குடி மக்கள் ஆதரவு அதிகம் உள்ளது என்கிற மயக்கம் ஊடகங்களால் ஊட்டப்பட்டுள்ளது. அதை அன்வர் அவருக்கே உரியபாணியில் எதிர்கொள்கிறார். 160 மாவட்டங்களில் இவர்கள் பரவி உள்ளதாகக் கூறுவது உண்மையல்ல; இம்மாவட்டங்களில் இருக்கும் எல்லா குழுக்களும் ஒன்றல்ல; இவர்களுக்குள் இணைப்பும் இல்லை ஒற்றுமையும் இல்லை. 12476 காவல் நிலையங்களில் உள்ள நிலப்பரப்பில் 509 காவல் நிலைய எல்லைக்குள் அதாவது 4 சதவீத காவல்நிலையப் பகுதிகளில் மட்டுமே இவர்கள் செயல்பாடு ஒரளவு உள்ளது என்பதைக் காட்டுகிறார்.

மேலும் இவர்களுக்கு மிகப்பெரும் அளவில் நிதி எப்படிக் கிடைக்கிறது? கஞ்சா பயிரிடுவது, போதை மருந்து கடத்தல், ஆயுதக் கடத்தல், சட்ட விரோத சுரங்கங்கள் என இவர்களின் நிதி திரட்டும் வழிகள் குறித்து அன்வர் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். அது முக்கியமான அம்பலப் படுத்தலாகும் முன்னுரையில் வே. மீனாட்சிசுந்தரம் கஞ்சா பிடிபட்ட விபரங்களை சுட்டிக் காட்டி பயங்கரவாத அரசியலுக்கு எது விளை நிலமோ அந்த இடம் கஞ்சா அபினி உற்பத்திக்கும் விளை நிலமாக உள்ளது என்கிறார். இந்த அம்சமும்; ஆயுத வியாபாரம், போதை மருந்து கடத்தல் இவற்றோடு சட்டவிரோத கனிம சுரங்கங்கள் செய்லபட இவர்கள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் அனுமதிக்கப்படுவதும் அவர்களிடம் பெருமளவு பணம் கறப்பதும் முக்கியம். இவர்கள் வனக் காவலர்களோ, பழங்குடி நலன்பேணுபவர்களோ, சுற்றுச் சூழல் அக்கறையாளர்களோ அல்ல என்பதை நிறுவ இச் செய்தியை அன்வர் அடுத்துவரும் பதிப்புகளில் விரிவாக பதிவு செய்யவேண்டும்.

70களில் இடது தீவிரவாதம் மேலோங்கிய சூழலில் வாலிபர் சங்கத்தை கட்டி எழுப்ப மார்க்சிஸ்ட் கட்சி ஆர்வம் காட்டியது. மாணவர், வாலிபர் அமைப்புகள் களம் கண்டுதும் இளையதலைமுறையினரை ஆகர்ஷித்ததும் வரலாறு இன்று மீண்டும் அதே இடது சாரி அதி தீவிரம் இளைஞர்களை தங்கள் பக்கம் இழுக்க முயலும் போது வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் இவற்றில் செயல்பாடு வேகப்படுத்தப்படவேண்டும். விரிவுபடுத்தப்பட வேண்டும். இளைஞர்களிடையே சரியான தத்துவ அரசியல் விவாதம் எடுத்துச் செல்லப்பட்ட வேண்டும். அதற்கு இந்நூலும் உதவும். இளைஞர்கள் மாணவர்கள் இந்நூலைப் படித்து விவாதிப்பது அவசியம். தக்க நேரத்தில் தக்க நூலைத் தந்த அன்வருக்குப் பாராட்டுகள்
எல்லோரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது வெனில் மிகை அல்ல.

நக்சலிசம் முதல் மாவோயிசம் வரை
-அன்வர் உசேன்
பாரதி புத்தகாலயம் 7, இளங்கோதெரு,
சென்னை 600018
பக். 152. விலை ரூ. 80

நன்றி: தீக்கதிர் 18.07.2010

இடதுசாரிகளும் புதிய உலகமும்

Posted by அகத்தீ Labels:


சோஷலிசம் காலாவதியாகிவிட்டதென ஒரு பகுதி அறிவிஜீவிகள் உரக்கப் பேசுகின்றனர்.சோஷலிசம் அல்லது மரணமென லத்தின் அமெரிக்க நாடுகளிலிருந்து அறைகூவல் வலுவாக எழுகிறது. எல்லாம் மாறும் என்ற விதியைத்தவிர எல்லாம் மாறும் என்பதே மார்க்சியமெனில் அந்த மார்க்சியமும் மாறாதாவென கேள்வி எழுப்புவோரும் உண்டு..

உலகமயமும் தாராளமயமும் தனியார்மயமும் மனித வாழ்வை மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது, மார்க்சியம் குறித்த மறுவாசிப்புக்கு உரிய தருணம் இது.’21-ஆம் நூற்றாண்டுக்கான சோஷலிசம் ‘ என்ற பெயரில் லத்தின் அமெரிக்கச் சிந்தனையாளர் மைக்கேல் லெபோவிச் எழுதிய நூல் மீதான விமர்சனம் விவாதமேடைக்கு அழைப்பு விடுத்து தீக்கதிர் ஏட்டில் 2010 பிப்ரவரி 4,5 தேதிகளில்வெளியானது. akathee.blogspot என்றமுகவரியிலுள்ள எமது ஃப்ளாக் ‘அகத்தீ‘ யில் பிப்ரவரி மாத பதிவிலும் பார்க்கலாம். அதன் தொடர்ச்சியே மார்த்த ஹர்னேக்கர் எழுதிய ‘இடதுசாரிகளும் புதிய உலகமும்‘ என்ற நூலாகும். ஆக இந்த இரண்டு நூலையும் .இரண்டின் மீதான எமது விமர்சனங்களையும் இணைத்து வாசித்து பயனுள்ள உரையாடல்கள் நடத்த முன்வருமாறு அழைக்கிறோம்.

நூல்கள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம். இது ஒரு அரசியல் நூல். ஆனால் இருப்பதைப் போற்றிட எழுதப்பட்ட நூல் அல்ல; எதிர்ப்பதற்காகவே எழுதப்பட்ட நூலும் அல்ல; வித்தியாசமாய் எழுத வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட நூலும் அல்ல; ஏதேனும் விவகாரத்தை உண்டாக்க வேண்டும் என்பதற்கான நூலும் அல்ல; மாறாக, மாற்றத்தைக் கொண்டுவர மனம் திறந்த விவாதத்திற்கு துவக்கபுள்ளியாகும் நூல். மனிதகுலத்தின் மீதான மாளாக்காதலோடும் - மார்க்சிய பற்றார்வத்துடனும் எழுதப்பட்ட நூல்.

நாலு பாகங்களாக - 14 அத்தியாயங்களாக இந்நூல் உள்ளது. முன்னுரையே முக்கியமான விவாதவெளியை நமக்கு அறிமுகம் செய்கிறது.
ஐம்பது வருடங்களுக்கு முன் இருந்த உலகின் சாயல் எதுவும் இல்லாத உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எனத் தொடங்கி; சோவியத் யூனியன் தகர்வுக்குப் பிறகு - நவீன தொழில்நுட்பச் சகாப்தத்தில் நிலவும் சூழலையும் விவரித்து, புரட்சி என்பதே பரந்துபட்ட மக்களைத் திரட்டுவது என்பதை முன்வைத்து அதற்கே இந்நூல் என்கிறது முன்னுரை. முதல் பார்வையில் முற்றிலும் சரி என்ற எண்ணமே துளிர்க்கும்.

முதல் பாகத்தின் தலைப்பே இடதுசாரிகளும் புதிய உலகமும் என்பதுதான். உலகமயம் என்பதனை நிலை நிறுத்துவதற்காக ஒற்றைக் கலாச்சாரத் திணிப்பு நடைபெறுவதை, மக்களை பிளவுபடுத்திக் கொண்டிருப்பதை, மக்களிடம் அதிருப்தி மேலோங்குவதை, சாத்தியமான புதிய மாற்றை; இந்தப் பாகத்திலுள்ள மூன்று அத்தியாயங்களும் விவரிக்கின்றன. ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒன்றுக்கு இரண்டுமுறை படிக்க வேண்டும்; ஒவ்வொரு வரியிலும் ஒவ்வொரு வார்த்தையிலும் உள்ளுறையாக இருக்கிற உண்மைகளை அசைபோட வேண்டும். பொலிவாரியக் கண்ணாடி மூலமே - லத்தின் அமெரிக்க அனுபவத்தின் ஊடாகவே - அவர் இவ்வுலகைத் தரிசிப்பது புலனாகும். அவற்றுள் நம் அனுபவத்தோடு பொருந்துவன பல. முரண்படுவன பல. ஆயினும் நம்நாட்டு அனுபவ உரைகல்லில் உரசியே நாம் உண்மையைத் தேட வேண்டும்.
புதிய இடதுசாரிக் கலாச்சாரத்தின் தேவையை மற்றும் இன்று இடதுசாரிக் கட்சிகள் சந்திக்கும் நெருக்கடியை விவரிக்கிறது இரண்டாவது அத்தியாயம். மார்க்சியம் நெருக்கடியில் இருக்கிறது என ஒப்புக்கொண்டு மார்க்சியத்தை நிராகரிக்கிற சக்திகளைப் போல் அல்லாமல், மார்க்சியம் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை இனங்காணும் முயற்சியாகவே இந்தப் பாகம் உள்ளது. இதில் நான்கு அத்தியாயங்கள் உள்ளன.

இன்றைய உலக நிலைமையில் இடதுசாரிகளை கடுமையாகப் பாதிக்கும் ஒரு விஷயம் உண்டென்றால் அது புதிய சவால்களை சமாளிக்கக்கூடிய கட்சி இல்லாததுதான் என்ற பீடிகை வலுவாகவே பதிவாகியுள்ளது. `மதம் ஒரு அபினி என்ற கண்ணோட்டத்தோடு மட்டுமே இன்றைய நடைமுறைகளை வகுக்க இயலுமா? ஜனநாயகத்தன்மை மறுக்கப்பட்ட கட்சி அமைப்பு எப்படி எதேச்சாதிகாரத்திற்கு போகிறது என்பதையும்; முற்றிலும் கீழ்படிந்த ஆளுமை அற்ற கட்சி உறுப்பினர்களை உண்டாக்கும் நிலை உருவாவதையும்; அதனால் தத்துவம் படிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி நடைமுறை உலகை காண மறுப்பதையும் நிறுவன பக்தி என்பது இடதுசாரிக் கோட்டையின் இதயத்தில் புகுந்து கிருமியாகிவிட்டதையும் ஆறு அத்தியாயங்களில் விளக்கப்பட்டுள்ளது.
`புதிய அரசியல் சாதனம் பற்றிய பார்வையை விவரிப்பது நான்கு அத்தியாயங்கள் கொண்ட மூன்றாவது பாகம், ஜனநாயகத்திற்கான போராட்டமும் சோஷலிசத்திற்கான போராட்டமும் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்க முடியாதவை என்பதால் புதிய அரசியல் அமைப்பு ஜனநாயகத்தை தன்னுடைய லட்சியமாகக் கொள்ள வேண்டும் என்பதே இந்த அத்தியாயத்தின் மைய இழை. சர்வாதிகார ஆட்சிகளைத் தூக்கி எறியும் லத்தின் அமெரிக்க எழுச்சிகளூடே பெறப்பட்ட பாலபாடம் இது. அங்குள்ள சூழலில் இது பெரிதும் சரியாக இருக்கக்கூடும். அதனை வரலாறு தீர்மானிக்கட்டும். அரசியல் ஜனநாயகம் அது முதலாளித்துவ ஜனநாயகம்தான் எனினும் இங்கு அமலில் உள்ளது. இந்தியாவில் ஒருவித ஜனநாயகக் காற்று வீசுகிறது. ஆகவே லத்தின் அமெரிக்க அளவுகோல் இங்கு அப்படியே பொருந்திப்போகாது அல்லவா?
அனைவரும் பங்கேற்கும் ஜனநாயகம் என்று இந்நூலாசிரியர் வாதிடுவதை நம் நாட்டுச் சூழலில் எப்படிப் பொருள் கொள்வது? `சர்வாதிகாரம் என்ற சொற்றொடர் மக்கள் இதயத்தில் ஒருவித படிமத்தை வலுவாக உருவாக்கிவிட்டது. மார்க்ஸ் அதனை எப்படிச் சரியான பொருளில் உபயோகித்திருந்தாலும் `பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற சொற்றொடர் தற்போது தவறான பொருள் மயக்கத்தோடுதான் மக்களால் புரிந்துகொள்ளப்படுகிறது. எனவே ஜனநாயக உணர்வுமிக்க கட்சி இது என்ற எண்ணம் மக்களிடம் துளிர்விட `பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற சொற்றொடரைக் கைவிட வேண்டும் என்கிற இந்நூலாசிரியர் வாதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்புடையது அல்ல.
தலைமை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவரும் சூழலில் புரட்சிகர ஒழுக்கம் உள்ள ஒரு தலைமையே இப்போதைய தேவை என நூலாசிரியர் வாதிடுவதை யாரும் மறுக்க முடியாது.

இடதுசாரிகளின் போராட்ட முறைகளும், ஸ்தாபன முறைகளும் ஈர்ப்பை இழந்துவிட்டன. சலிப்பை ஊட்டுகின்றன. அனைவருக்கும் பொதுவாக அலமாரியிலுள்ள ஒரு சிறு அறைக்குள் பொருந்திப் போகிறவர்கள் மட்டுமே, அதாவது வாரத்தில் ஏழு நாளும், நாளில் இருபத்தி நாலு மணி நேரமும் செயல்படுகிறவர்கள் மட்டுமே உறுப்பினர்களாக முடியும் என்கிற நிலையிலுள்ள இன்றைய நடைமுறையை இந்நூல் கேள்விக்குள்ளாக்குகிறது.
`தியாகம் பற்றிய பார்வையை தலைகீழாக மாற்ற இந்நூல் முன்வைக்கும் விவாதம்; இன்றைய நடைமுறையில் ஊறி கடந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்போர்களுக்கு கசப்பாகவே இருக்கும். சிலர் மனதுக்கு உவப்பாக இருப்பினும் அவர்களுக்குள் இருக்கும் ஒருவித போலித்தனம் இதனை மறுதலிக்கச் செய்துவிடும்.

`ஜனநாயக மத்தியத்துவம் என்ற கோட்பாடு உருவான சூழலில் அது சரியாக இருந்தது; தலைமறைவு கட்சிக்குத் தேவையாக இருந்தது. பகிரங்கமாகச் செயல்படும் ஜனநாயகச் சூழலில் இது பொருந்திப்போகுமா என்கிற விவாதம் இந்நூலில் வலுவாக முன்வைக்கப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரபூர்வமாக `ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டையும், `மேலிருந்து கட்டப்படும் கட்சி என்பதையும் வலுவாக இன்றும் பற்றிநிற்கிறது. எனவே நானும் அதனையே கூற வேண்டியவனாக இருக்கிறேன். எனினும் இந்நூலாசிரியர் இது பற்றிக் கூறுவதை ஒட்டியும் வெட்டியும் ஒரு பகிரங்க விவாதம் நடத்துவது புரிதலை செழுமைப்படுத்த தவறுகளைக் கைவிட அவசியத் தேவை அல்லவா? அதைச் செய்வதற்கு இதுவே தக்க தருணம். சோவியத் கட்சி அமைப்பை காப்பியடிப்பது மற்றும் கோஷ்டிகள் உள்கட்சி ஜனநாயகம் பற்றி எல்லாம் இந்நூல் பேசுகிறது. சால்க்கியா பிளீனம் என்ற சால்க்கியாவில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிறப்பு மாநாடு நிறைவேற்றிய ஸ்தாபன அமைப்புத் தீர்மானங்களும் - நிறைவேற்றிய கோட்பாடுகளும் வழிகாட்டல்களுமே இந்தியச் சூழலுக்குப் பொருத்தமானவை.

`உள்கட்சி ஜனநாயகம், `சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி? என்கிற இரண்டு புத்தகங்கள் - சீனக் கம்யூனிஸ்ட் தலைவர் லியோசூசி எழுதியது - ஏற்கெனவே வெளிவந்துள்ளன. அந்நூல்களுக்கு முன்னுரை வழங்கிய தோழர் இஎம்எஸ் கூறினார்: இந்நூலை நன்கு படியுங்கள். உள்வாங்கிக்கொள்ளுங்கள். ஆனால் இது சீன அனுபவம். நமக்கு வழிகாட்டுவது சால்க்கியா பிளீன முடிவுகளே என்றார் அதனையே இப்போதும் வழிமொழிவது தவறு இல்லை. அதே சமயம் திறந்த மனதோடு விவாதம் தொடங்குவதும் தப்பு இல்லை.

நான்காவது பாகம் சீர்திருத்தங்களிலிருந்து புரட்சிக்கு மாறிய பொலிவாரிய அனுபவத்தை புகட்டுகிறது. இதில் நான்கு அத்தியாயங்கள் உள்ளன. பொதுவான படிப்பினைகள் மட்டுமே இதிலிருந்து நாம் பெறமுடியும். அதே சமயம் `முதலாளித்துவமே இறுதியானது என்கிற மாயத்தோற்றத்தை உடைத்தெறியும் இந்த அனுபவங்கள். புதிய மாற்று சாத்தியம் என்பதை நிறுவி நம்பிக்கை ஊட்டுகிறது.

உலகின் பெரும் நகரங்களின் செல்வச் செழிப்பு மிக்க பகுதிகளில் சீரமைத்தல் மூலமும் ஒற்றைத்தன்மையாக்குதல் மூலமும் நாசகரத்தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறது. எங்கெங்கும் உலகளாவிய கலாச்சாரம் வெற்றி அடைந்துகொண்டிருக்கிறது என்கிற பொதுவான கசப்பான உண்மையை இந்நூல் பதிவு செய்கிறது. ஒளிக்காட்சி ஊடகங்கள் இந்தக் கருத்துப் போரில் காத்திரமான பங்கு வகிப்பதையும், அதில் இடதுசாரிகள் பிடிமானம் இல்லாமல் இருப்பதையும் இதனால் உருவாகும் வெற்றிடத்தையும் இந்நூல் சரியாக நிறுவுகிறது. புதிய அமைப்பு கோட்பாட்டை முன்னிறுத்துகிறது. பழைய கோட்பாட்டை கேள்விக்கு உட்படுத்துகிறது.

இந்நூலைப் படித்து முடித்த பின் நெஞ்சுக்குள் பூதாகரமாக தலைதூக்கும் கேள்விகள் பல. இதோ அவற்றுள் சில.

1. `பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் இன்றைக்கும் தவறாகவே புரிந்துகொள்ளப்படும் சூழலில் மீண்டும் மீண்டும் அதே சொற்றொடர் பயன்பாடு தேவையா? பார்வை மாற வேண்டாமா?

2. `ஜனநாயக மத்தியத்துவம் என்கிற கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புக் கோட்பாடு கட்சிக்குள் எதேச்சாதிகாரத்தனத்தை கொண்டுவந்துவிட்டதா? ஆளுமையற்ற படைப்பாக்கத்திறனற்ற கட்சி உறுப்பினர்களையும் ஊழியர்களையும் மட்டுமே உருவாக்கும் பாணியாக அது மாறிவிட்டதா? சோவியத் பாணி கட்சி அமைப்பு இன்னும் தேவையா?

3. எழுத்துக் கலாச்சாரமும் புத்தகக் கலாச்சாரமும் மேல்தட்டுக் கலாச்சாரமாக ஆகிவிட்டதால்; ஒலி-ஒளி ஊடகங்கள் மட்டுமே வெகுஜன கலாச்சாரமாகிவிட்டதால் இடதுசாரிகளாகிய நாம் செய்ய வேண்டியது என்ன?

4. `தொழிலாளி வர்க்கக் கட்சி `மதம் மக்களுக்கு அபின் போன்ற பார்வைகள் இப்போதும் பொருந்துமா?

5. மக்களிடமும் கட்சி அணிகளிடமும் நம்பிக்கை இழந்துள்ள கட்சித் தலைமை நம்பிக்கையைப் பெற புரட்சிகர ஒழுக்க விழுமியங்களை கைக்கொள்ள வேண்டாமா?

6. தத்துவமற்ற நடைமுறை குருட்டுத்தனமானது; நடைமுறையற்ற தத்துவம் மலட்டுத்தனமானது. இதில் ஏதேனும் ஒரு தவறை செய்பவர்களாகவே நிலைமை தொடர்வது ஏன்?

7. கருத்துப் பிரச்சாரம் என்பது ராணுவ ரீதியானதாக-வெறும் போதனையாக மட்டுமே இருக்க முடியுமா? ஜனநாயகபூர்வமான விவாதமாக்கப்பட-கருத்துப்போர் நடத்தப்பட வேண்டாமா?

8. கட்சித் தலைமை அறிவிக்கும் போராட்டங்கள் வெறும் சடங்காகவும், நம்பிக்கை ஊட்டாததாகவும் உள்ளதே. இதனை மாற்ற வேண்டாமா? பழைய போராட்ட வடிவங்கள் இன்றும் பொருந்துமா?

9. 24x7 என்ற செய்தி அலைவரிசை மாதிரி - அதில்கூட இடையிடையே விளம்பரம், விவாதம் எல்லாம் உண்டு. அதுவுமற்ற வகையில் கட்சி உறுப்பினர்களையும் கட்சி ஊழியர்களையும் கருதி குழாய்ப்புட்டு போன்று தொடர் இயக்கங்கள் நடத்துவது சரியா?

10. `மேலிருந்து கட்டப்படும் கட்சி என்பதற்குப் பதிலாக `கீழிருந்து வலுவான உள்கட்சி - ஜனநாயக ரீதியான கட்டமைக்கப்பட்ட கட்சிதானே இன்றைய தேவை?

இவையும் இவை போன்ற இன்னபிற கேள்விகளும் இந்நூலைப் படிக்கும் புரட்சிகர அக்கறை உள்ள கம்யூனிஸ்டுகள் எல்லோருக்கும் ஏற்படும்; அதன் விளைவாக எல்லாவற்றையும் இன்றைய சமூக அரசியல் பொருளாதாரச் சூழலில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் தெறிக்கும். இந்நூல் சொல்வது எல்லாம் சரி என்று நிச்சயம் கூற இயலாது, கூறவும் கூடாது. ஆனால் உண்மையைத் தேடிடத் தூண்டும்; துரத்தும்; தூக்கத்தைத் தொலைத்து சிந்திக்கத் தூண்டும் கேள்விகளை இந்நூல் விதைக்கிறது. இன்றையத் தேவையும் இதுவே. ஆகவே இந்நூலை அக்கறையோடு வாசியுங்கள்-விவாதியுங்கள். அதுவே எம் வேண்டுகோள்.
(இந்நூலுக்கு எழுதப்பட்ட அணிந்துரை)

இடதுசாரிகளும் புதிய உலகமும் - மார்த்தா ஹர்னேக்கர் தமிழில்: அசோகன் முத்துசாமி, வெளியீடு: பாரதி புத்தகாலயம், விலை: ரூ. 110\- பக். 200