ஒவ்வொருவர் வீட்டிலும் மனதிலும் விவாதக் களம் அமைக்க...

Posted by அகத்தீ Labels:


ஒவ்வொருவர் வீட்டிலும் மனதிலும் விவாதக் களம் அமைக்க...

சு.பொ. அகத்தியலிங்கம் 
 

தமிழகப் பண்பாட்டுச் சூழல் ,வெளியீடு :தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ,11-எ , மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி ,மதுரை - 62 610 .பக் :160 , விலை : ரூ . 65 .
 
காலம் ரொம்ப மாறிப் போச்சு ; பண்பாடு ரொம்ப கெட்டுப் போச்சு என்கிற அங் கலாய்ப்பை பரவலாகக் கேட்கி றோம் . பண்பாடு குறித்த விவாதம் வேண்டும் ; ஆய்வு வேண்டும் என் கிற அக்கறை மிக்க குரலும் ஆங் காங்கே ஒலிக்கிறது . எங்கிருந்து தொடங்குவது என்பதுதான் அடிப் படையான கேள்வி . வெறும் கை யில் முழம் போட முடியாது .

யாராவது எங்காவது தொடங்கி வைத்தால் அதை ஒட்டியும் வெட்டியும் விரித் தும் தறித்தும் விவாதிப்பது சாத்தி யம் . த.மு.எ.க.ச தற்போது முன் கை எடுத்து ஒரு ஆவணத்தை உருவாக் கித் தந்துள்ளது .விவாதத்திற்கான வாய்ப்பு வாசலைத் திறந்துள்ளது . இது தனியொருவரின் கனவில் பூத்த ஒன்றல்ல ; கூட்டு உழைப்பில் செதுக் கப்பட்ட ஆவணம் . ஆம் , தூத்துக் குடியில் நடைபெற்ற தமுஎகச சிறப் புமாநாட்டில் 400 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கூடி விவாதித்து இறுதி யாக்கிய கூட்டு ஆவணம் . இதன் சிறப்பும் பலமும் இதுவே .இந்த ஆவணம் எட்டு அத்தி யாயங்களைக் கொண்டது .

முதல் அத்தியாயம் மட்டுமே அருணன் பெயரில் வெளியாகியுள்ளது . மற் றவை கூட்டுப் படைப்பென ஊகிக் கலாம். ‘பண்பாட்டைக் கட்டமைக் கும் கூறுகள்’ என்கிற முதல் பகுதி ஆவ ணத்தின் நுழைவாயில் போல் அமைந்துள்ளது. இதில் பண்பாடு குறித்த பொது வரையறையும் செல்ல வேண்டிய திசை வழியும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது . “ தமிழகத்தில் இன்று நிலவுகிற வாழ்க்கை முறை கள் மீது அந்தப் பொதுப் பண்பாட் டின் மீது நமக்கு மரியாதை இல்லை தான்.ஆனால் மாற்றுப் பண்பாடு என்பது அந்தரத்தில் இருந்து இறங்கி வருவதில்லை என்பதை மறந்து விடக்கூடாது. அது ஏற்கனவே உள்ள பண்பாட்டின் நல்ல கூறு களை எடுத்துக் கொண்டு ,நவீன வாழ்வு தரும் புதிய நல்ல கூறுகளைச் சேர்த் துக் கொண்டு பரிணமிப்பது.”இந்த வரையறை த.மு.எ.க.ச வின் நேர்மை யான நிதானமான அடிவைப்பின் இலக்கணம் எனில் மிகை அல்ல.

‘தாய் மொழிக்கல்வி’ , ‘மதவெறி அரசியல்’ , ‘சாதியப் பாகுபாடு’ , ‘பெண் கள் மீதான வன்முறை’ , ‘ஊடக அரசி யல்’ , ‘மாற்றுப் பண்பாடு’ என ஆறு தளங்களில் பண்பாட்டு விவாதம் முன்னெடுக்கப்பட்டிருகிறது . இவை அனைத்தும் இன்றைய அரசியல் பொருளியல் வாழ்வோடு நேரடியாகப் பிணைந்தவை .ஆக , இவ்விவாதம் பண்பாட்டு அரசியல் விவாதமாக நீட்சி பெறுவது தவிர்க்க இயலாதது .தாய்மொழிக் கல்வி குறித்த வரலாற்றுப் பின்புலத்தோடும் இன் றைய நெருக்கடியோடும் இணைந்து பேசும் இந்த ஆவணம் ; செய்ய வேண் டியது என்ன என்பதையும் பட்டியலிடு கிறது .
ஆங்கிலக் கல்வி மீதான மோக மும் ஈர்ப்பும் ஏற்படக் காரணம் என்ன ? அதற்கான சமூக உளவியலின் வேர் எது ? உலக மயமாக்கலின் விளைவன் றோ இது . இதை இன்னும் உரக்க விவா திக்கவேண்டும். கல்வியில் மட்டு மல்ல எல்லா இடங்களிலும் தம்மொழி பெரும் சிதைவுக்கு ஆளாவதில் உல கமயப் பண்பாட்டு ஆதிக்கமும் ஒரு கூறல்லவா ? இது குறித்தும் பேசியாக வேண்டுமே!

‘மதவெறி அரசியலும் சேதுசமுத் திர திட்டமும்” என்கிற விவாதம் பண்பாட்டுத் தளத்திலும் அரசியல் தளத்திலும் காத்திரமானது. அவசியமா னது. இந்துத்துவ அரசியல் மூர்க்கம் பெற்று வரும் வேளையில் .விரிவாக வும் ஆழமாகவும் முன்னெடுத்துச் செல்லப்படவேண்டியது ; அதே சமயம் இஸ்லாமிய, கிறிஸ்த்துவ , இதர மத வெறியையும் சரியான கோணத்தில் சுட்டிக்காட்டாவிடில் இந்துத்துவ வெறியர்களுக்கு நாமே இடம் கொடுத் ததாகி விடும் . இதனையும் சேர்த்து இப்பகுதி கூர்மைப்படுத்தப்பட வேண் டும்.

சாதியப் பாகுபாடும் வன்கொடு மைகளும் என்கிற பகுதி காலத்தின் கட்டாயம். “சாதியத்தைப் புரிந்து கொள்ளாமல் இந்திய சமூகத்தை ஒரு போதும் புரிந்து கொள்ள முடியாது . சமப்படுத்தவும் முடியாது.
 ” என ஆவணம் சரியாக கணிக்கிறது . சாதி எதிர்ப்பை வெறும் பார்ப்பன எதிர்ப்பாக சுருக்கிவிட்ட தமிழகச் சூழல் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது . சாதியத்தைப் பாதுகாப்பதில் சடங்குகளின் பாத்திரம் குறித்து பேசப்பட்டுள்ளது ; இது குறித்து தனித்தே விவாதிக்க வேண்டி யுள்ளது .“ சாதியப் படிநிலையை வெறும் ரத்தக்கலப்பினால் மட்டுமே குலைத்து விட முடியாது என்பதைப் போலவே ரத்தக் கலப்பு நிகழாமலும் குலைத்து விட முடியாது ”எனவும் ; “தீண்டா மைக்கு எதிரான போராட்டத்தை நிலத் தில் மட்டுமல்ல மனத்திலும் நடத்த வேண் டும்”எனவும் ஆவணம் குறிப்பிட்டி ருப்பது கவனத்திற்குரியது .அதுவும் தருமபுரி நிகழ்விற்குப் பின் சாதியத்துக் கெதிரான போர் தமிழக பண்பாட்டுச் சூழலில் முக்கிய இடத்தைப் பெறு கின்றதன்றோ!சாதியமும் பெண்கள் மீதான வன் முறையும் நாம் மானுடன் எனக் கூறிக் கொள்ளும் அருகதையையே பறித்து விடுகிறது .

“மனம் எனும் பதுங்கு குழி களுக்குள் ஆளும் வர்க்க சாதிய சித் தாந்தத்தைச் சுமந்து கொண்டு பெண் விடுதலையையோ சமூக விடுதலை யையோ நோக்கி நம்மால் நகரத்தான் முடியுமா ? கொடியை ஏற்றத்தான் முடி யுமா ? அணுகுமுறை மட்டுமல்ல அடிப் படையே மாற்றப்பட வேண்டும்” என்கிற தெளிவான புரிதலோடு புறம், அகம் என இருநிலையிலும் ஆணாதிக் கத்தை அம்பலப்படுத்தி மாற்றுக்கான புள்ளிகளையும் முன்வைத்துள்ளது . வலுவான விவாதம் தேவை.கருத்துருவாக்கத்தில் இன்று பெரும் பங்காற்றும் ஊடக அரசியல் குறித்த விவாதம் துவக்கப்பட்டுள்ளது . அது போல் மாற்றுப் பண்பாட்டுக்கான சில முன்வைப்புகளும் உள்ளன .

இது தொடக்கமே . போதுமானதல்ல .பெண் களுக்கான பொதுவெளி கோயிலும் வழிபாடுகளுமே என குறுக்கப்பட் டுள்ள சமூகச் சூழலில் ; கலச வேள்வி , விளக்கு பூஜை , கூட்டுப் பிரார்த் தனை என பெண்களை மதவெறி சக்தி கள் திரட்டும் வேளையில் ; கூடிக்க ளிக்க பெண்களுக்கு முற்போக்காளர் கள் முன்வைக்கும் மாற்று என்ன என்ற கேள்வி எழுகிறது .பண்டிகைகள் , கொண்டாட்டங்கள் ஒரு சமூகத் தேவை . இவை இல்லாத உலகம் வெறு மையாக இருக்கும் . மதவெறி சக்திக ளிடமிருந்து மீட்கப்பட மக்களுக் கான புதிய கொண்டாட்டங்கள் உளப்பூர் வமாய் குடும்பம் குடும்பமாய் கொண் டாடும் நிகழ்வுகள் பற்றிய விவாதமும் முன்னெடுக்கப்பட வேண் டும்.உலகமயம் உருவாக்கியுள்ள நுகர்வுவெறிப் பண்பாடும் பண , பதவி மோகச் சூழலும் எல்லா பண்பாட்டுக் கூறுகள் மீதும் மிகவும் ஆழமான விரி வான தாக்கத்தை ஏற்படுத்தியிருக் கிறபோது அதைப்பற்றிப் பேசாமல் பண்பாட்டு விவாதம் முழுமையடை யாது ; கூர்மைபெறாது
. இதுவும் கல்வி குறித்த விவாதமும் பின்னர் மேற் கொள்ளப்படும் என முன்னுரையில் தமுஎகச மாநிலப் பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன் வாக்குறுதி தந்துள் ளார். விரைந்து செய்ய வேண்டும் என்பது நம் அவா.மொத்தத்தில் காற்றில் முழம் போடாமல் ; வெறும் வாயை மெல்லாமல் கொஞ்சம் அவல் கொடுத்திருக்கிறது இந்த ஆவணம் . சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவரும் இந்த ஆவணத் தைப் படிக்க வேண்டும் - விவாதிக்க வேண்டும் ; புதிய மதச்சார்பற்ற ஜன நாயகப் பண்பாட்டுக்கான போராட்டம் ஒவ்வொருவர் வீட்டிலும் ஒவ்வொரு வர் மனதிலும் பக்குவமாய் அதேநேரம் சமரசமின்றி நடத்தப்பட வேண்டும். அதற்கு களம் அமைத்துள்ளது இந்த ஆவணம்.










 
 

சட்டமும் தீர்வல்ல ; மதபோதனையும் மாற்றல்ல..

Posted by அகத்தீ Labels:


சட்டமும் தீர்வல்ல;
மதபோதனையும் மாற்றல்ல...

சு.பொ. அகத்தியலிங்கம்
 
“பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட கொடூரமான குற்றங்களில் தொடர்புடைய 16-18 வயதுக்கு உள்பட்ட சிறார்களையும் இந்திய குற்றவியல் சட்டத் தின் கீழ் கடுமையாகத் தண்டிக்க வேண் டும் என்ற கோரிக்கை தற்போது வலுப் பெற்று வருகிறது. ஆனால், சட்டத்தின் மூலம் மட்டுமே இத்தகைய குற்றங்களில் சிறார்கள் ஈடுபடுவதைத் தடுத்துவிட முடி யுமா என்ற கேள்விக்கு நம்மால் உறுதியான பதில் கூற முடியாத நிலையே உள்ளது.”- இவை “ சட்டம் இதற்குத் தீர்வாகாது” எனற தலைப்பில் நா.குருசாமி தினமணி நாளேட் டில் எழுதியுள்ள கட்டுரையின் முதல் பத்தி. பொதுவாக இதுசரிதான். ஆனால் இதற்கு மாற்றாக நா.குருசாமி முன்மொழிகிற யோச னைகள் பொருத்தமற்றவையாகவும் நடை முறை சாத்தியமற்றதாகவும் உள்ளன.

நா.குருசாமி கூறுகிறார், “மாறி வரும் இத்தகைய சூழல்களால், 18 வயதுக்கு உள் பட்ட சிறார்கள் தவறான பாதைக்கு திசை மாறிச் செல்கின்றனர். வெறும் சட்டங்களால் மட்டும் இத்தகைய சிறார்களை நல்வழிக் குத் திருப்பிவிட முடியாது. நமது அடிப்ப டைக் கல்வி முறையிலும், நமது கூட்டுக் குடும்ப முறையிலும் முன்னர் இருந்த நல்ல விஷயங்களை மீளாய்வு செய்து, அவற்றை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டிய அவசர அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. பள்ளிக் கல்வியில் மீண்டும் நீதிபோதனை வகுப்புகள் இடம் பெற வேண்டும். அனை த்து மதங்களின் ஆன்மிக நூல்களில் இடம் பெற்றுள்ள நல்ல கருத்துகள் மாணவர் களின் மனங்களில் ஆழமாகப் பதியும் வகை யில் அவற்றைக் கற்றுக் கொடுக்க வேண் டும். இதற்காக, கல்வியில் சிறந்து விளங்கும் நல்லாசிரியர்களையும் தேர்வு செய்து பணியில் ஈடுபடுத்த வேண்டும்.”இன்றைய கல்விமுறையில் மாற்றங்கள் தேவை என்பதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை. ஆனால் நேற்றைய கல்வி முறையோ, திண்ணைக் கல்விமுறையோ, குருகுல முறையோ இதற்கு மாற்றல்ல. சாதிய ஆதிக்க உணர்வுக்கு அடிபணிந்து போவதற்கும் பெண்ணடிமை சமூக ஒழுங்கை கட்டுக்குலையாமல் காப்பதற்குமே நேற் றைய கல்வி முறை பாடுபட்டது. இன் றைக்கு தலைகீழ் மாற்றம் ஏற்படாவிட்டா லும் நிலைமையில் முன்னேற்றம் உண்டு என்பதை மறுக்க முடியாது. ஆகவே இனி அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற வழிகாண வேண்டுமே தவிர பின்னுக்குப் போகும் பேச்சுக்கே இடம் இல்லை. பொதுவாக சீரழிவு பண்பாட்டை எதிர் கொள்ள ‘ நீதி நெறி போதனை’, ‘ஆன்மீகக் கல்வி’, ‘கூட்டுக் குடும்ப வாழ்வை மீட்டெ டுத்தல்’ எனப் பேசுவது வாடிக்கையாகி விட்டது.

ஆனால் அது தீர்வை நோக்கிய அடிவைப்பு ஆகாது. முதலாவதாக நீதி நெறி போதனைகளை எடுத்துக்கொள்வோம். பொய்சொல்லாதே, திருடாதே, புறங்கூறாதே என பொதுவாக கூறிச் செல்வது மட்டுமே நீதிபோதனை ஆகிவிடுமா? அவை மட்டும் போதுமா? இன்றைய ஏற்ற தாழ்வான சமூக அமைப்பை அப்படியே பாதுகாக்க உரு வாக்கப்பட்டவைதானே நடப்பிலுள்ள நீதி போதனைகள். பெண்களை சகமனுஷியாக மதிக்காதவைதானே நம் முன் குவிந்து கிடக்கும் நீதி நூல்கள். சாதிய ஆதிக்கத் தைக் கேள்வி கேட்கத் துணியாதவை என்பது மட்டுமல்ல; கேள்வி கேட்பதே பாவம் என்றும், குலத்தளவே ஆகுமாம் குணம் என்றும் போதிக்கும் நேற்றைய நீதி நூல்கள் இன்றைக்கு பயன்படுமா? நாலடி யார், ஏலாதி இவற்றில் நாலுவரிச் செய்யுள் ஒவ்வொன்று தவிர வேறெந்த நீதி நூல் களும் பெண்கல்வி பற்றி பேசவில்லையே! ஆகச்சிறந்த வாழ்வியல் நூலான திருக் குறள் கூட - பிறப்பொக்கும் எல்லா உயிர்க் கும் என முரசறைந்த திருக்குறள் கூட -பெண்கல்வி பெண்சமத்துவம் பேசவில் லையே! அது வள்ளுவன் குற்றமல்ல - நீதிநூல்கள் யாத்தவர்கள் குற்றமல்ல; அவர் கள் வாழ்ந்த காலத்தின் குற்றம். காலத்தை மீறிய நீதி எது? இன்றைய தேவைக்கும் சவால்களுக்கும் ஈடுகொடுக்கும் சமத்துவம் போதிக்கும் நீதி நெறிகள் - அறிவியல் ரீதி யாக வாழ்வை அணுகும் நீதி நெறிகள் - சிந்தனைகள் -கதைகள் போதுமான அளவு இல்லை என்பது மலை போன்ற உண்மை அன்றோ! சமூக அக்கறையுள் ளோர் அத்திசையில் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. ஆக இப்படி சமூகவெற் றிடம் உள்ள இன்றைய சூழலில் பொதுவாக நீதிபோதனை என்பது புதிய இளைஞரை வார்க்க உதவாது. அடுத்து மத போதனை அல்லது ஆன் மீக போதனை என்பது தீர்வாகுமா? ஆகவே ஆகாது.

இந்து மதமோ இஸ்லாமிய மதமோ கிறுத்துவ மதமோ வேறெந்த மதமோ பெண் களை எப்படிப் பார்க்கின்றது? ஆண் களுக்கு அடங்கி ஒடுங்கி வாழவேண்டிய அடிமைகளாய்த்தான் மதங்கள் பெண் களைக் காட்டுகின்றன. பெண்களைப் போகப் பொருளாகத்தானே அனைத்து மதங் களும் சித்தரிக்கின்றன. பெண் சமத்து வத்தை எந்த மதம் அங்கீகரிக்கிறது? கேள்வி கேட்பதை எந்த மதநூல் ஏற்கிறது. நம்பு, விசுவாசி எனக் கட்டளை அல்லவா இடுகிறது. சாதி, இனம், நிறம் இவற்றாலோ அல்லது வேறு எதன் பேராலோ பேதப்படுத் துவதையும் கூறுபோடுவதையும் மதம் நியாயப்படுத்துகிறது. சுரண்டலை, ஆதிக் கத்தை, அடக்குமுறையை மவுனமாக சகித் துக்கொள்ள மதநூல்களன்றோ போதிக் கிறது. தலைவிதி, சொர்க்கம், நியாயத்தீர்ப்பு என மக்களை மயக்கி; கற்பனையான மயக் கத்தில் நிகழ்கால நரகத்தின் காரணகர்த் தாக்களை அடையாளங்காணாமலோ - கண்டாலும் எதிர்க்காமலோ இருக்க வன்றோ மதபோதனைகள் துணை செய் கின்றன.
மத நம்பிக்கையின் அளவு அதி கரிக்கும் போது பிறமதத்தை இகழ்வாகப் பார்ப்பதில் தொடங்கி மத காழ்ப்புணர்வாய் மதவெறியாய் மாறுவதை நாளும் அனுபவம் சுட்டுகிறதே. மத போதனை அல்லது ஆன் மீக போதனை விஷமுறிவல்ல விஷமே அதுவன்றோ!நுகர்வுவெறியும், பணமோகமும் உச்சத் தில் இருக்கும் சமூகத்தில் கல்விமட்டும் வேறுமாதிரியாக இருக்கும் என எதிர்பார்க்க முடியுமா? இன்றைய கல்வி முறையின் அடிப்படைக்கோளாறு அதுதானே! ஒவ் வொரு மாணவனின் ஆர்வமும் ஈடுபாடும் வெவ்வேறாக இருக்கும் அதனை சமூகமும் குடும்பமும் அங்கீகரிக்கிறதா? சில குறிப் பிட்ட துறைகள், படிப்புகள் மட்டுமே உயர்ந் தது. பொன் முட்டையிடும் வாத்து என்று சமூகப் பொதுப் புத்தியில் உறைந்து போயுள் ளதால். வளரிளம் பருவ இளைஞர் / ஆண்/பெண்களின் படைப்பூக்கமும் ஆர்வ ஈடு பாடும் முளைவிடாமல் பெற்றோராலும் சமூகச்சூழலாலும் நசுக்கப்படுகிறது. ஒடுக் கப்பட்ட மனம் வேறுவடிகால் தேடுகிறது.

போதையும் இதர தீய ஒழுக்கங்களும் மண்டுகின்றன. தவறான பாதையில் துரத் துகின்றன. அது மட்டுமல்ல நமது கல்வி கேள்வி கேட்க கற்றுக்கொடுக்கிறதா? கொடுமையையை எதிர்த்து நிற்க கற்றுக் கொடுக்கிறதா? பாலின சமத்துவத்தை, மனித உரிமையை, உழைப்பின் பெருமை யை, சாதி மறுப்பை நமது கல்வியும் சமூக மும் அடிஉரமாக இடுகின்றதா? இல்லையே இது குறித்துத்தான் நாம் கவலைப் பட்டாக வேண்டும். பாவ்லோ பிரைரோ போன்ற சிந் தனையாளர்களை நாடவேண்டுமே தவிர பழமையில் பயணித்து பயனில்லை. “இது யாருடைய வகுப்பறை” என்கிற கேள்வி தான் இன்றைய கல்வியில் கேட்க வேண் டிய அடிப்படைக் கேள்வி. நாம் விரிவாகவும் ஆழமாகவும் நடத்த வேண்டிய விவாதத் தின் மையப்புள்ளி இதுதான். ஆயிஷா நட ராசனின் நூல் அந்த விவாதத்தை துவக்கி உள்ளது. அவர் வாதம் அனைத்தையும் ஏற்கலாம். எதிர்க்கலாம். கேள்விக்கு உட் படுத்தலாம். வெறும் கையால் முழம் போடு வதைவிட இது மேலானதல்லவா? இந்த விவாதம் தான் வளரிளம் பருவத்தினரை சரியான திசையில் சுதந்திரமாக நடை போடச்செய்ய பாதை துலக்கும். நா.குருசாமி கூறும்பாதைக்கு மாற்றாக இதுவே இருக் கும்.அடுத்து குருசாமி கூறுகிற இன்னொரு முக்கியமான அம்சம் கூட்டுக்குடும்பம். அவர் கூறுகிறார், “இவை எல்லாவற்றுக் கும் மேலாக, நமது கூட்டுக் குடும்ப முறை மீண்டும் தழைத்தோங்க நம்மால் இயன் றதைச் செய்ய ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். பெற்றோர் மட்டுமல்லாது தாத்தா, பாட்டி, மற்றும் ஏனைய உறவினர் களின் அரவணைப்பில் வளரும் சிறார்கள் தவறான வழிகளில் செல்வது பெருமளவு தடுக்கப்படும்! கடுமையான சட்டங்களால் அல்ல.”இதனை மற்ற அம்சங்களைப் போல எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. ஆனால் யதார்த்தம் வேறெதிராகவே உள்ளது.

சொத் துகள் கைமாறாமல் தலைமுறை தலை முறையாக பாதுகாக்க வேண்டிய கட்டாயம் -சாதியக் கட்டுமானம் குலையாமல் காப்பது -விவசாயம் மற்றும் இதர தேவைகளுக்கு தேவைப்பட்ட உழைப்பு இலவசமாக கிடைப்பது - பெண்கள் ஆண்களுக்கு அடி பணிந்து வாழ்வது என்கிற நிலப்பிரபுத்துவ தேவைகளின் மீதுதான் கூட்டுக் குடும்பம் நிலைகொண்டது. இன்றைய சமூகபொரு ளாதார வாழ்க்கைச் சூழலும் - பாலின சமத்துவத் தேவையும் கூட்டுக் குடும்பத் துக்கு சாதகமாக இல்லை. இன்றைய நவீன வாழ்க்கைக்கு தேவையான மனித உரிமை, பாலின சமத்துவம், சாதிய மறுப்பு போன்ற உயரிய விழுமியங்களோடு கூட்டுக்குடும்ப வாழ்வு அமையின் யாருக்கும் அட்டி யில்லை. அப்படி இல்லாத போது தனிக் குடும்பம் தவறல்ல.அது இன்றைய யதார்த் தம். கூட்டுக்குடும்பமோ, தனிக்குடும்பமோ எதுவாயினும் சண்டை சச்சரவில்லாமல் - ஈகோ எனப்படுகிற அகம் தலைதூக்காமல் - சொத்துக்காக அடித்துக் கொள்ளாமல் - ஜனநாயக பூர்வமாக உறவுகளைப் பேண முடிந்தால் அதுவே குழந்தைகளுக்கு நம் பிக்கையான சூழலை - பாதுகாப்பான சூழலை உருவாக்கும்.

பிள்ளைகள் குரலுக்கு செவி கொடுங்கள் - அவர்களின் படைப் பூக்கத்திற்கு தோள்கொடுங்கள் - கேள்வி கேட்க அனுமதியுங்கள் -அவர்களின் விருப்ப ஈடுபாட்டிற்கு வாய்ப்பளியுங்கள் - பிள்ளைகள் மீது நம்பிக்கை வையுங்கள் -உங்கள் நம்பிக்கையும் சமூக எதிர்பார்ப்பும் வீண்போகாது. தோளுக்கு மிஞ்சியவன் /மிஞ்சியவள் தோழர் மறவாதீர்!










 
 

விளக்குவீரா !!!

Posted by அகத்தீ Labels:





விளக்குவீரா !!!

சு.பொ.அகத்தியலிங்கம்

இந்தியா நெடுகிலும்
தேடிச் சலித்தேன்
நாகரீக மனிதர்
ஊருக்கு ஒருவரேனும்
அகப்படவே இல்லை...

இன்னும்
இந்தியா நாகரீக நாடெனச்
சொல்லித் திரியாதீர் !!

இப்படிச் சொல்லுவதால்
தேசபக்தி இல்லாதவனென்றோ
தேச விரோதி என்றோ
என்மீது முத்திரை குத்துவதில்
எனக்கு வருத்தமே இல்லை !!

எனது கவலை எல்லாம்
நாகரீக இந்தியரைத்
தேடிக் கண்டுபிடிப்பதுதான்..

சாதியை
வரதட்சணையை
தொலைக்காதவரை
நாகரீக மனிதரென்று
எப்படிச் சொல்வது ?
அருள்கூர்ந்து விளக்குவீரா !!!

எங்களுக்கு இல்லை குழப்பம்..

Posted by அகத்தீ Labels:



எங்களுக்கு இல்லை குழப்பம்..

சு . பொ .அகத்தியலிங்கம்

குழப்பம் ஊடகங்களுக்குத்தான்a
எங்களுக்கு இல்லை..

வறுமையை அளப்பது எப்படி
அளவுகோல் தேவை இல்லை
எங்கள் அனுபவம் சொல்லும்...

ஊரை இரண்டாக்குவது யார் ? எது ?
ஆராய்ச்சி எதுவும் தேவை இல்லை
எங்கள் காயங்கள் சொல்லும்..

விலைவாசியை யார் குறைப்பார்கள் ?
யாரையாவது நம்பித் தொலைக்க
நாங்கள் இன்னும் இளிச்சவாயர்களா ?

வேலையின்மை எப்போது தொலையும் ?
வாக்குறுதிகள் சோறு போடாது
எங்களுக்குத் தேவை தலைகீழ் மாற்றங்கள் !!

குழப்பம் ஊடகங்களுக்குத்தான்
எங்களுக்கு இல்லை..

அற்புத சுகமளிப்பவர் அவரா ? இவரா ?
சிபாரிசுகளும் பரிந்துரைகளும் தேவை இல்லை
உண்மையான சிகிட்சையை யாமறிவோம்..

தொழுகையும் வழிபாடும் பூஜையும் பிரார்த்தனையும்
வியாபாரமாய் அரசியலாய் வலுத்தவன் கைப்பாவையாக
கடவுளே கண்கலங்கி சூழ்நிலைக் கைதியாய்...

அடுக்களையும் பள்ளிக்கூடமும் மருத்துவமனையும் சாலைகளும்
முகமூடிகளை கழற்றி எறிந்துகொண்டிருக்கின்றன
எங்களின் அடிவயிறு எரிந்து கொண்டிருக்கிறது...

அடிவயிற்று வெப்பத்தை அளவிட இயலுமோ ?
யுகநெருப்பை பன்னீரா அணைக்கும் ?
சூடேறிக்கொண்டிருக்கிறது எங்கள் ரத்தமும் கண்ணீரும்

எங்கள் உணர்வுகளைக் கணிக்க அளக்க
எந்தக் கொம்பனுக்கும் சக்தி இல்லை - வாழ்நிலை
 அணுதினம் கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறது

.நங்கள் தெளிவாக இருக்கிறோம்
எங்கள் ரட்சகர்கள் ஊடகங்களில் இல்லை
அவரும் இல்லை இவரும் இல்லை

நாங்கள் தெளிவாக இருக்கிறோம்
நாங்கள் நிச்சயம் வாக்களிப்போம்
அது தீர்வல்ல என்பதறிவோம்..

உண்மையான மாற்று அருகில் இல்லை
வெகுதூரப் பயணத்துக்கு தயாராகிறோம்
இளைப்பாறுதலாய் இடைக்கால ஏற்பாடுகள்...

குழப்பம் ஊடகங்களுக்குத்தான்
எங்களுக்கு இல்லை..

அழகானதாம் எங்கள் கிராமம்

Posted by அகத்தீ Labels:

அழகானதா எங்கள் கிராமம் ?

- சு.பொ.அகத்தியலிங்கம்



எங்கள் கிராமம் அழகென்று

கர்வம் கொள்ள முடியலில்லை ..



                             பசுமை போர்த்திய வயல்களை

                             லேஅவுட் போட்டு விற்கிறோம் ; - ஆனால்

                              சாதிச் சனியனை விடாமல் இன்றும்

                              கட்டிக் கொண்டு அழுகிறோம்..



எங்கள் கிராமம் அழகென்று

கர்வம் கொள்ள முடியலில்லை ..

                                 ஆறு ,குளத்தை விழுங்கிவிட்டோம்

                                 ஒரு வாய்த் தண்ணிக்கு அலைகின்றோம் ; - ஆனாலும்

                                 மூட பழக்க வழக்கங்கள் ஒன்றுவிடாமல்

                                 மூட்டைகட்டி சுமக்கின்றோம்



எங்கள் கிராமம் அழகென்று

கர்வம் கொள்ள முடியலில்லை ..

                                 கழிப்பறை இல்லை சுகாதாரமில்லை

                                 வழிந்தோடும் சாக்கடை வண்டி வண்டியாய்க்  குப்பை

                                 மூக்கைமூடி வாழ்ந்தாலும் - கோவில்

                                 சண்டையில் மண்டை உடைகிறோம்.



எங்கள் கிராமம் அழகென்று

கர்வம் கொள்ள முடியலில்லை ..

                                 வயிற்றைக் கழுவவும் வேலையில்லை

                                 பஞ்சம் பிழைக்கப் பட்டிணம் போனோம்

                                 சாதி வீம்பை விட்டுவிடாமல் மூடப் பகைமையை

                                 நெஞ்சில் சுமந்தே செல்கிறோம்



எங்கள் கிராமம் அழகென்று

கர்வம் கொள்ள முடியலில்லை ..

                                     ஊரையும் சேரியையும் இணைக்கும்

                                     சாலையோ பாதையோ  உண்டு நிச்சயம்

                                     உள்ளத்தை இணைக்கவோ ஒர்வழி இல்லை

                                     சுருங்கிய உள்ளம் விரிந்தபாடில்லை.

எங்கள் கிராமம் அழகென்று

கர்வம் கொள்ள முடியலில்லை ..

                                                                        - நன்றி : தீக்கதிர் - வண்ணக்கதிர்  27-10-2013

                                                                                  



திருமண நாளில்...

Posted by அகத்தீ Labels:





திருமண நாளில்...

இன்று நான் சி.கலாவதியை என் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்ட இனிய நாள் . சென்ற ஆண்டு இதே நாளில் பதிந்ததை திரும்பவும் அசைபோடுகிறேன்
[ கீழுள்ள சுட்டியை அமுக்கி அதனை வாசிக்க வேண்டுகிறேன் ]


மகன் திருமணம் சாதிமறுப்பு காதல் திருமணமாய் நடந்தேறியது  ; இந்த ஓராண்டில் என் வாழ்வில் முக்கிய நிகழ்வாகும்

மகன் மருமகளோடு பெங்களூர் சென்றுவிட்டோம் ; எனினும் என் சமூகப்பணியும் பத்திரிகையாளர் பணியும் சென்னையும் பெங்களூருமாய் மாறிமாறித் தொடர்கிறது .

கழுத்தை நெரித்த சிக்கல்களிலிருந்து பெருமளவு விடுபட்டுவிட்டோம் .
வாழ்வைத் திரும்பிப் பார்க்கிறபோது இயன்றவரை ஒரு நேர்மையாக லட்சியபூர்வமாக வாழ்ந்திருக்கிறோம் .தவறுகளும் பிழைகளும் போராட்டங்களும் இல்லாமல் வாழ்க்கை இல்லை . நாங்களும் விதிவிலக்கல்ல . ஆயினும் திரும்பிப் பார்க்கும் போது மனத்திருப்தி இருக்கிறது . அதுதான் எம் வாழ்க்கை வெற்றி எனபதன் அளவுகோல் .

வாழ்க்கையில் முக்கால் பகுதியைத் தாண்டிவிட்டோம் .மீதமுள்ள பகுதியையும் சமூகத்துக்கும் குடும்பத்துக்கும் பயனுள்ளபடி நிச்சயம் தாண்டுவோம்..

மகள் ,மகன் , மருமகன் , மருமகள் , பேரன் , பேத்தி எல்லோரும் அன்பைப் பொழிகிறார்கள் ; தோழமையும் நட்பும் சூழ நிற்கிறது ;கட்சி [ சிபிஎம்] வாழ்வும் குடும்ப வாழ்வும் முரணின்றி தொடர்கின்றது ;பதவிப் பொறுப்புகளிலிருந்து சுயமாக விலகிக் கொண்டாலும் சமூகப் பொறுப்பையும் லட்சியக் கடமையையும் ஒல்லும் வகையெல்லாம் ஆற்றுகிறோம் .

32 ஆண்டுகளுக்கு முன் வாழ்க்கைத் துணை என்பதுதான் சரியான சொல்லாட்சியாகவும் ; அன்றையப் புரிதலாகவும் இருந்தது ; இன்றைக்கு வாழ்க்கை இணையர் என்கிற சமுத்துவப் புரிதலாகவும் சொல்லாட்சியாகவும் பரிணமித்துள்ளது . ஆம் , எம் வாழ்விலும் அப்படித்தான் .
பசுமையான நினைவுகளோடும் வாழ்க்கை கற்றுக் கொடுத்த பாடங்களோடும் பயணம் தொடர்கிறோம் .  

வாழ்த்திய நெஞ்சங்கள் அனைத்திற்கும் நன்றி .

உயர் கல்வியின் வரலாறாகவும்...

Posted by அகத்தீ Labels:



உயர் கல்வியின் வரலாறாகவும்...

சு.பொ. அகத்தியலிங்கம்

குழந்தைசாமி என்கிற கல்வி சார் ஆளுமை யின் வாழ்க்கை சவால்களும் சாதனைகளும் ஒவ் வொரு தமிழரும் அறியவேண்டிய அரிய செய்தியாகும் . தனிமனித வரலாறு என்ற வரையறையைத் தாண்டி அண்ணா பல்கலைக் கழக வரலாறாகவும் ; தமிழக உயர் கல்வியின் வரலாறாகவும் ; தமிழ கத்தில் பல்கலைக் கழகங்களின் வரலாறாகவும் இந்நூல் விரிவு பெற்றிருக்கிறது எனில் அது மிகையாகாது .என்னுரை என்கிற தலைப்பில் வா.செ . எழுதியுள்ள கருத்தாள மிக்க உரை வெறுமே வாசிப்ப தற்கு மட்டுமே உரியதன்று, அதற்கும் அப்பால் ஒரு நெடிய விரிந்த, மனம் திறந்த விவாதத்திற்கும் உரியது .

மொழிப் பிரச்சனை , உயர்கல்வியின் முன்னுள்ள சவால்கள் , சமுதாயம் எதிர் கொள்ளும் சாதி நஞ்சு இவை குறித்து உரத்த சிந்தனை களை விதைத்துள்ளார் . “அரசமைப்பு முறை நடைமுறைப்படுத்தப் படுவதைத் தாமதிக்கலாம் ; ஆனால் தடுத்துவிடமுடியாது”. என்று கூறும் வா.செ. இந்தியா வின் அரசமைப்பில் இந்தி ஆட்சிமொழி யாவது தவிர்க்க முடியாது என்கிற கசப்பான உண்மையை அங்கீ கரித்து ; “இந்திய அரசமைப்பில் மாநில மொழிகட்கு இரண்டாம் இடம் தவிர்க்க இயலாது .அந்த இரண்டாமிடமும் கண்ணியமாக இருக்க வேண்டுமெனில் கீழ்கா ணும் அலுவல்களிலாவது தமி ழும் அல்லது மாநில மொழியும் பயன்படுத்தப்பட வேண்டும் ” என நடைமுறை சாத்தியமான வழி காட்டுதல்களை முன்வைக்கிறார்.

உணர்ச்சிகளை கொம்புசீவி முட்டிக்கொள்ளாமல் தமிழக மொழிக்கொள்கை குறித்த விவா தத்தை துவக்கிட வழிகாட்டியுள் ளார் . .அறிவார்ந்த முன்னெடுப்பு. “ உலக மக்கள் தொகையில் 16 சதவீதத்தினர் இந்தியாவில் இருக் கிறார்கள் . ஆனால் உலக அறிவி யல் ஆய்வாளர்களில் இந்தியர்கள் 2 சதவீதம்தான். இந்தியாவில் ஒரு மில்லியன் மக்கட்கு 137 பேர்தான் ஆய்வாளர்கள். இந்த எண்ணிக்கை சீனாவில் 1070, அமெரிக்காவில் 4663 , ஜப்பானில் 5573 ” எனக் கவலையோடு வா. செ. உயர்கல்வி குறித்து ஒரு ஸ்கேன் ரிப்போர்ட் தருகிறார். சீனாவோடு ஒப்பிட்டு நாம் செல்ல வேண்டிய தூரத்தை இடித்துக் காட்டுகிறார் .

கல்வி சமூகத்திலும் அரசியல் தளத்திலும் விவாதித்து அரசியல் உறுதியோடும் கல்வி அக்கறையோடும் முடிவெடுக்க வேண்டிய தலையாயப் பிரச்சனை.தீக்குணம் அனைத்தினுள்ளும் தீயதாம் சாதிப்பற்று குறித்து கண்ணீர் உகுத்து வா.செ . தன் கவ லையை, கோபத்தை நச்செனப் பதிவு செய்துள்ளார் . “பயணத் தின் சுமையைக் குறைக்க நான் மேலே குறிப்பிட்ட பாரங்களை இறக்கி வைக்க வேண்டும் என்பது என் வாழ்க்கை வரலாறு பற்றிய பதி வின் நோக்கம் .” என்கிறார் . அதில் வென்றுள்ளார் என்பதை இந் நூலைப் படித்து முடிக்கும் அனை வரும் ஒப்புக்கொள்வர் .

வாங்கலாம்பாளையத்தில் மாடு மேய்த்த அனுபவம் தொடங் கி அண்ணாபல்கலைக் கழகம் , மதுரை பல்கலைக் கழகம் , இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக் கழகம் , யுனெஸ்கோ என ஒவ்வொன்றி லும் உயர் பொறுப்பில் பணியாற்றிய அனுபவம் ஈறாக 75 அத்தியாயங் களில் வா.செ.வரலாறு நீள்கிறது.இளமையில் கடும் சிரமத் தோடு கல்வி பயின்ற வா.செ வின் அனுபவமும் வாழ்நாள் முழுவ தும் கிராமப்புற மாணவர்கள் பயன் பெற வேண்டும் என்கிற உந்துதலும் கல்விமேம்பாட்டில் தீவிரமான பங் களிப்பும் இந்நூலை வாசிக்கிறவர் யாராயினும் அவரை சுண்டி ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.

குறிப்பாக எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் வா. செ. முயற்சியில் ஊழல் முறைகேட்டை ஒழித்து பரவலாக அனைத்து மாணவர்களும் பயன் பெற நுழைவுதேர்வு வழிகாணப்பட் டது மிக முக்கிய பாய்ச்சல் முன் னேற்றமே ; அந்த நுழைவுதேர்விலும் சிக்கல்கள் ஏற்பட்டு பள்ளிஇறுதி யாண்டு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு என்றானது அடுத்த கட்டம் ; எது எப்படியிருப்பினும் நேர்முகத் தேர் வில் தலைதூக்கும் சிபாரிசு சலுகை ஒழிந்து ஒரு கறாரான அளவுகோல் உருவானது மிக முக்கியம் . இதில் வா.செ முன்கை எடுத்த நுழைவுதேர் வுக்கு காத்திரமான பங்குண்டு . இந்நூல் மூலம் இதனை அறிகிறோம் .அண்ணா பல்கலை உருவாக எவ் வளவு நிர்வாகத் தடைகள், தாமதங்கள் ; அனைத்தும் பொறுமையாக வும் நுட்பமாகவும் எதிர்கொள்ளப்பட்ட விவரங்கள் நிச்சயம் தமிழ்கூறும் நல் லுலகம் அறியவேண்டிய அரிய செய் திகளே.

குடியரசு தலைவராய் திகழ்ந்த அப்துல் கலாம் எழுதிய அக்னிச் சிறகுகள் எனும் சுயசரிதையில் விண் வெளி ஆய்வில் ஏவுகணை செலுத்துவதில் பெறப்பட்ட வெற்றியின் பின்னா லுள்ள வலியும் - நிர்வாக ரெட்டேப் பிசத்தை எதிர்கொண்டு போராடி வென்றதையும் அறியலாம் . அதே போல் உயர்கல்வித்துறையில் தற் போது ஈட்டப்பட்டுள்ள வெற்றியும் தனக்கே உரிய வலியை காயத்தை போராட்டத்தைக் கொண்டுள்ளதை வா . செ . வரலாற்றூடே அறிய முடிகி றது இவ்விரு புத்தகங்களையும் பெரும் பதவிகளை வகிப்போர் கட்டாயம் வாசிப்பது அவசியம் .மனைவியின் நியாயமான பதவி உயர்வை தடுத்ததும் , மகன் பொறியி யல் கல்வி ஓராண்டு நீடிப்பதில் உறுதிகாட்டியதும் ; சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராய் இருக்கவேண்டும் என்பதை வா. செ . கறாராக பற்றி நின்றதை பறை சாற்று கின்றன . இவர் பெற்ற விருதுகளின் பட்டியலும் வகித்த பொறுப்புகளின் பட்டியலும் மலைக்க வைக்கின்றன விருதுகளும் பரிசுகளும் நிறையப் பெற்றிருந்தும் பாராட்டுவிழாக்க ளைத் தவிர்த்தது அருங்குணமாகும். மு.வ குறித்தும் இதுபோன்ற செய்திஉண்டு.

பாராட்டு போதை, புகழ் போதையில் மயங்காதிருக்க அசாத்திய மன உறுதி வேண்டும். சான்றோர்களிடமே இதனைக் காண இயலும்.நீரியல் துறை சார்ந்த வல்லுநர் ஆய்வாளர் ஆயினும் தமிழ்மீது இவர் கொண்ட காதல் அளவற்றது . 15 கவிதை நூல்கள், 16 உரைநடை நூல்கள் தமிழிலும் , ஒரு கவிதை நூல் உட்பட ஏழு நூல்கள் ஆங்கிலத்தி லும் யாத்துள்ளார் . இவர் எழுதிய மானுட யாத்திரை என்கிற காவியம் இரண்டு பாகங்கள் பொருண்மையி லும் அழகியலிலும் புதுமை முயற்சி யாகும். மானுட வரலாற்றை அறிவியல் பூர்வமாக அதிலும் கவிதையாக தந்தது இதற்கு முன்னர் யாரும் செய்யாத முயற்சியாகும். இந் நூல் குறித்து இப்பகுதியில் ஏற் கெனவே விரிவான அறிமுகம் எழு திவிட்ட தால் இங்கு இத்துடன் நிறுத்திக் கொள்கிறோம். தமிழ் எழுத்து சீர்திருத்தம் குறித்து இவரது முன்மொழிவு கவனிப்புக் குரியது.சுவையான செய்திகளும் ஏராள மான தகவல்களும் நிரம்பிய இந்த வாழ்க்கை வரலாற்று நூல் ஆழ்ந்த வாசிப்புக்குரியது . சாதிக்கத் துடிக் கும் இளைஞர்களுக்கு ஒரு அரிய கையேடு . தன்வரலாறாகவே இந்நூல் எழுதப்பட்டிருந்தால் இன்னும் வலுவாக இருந்திருக்குமோ?

ஆடு, மாடு மேய்ப்பதில் தொடங்கிஅண்ணா பல்கலை தாண்டி...!வா.செ.குழந்தைசாமி வாழ்க்கை வரலாறு,பதிப்பாசிரியர் : ராணிமைந்தன்,வெளியீடு : பாரதி பதிப்பகம்,126/108 , உஸ்மான் சாலை ,தியாகராய நகர் , சென்னை 600 017.பக் : 614 + 36 , விலை : ரூ .349

நன்றி: தீக்கதிர் - புத்தக மேசை 20 -10 - 2013

நரம்புகளை முறுக்கேற்றும் சிந்தனை கூரேற்றும்

Posted by அகத்தீ Labels:

 
 
 
 
 
நரம்புகளை முறுக்கேற்றும் 
சிந்தனை கூரேற்றும்
 
சு. பொ. அகத்தியலிங்கம்

 "வரும் அவரது தலை முறை யினரும் எங்களுடன் இல்லாது போகும் ஒரு நாள் வரும்போது , அந்த சிந்தனைக ளையும் கோட்பாடுகளையும் தம்மு டையதாக கியூப மக்கள் மாற்றியிருப் பார்கள்  என நான் நிச்சயமாகக் கூறுகி றேன் ." என அணிந்துரையில் ஃபிலிப் பெரொஸ் ரோக் கூறியிருப்பது கவனத்திற்குரியது . அந்த சிந்தனை களை நாம் அறிய இந்த 28 காப்பிய உரைகளும் உதவும் எனில் மிகை அல்ல . 5000க் கும் மேற்பட்ட  உரைகளி லிருந்து இந்த 28 உரைகளை தேர்வு செய்திருப்பதொன்றே இதன் முக் கியத்துவத்தை உரைக்கப் போதுமா னது. நூலின் தலைப்பே உள்ளடக் கத் தையும் வீச்சையும் தன்னகத்தே கொண்டிருக்கும் போது நூல் அறி முகமொன்று தேவையா? என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது ; ஆயி னும் யாம் பெற்ற இன்பத்தை வாசகர் கள் பெற விண்டுரைப்பது வழக்கம் தானே!!
 
90 பக்கம் கொண்ட முதல் உரை  வரலாறு என்னை விடுதலை செய் யும் என்பதாகும். மன்கடா தாக்குத லில் கைதாகி பாடிஸ்டா என்கிற ராணுவ சர்வாதிகாரியின் விசாரணை கொட்டடியில் காஸ்ட்ரோ சிங்க மென சிலிர்த்து வாதிட்ட உரை - 36 ஆண்டுகளுக்கு முன் வீ.பா.கணே சனின் சீரிய மொழிபெயர்ப்பில் படித்தது . மீண்டும் படிக்கும் போதும் அதே உத்வேகம் . இளைய தலை முறை அவசியம் வாசிக்க வேண்டிய  உரை.
 
புரட்சி என்றால் என்ன ? கியூபப் புரட்சி எப்படி நிகழ்ந்தது ? எவ் வாறு பாதுகாக்கப்படுகிறது ? முதலா ளித்துவம்எத்தகையது?அமெரிக்கப் பேரரசு எவ்வளவு வஞ்சகமானது , கொடியது ?அணிசேரா இயக்கம் ஏன் ?கோரிக்கைகள்  எவை ? இப்படி எழும் பல கேள்விகளுக்கு எளிமையாய் , உணர்ச்சிகரமாய் , மலைக்க வைக்கும் புள்ளிவிபரங்க ளுடன் இந்நூல் பதில் சொல்கிறது. காஸ்ட்ரோவின் வரலாற்றுப் புரித லும், தத்துவத் தெளிவும்,  மக்கள் மீதான அசைக்க முடியாத பற்றும் நம்பிக்கையும் அடடா ! அடடா! நரம்பை முறுக்கேற்றும் சிந்தனை யைக் கூரேற்றும் உரைகள் எனில் மிகை அல்ல.
 
 " இன்று உலகம் ஓர் போர்க்களம் எல்லா இடங்களிலும் எல்லா கண்டங் களிலும் , எல்லா நிறுவனங்களிலும் , எல்லா அமைப்புகளிலும் அது போர்க் களமாகவே உள்ளது ."  என்கிற காஸ்ட் ரோ ,அதனை எதிர்கொள்ள சிந்தனை யை வளப்படுத்துவதும் வலுப்படுத்துவ தும் மிக மிக அவசியம் என்கிற திசை யில் மக்களை சிந்திக்கச் செய்ய ஆற்றிய உரைகள். இவை நம்மையும் சிந்திக்கச் செய்யும்.
 
 "ஒவ்வொரு புரட்சியாளரின் கட மையும் புரட்சி செய்வது .  அமெரிக் காவி லும் ஏன் உலகம் முழுவதிலும் புரட்சி வென்றே தீரும் என்பதுவும் அறிந்ததே ! ஆனால் தமது வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு ஏகாதிபத்தியத் தின் சடலம் நம்மைக் கடந்து செல்லுமென காத்துக்கிடப்பது புரட்சியாளனின் வேலை அல்ல" என்றார் . அதே சமயம் அவரின் கனவு என்னவாக இருந்தது ?
 
 "நாங்கள் கம்யூனிச சமூகத்துக்காக மட்டும் ஆசைப்படவில்லை அனைத்து நாடுகளுக்கும் சம உரிமையுள்ள ஒரு கம்யூனிச உலகுக்காக ஆசைப்படுகி றோம் .  எந்த நாட்டுக்கும் ரத்து அதிகா ரம் இல் லாத ஒரு கம்யூனிச உலகுக்காக ஆசைப் படுகிறோம் . முதலாளித்துவ உலகம் உள் முரண்பாடுகளால் கிழிந்து போயிருப்பது போன்ற சித்திரத்தை நாளைய கம்யூனிச உலகம் அளிக்காது . அனைத்துபெரிய, சிறிய நாடுகளுக்கும் சம உரிமையுள்ள ,சுதந்திர நாடுகளைக் கொண்ட சுதந் திர சமூகம்தான் எமது நம்பிக்கை ." அதை உறுதிப்படுத்துவன தாம்இவ்வுரைகள்.
சாதாரணமாக நெடிய உரைகள் அலுப்பூட்டும் ; அதிலும் புள்ளிவிப ரங்கள், வரலாற்றுத்தகவல்கள் நிரம்பிய உரை எனில் கொட்டாவியை வரவழைத் துவிடும் ; ஆனால் புள்ளிவிவரங்களைக்  கூட உணர்ச்சியை கொம்பு சீவும் விதத் தில் சொல்ல முடியும் - வரலாற்றுத்தக வல்களை எழுச்சியூட்டும் விதத்தில் விவரிக்க முடியும் - நெடிய உரை மூலம் கேட்ப வரை தன் சிந்தனை யோட்டத்தோடு இயக்க முடியும் என நிரூபிப்பவை காஸ்ட் ரோவின் உரைகள் . ஆனால் ஒரு பெரும் ரகசியம். உண்மைகளின் அணிவகுப் பாய் அவர் உரை அமைவதால் உள்ளத்தை அவரால்  கொள்ளையடிக்க முடிந்தது .நான் இவ்வுரைகளில் என்னைப் பறி கொடுத்தேன்.. நீங்களும் பறிகொடுங் கள்.. எடுத்துக்காட்டாக ;
 
"..உலகில் இராணுவச் செலவு 300 பில்லியன் டாலரை விடவும் அதிகம் . 300 பில்லியன் டாலர்களைக் கொண்டு 400 மில்லியன் குழந்தைகளுக்காக 6,000, 000 பள்ளிகளை கட்ட முடியும் ; 300 மில்லியன் வசதியான வீடுகளைக் கட்ட முடியும் ; 18 மில்லியன் படுக்கைகளைக்  கொண்ட 30,000 மருத்துவமனைகளைக் கட்டமுடியும் ; 20 மில்லியன் தொழிலாளர் களுக்கு வேலையளிக்கக் கூடிய 20,000 தொழிற்சாலைகளை கட்ட முடியும் ; அல்லது 150 மில்லியன் ஹெக்டேர் நிலத் துக்கு பாசன வசதி அளிக்கலாம் ;அதைச்  சரியான தொழில் நுட்பத்தைக் கொண்டு உருவாக்கினால் ஒரு கோடி மக்களுக்கு உணவளிக்கலாம் . மனித இனம் இவ் வளவு பெரிய தொகையை ஓவ்வொரு வரு டமும் இராணுவச் செலவில் வீணடிக் கிறது ."
 
அவர்  யாருக்காகப் பேசினார் ? கேளுங் கள் ; " இந்த உலகில் ஒரு கவளம் சோறு  கூட கிடைக்காத குழந்தைகள் சார்பாக நான் பேசுகிறேன் . மருந்து கிடைக்காத நோயாளிகள் சார்பாக பேசுகிறேன் . உயிர் வாழும் உரிமையும் மரியாதையும் மறுக்கப்பட்டவர்கள் சார்பில் பேசுகி றேன் ." இதைவிட தெளிவாக எப்படிக் கூறுவது ?
இன்னும் விளக்கமோ, விவரமோ விண்டுரைத்தலோ தேவையா ? யாருடைய பரிந்துரையும் தேவைப்படா மலே வாசகனைத் தூண்டும் நூலுக்கு ஏன் அறிமுகம் ?



ஃபிடல் காஸ்ட்ரோ பேருரைகள்,
தமிழில் : கி. ரமேஷ் ,
வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,
421 , அண்ணா சாலை , தேனாம் பேட்டை, சென்னை - 600 018 .
பக் : 672 , விலை : ரூ .420/- 

காமராஜர் : ஐம்பெரும் காப்பிய குணங்கள்

Posted by அகத்தீ Labels:


 காமராசர் : ஐம்பெரும் காப்பியக் குணங்கள்









சு.பொ.அகத்தியலிங்கம்

வாழும் தலைவரைப் பற்றி புகழ்ந்துரைப்பது பலனை எதிர்பார்த்து செய்யும் பாசாங்குத்தனம். மறைந்த தலைவரைப் பேசுவது அப்படி ஆகாது . பெருந்தலைவர் காமராசரை இப்போது முன்னிறுத்திக் காட்டுவது நிச்சயம் கைமாறு கருதாகக் கடமையாகும்.

ஒரு கம்யூனிஸ்ட் என்கிற முறையில் எனக்கு காமராசரின் அரசியல் நிலைபாடுகளில் மாறுபாடான கருத்துகள் நேற்றும் உண்டு . இன்றும் உண்டு . ஆனால் அவரின் தேசபக்தியும், அடித்தட்டு மக்கள் மீதான பரிவும் சந்தேகத்திற்கே இடமில்லாத சிகரம். அவர் குறித்து நிறைய பேசலாம். எழுதலாம் . எனினும் ஐம்பெரும் காப்பிய குணங்களை மட்டும் இங்கே சுட்ட விழைகிறேன்.

சுதந்திர இந்தியாவில்  தீட்டப்படும் எந்தத் திட்டமானாலும் அது கடையனுக்கும் கடையனாய் உள்ள தரித்திர நாராயணர்களுக்கு உதவுவதாக இருக்கவேண்டும் என்றார் மகாத்மாகாந்தி . தோழர் இ எம் எஸ் நம்பூதிரிபாடு அவர்கள் கேரள மாநிலத்தின் முதல்வராய் பொறுப்பேற்றுக் கொண்டபோது, மாநில அரசின் பட்ஜெட்டில் ஏறத்தாழ 30 விழுக்காடு நிதியை ஆரம்பக் கல்விக்கு ஒதுக்கி வழிகாட்டினார் ; கிட்டத்தட்ட அதே போல் ஆரம்பக் கல்விக்கு நிதி ஒதுக்கியவர் காமராசர் . ஒருவர் கம்யூனிஸ்ட். இன்னொருவர் காங்கிரஸ். ஆனால் இருவரும் தரித்திர நாராயணர்களை கைதூக்கிவிட கல்வி ஒரு நெம்புகோல் என உளப்பூர்வமாக உணர்ந்து செயலாற்றியவர்கள். இன்றைக்கு கல்விக்கு செலவிடுவதை பெரும் செலவாக கருதி ஆட்சியாளர்களும் பொருளாதார நிபுணர்களும் புலம்புகின்றனர் . கல்விக்கு செலவிடும் பணமென்பது வருங்காலத்திற்கான முதலீடு என்கிற தீர்க்கமான பார்வையோடு செயல் பட்டவர்கள் இந்த இருபெரும் தலைவர்களும்.

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரால் மிகச் சிறிய அளவில் பிரிட்டிஷ் ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் துவங்கப்பட்ட ஏழை மாணவருக்கான மதிய உணவுதிட்டம், பின்னர் தொலைநோக்கோடு தமிழகம் தழுவிய மதிய உணவுத்திட்டமாய் காமராஜரால் அறிமுகமானது. இதுதான் மிகப்பெரிய அளவில் சத்துணவுத் திட்டமாக - நாடே வியந்து போற்றும் திட்டமாக எம் ஜி ஆரால் உருப்பெற்றது . கல்வியின் மீதும் அதனை ஏழைகள் பெறவேண்டும் எனவும் காமராசர் காட்டிய அக்கறை அவரின் முதல் காப்பிய குணம் எனில் மிகை அல்ல.

 “ இந்திய முயற்சியில்  - இந்திய மூலதனத்தின் அடிப்படையில் உருவாகும் தொழில் முன்னேற்றத்தில்தான் நாட்டின் உண்மையான பொருளாதாரதார வளர்ச்சி அடங்கியுள்ளது “ என்று 1885-90 களில் தாதாபாய் நெளரோஜி போன்றவர்கள் கூறிவந்தனர் . தொழில் வளர்ச்சி மீதான - அது முதலாளித்துவ வளர்ச்சியாக இருப்பினும் - அளப்பரிய ஈர்ப்பு விடுதலைப் போரில் நம் தலைவர்களிடம் கருக்கொண்டது . அந்த பட்டறையின் வார்ப்பான காமராசரிடம் அந்த ஈர்ப்பு செயல் வேகத்துடன் வெளிப்பட்டது . கிண்டி தொழிற்பேட்டையும் சிவகாசியும் இன்னபிற சிறுதொழில் மையங்களும் இவரின் புகழ்பாடி நிற்கும். இது இவரின் இரண்டாவது காவிய குணம்.

அடுக்கு மொழி துடுக்கு மொழி இவரறியார் . தெற்கு சீமையின் பாமர மொழியில் பேசினார். பள்ளிப்படிப்பு மிகக்குறைவு. ஆனால் அகில இந்தியாவும் இவர் தலைமை ஏற்றது. எதனால் ? எப்படி ?  எளிமை, கைக்கொண்ட அரசியலில் உறுதி . ஆம் அதுதான் காமராசரின் பலம் . தோற்றத்திலும் பேச்சிலும் செயலிலும் காந்திய சகாப்தத்தின் தொடர்ச்சியான எளிமையும் உறுதியும் இவரிடம் இறுதிவரை நிறைந்திருந்தது. இன்றைய அரசியலில் அரிதான ஒன்றாக மாறிவிட்ட ஒன்றல்லவா அது !

காமராசரை விருதுநகரில் தோற்கடித்தவர் பெயரை நாளைய தலைமுறை வரலாற்றை ஆய்வு செய்துதான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும் . ஆனால் காமராசர் பெயர் இருக்கும். ஆவடி சோசலிசம் குறித்து விமர்சனங்கள் உண்டு. எனினும் வரலாற்றில் அதற்கொரு இடம் உண்டு . அந்த வரலாற்றில் காமராஜர் பெயரும் நீக்கமற நிறைந்திருக்கும். இருபதாம் நூற்றாண்டின் முதல் எழுபதைந்தாண்டு இந்திய தமிழக வரலாற்றை எழுதுகிற யாரும் காமராசரை மறைத்துவிடவோ மறந்துவிடவோ இயலாது. வயதானாலும் பதவியைவிட மனதில்லாத இன்றைய தலைமுறைக்கு தெரியுமா கே பிளான். அதுதான் அடுத்த தலைமுறைக்கு மூத்த தலைமுறை வழிவிட்டொதுங்கும் திட்டம். இதை மற்றவர்களுக்கு  முன்மொழிந்தவரல்ல காமராசர்; தானே பதவி விலகி முன்னுதாரணமானவர் . இந்த பதவி பற்றற்ற அருங்குணம் காப்பிய வகையன்றோ!

தானே முன்மொழிந்து பிரதமராக்கிய இந்திராகாந்தி சர்வாதிகாரப் பாதையில் நடைபோடத் துவங்கியபோது - அவசர காலத்தைப் பிரகடனப்படுத்திய போது மனம் நொந்தவர் ; எதிர்த்தவர் ; அந்த மனப்புழுக்கமே அவரின் மரணத்தை விரைவுபடுத்திவிட்டது. எதை இழந்தாலும் எதிர்த்துப் போராட ஜனநாயக உரிமை இருந்தால்  – அது முதலாளித்துவ ஜனநாயகமாக இருப்பினும் போராடித் திரும்பப் பெறலாம். ஆனால் அந்த ஜனநாயகத்தையே இழந்துவிட்டால் அது பெரும் துயரமல்லவா ? கையறு நிலை அல்லவா ? எந்த ஜனநாய உரிமைகளுக்காக சுதந்திரப் போரில் கண்ணீரும் செந்நீரும் சிந்தினோமோ அந்த உரிமைகள் பறிபோவதை யார் பொறுப்பர் ? விடுதலைப் போரின் பிரசவ வலியை நன்கு உணர்ந்த காமராசர் ஜனநாயக உரிமைக்காக கண்கலங்கி வருந்தியது இயல்பான தேசபக்தி - ஜனநாயக விழைவு . அது அவர் குருதியில் கலந்த காப்பிய குணம் .

இந்த ஐம்பெரும் குணங்கள் அருங்காட்சியகப் பொருளாகிவிடாமல் சற்றேனும் இன்றைய அரசியலில் தலைநீட்டுமானால் அதுவே பெருவெற்றியாகும். அதற்கு காமராசரை பலகோணங்களில் அறிய முயல்வோம்.

[ காமராஜர் பிறந்த நாள் மலருக்காக பேரா.சுபாஷினியிடம் எழுதிக்கொடுத்த கட்டுரை]