உயர் கல்வியின் வரலாறாகவும்...

Posted by அகத்தீ Labels:



உயர் கல்வியின் வரலாறாகவும்...

சு.பொ. அகத்தியலிங்கம்

குழந்தைசாமி என்கிற கல்வி சார் ஆளுமை யின் வாழ்க்கை சவால்களும் சாதனைகளும் ஒவ் வொரு தமிழரும் அறியவேண்டிய அரிய செய்தியாகும் . தனிமனித வரலாறு என்ற வரையறையைத் தாண்டி அண்ணா பல்கலைக் கழக வரலாறாகவும் ; தமிழக உயர் கல்வியின் வரலாறாகவும் ; தமிழ கத்தில் பல்கலைக் கழகங்களின் வரலாறாகவும் இந்நூல் விரிவு பெற்றிருக்கிறது எனில் அது மிகையாகாது .என்னுரை என்கிற தலைப்பில் வா.செ . எழுதியுள்ள கருத்தாள மிக்க உரை வெறுமே வாசிப்ப தற்கு மட்டுமே உரியதன்று, அதற்கும் அப்பால் ஒரு நெடிய விரிந்த, மனம் திறந்த விவாதத்திற்கும் உரியது .

மொழிப் பிரச்சனை , உயர்கல்வியின் முன்னுள்ள சவால்கள் , சமுதாயம் எதிர் கொள்ளும் சாதி நஞ்சு இவை குறித்து உரத்த சிந்தனை களை விதைத்துள்ளார் . “அரசமைப்பு முறை நடைமுறைப்படுத்தப் படுவதைத் தாமதிக்கலாம் ; ஆனால் தடுத்துவிடமுடியாது”. என்று கூறும் வா.செ. இந்தியா வின் அரசமைப்பில் இந்தி ஆட்சிமொழி யாவது தவிர்க்க முடியாது என்கிற கசப்பான உண்மையை அங்கீ கரித்து ; “இந்திய அரசமைப்பில் மாநில மொழிகட்கு இரண்டாம் இடம் தவிர்க்க இயலாது .அந்த இரண்டாமிடமும் கண்ணியமாக இருக்க வேண்டுமெனில் கீழ்கா ணும் அலுவல்களிலாவது தமி ழும் அல்லது மாநில மொழியும் பயன்படுத்தப்பட வேண்டும் ” என நடைமுறை சாத்தியமான வழி காட்டுதல்களை முன்வைக்கிறார்.

உணர்ச்சிகளை கொம்புசீவி முட்டிக்கொள்ளாமல் தமிழக மொழிக்கொள்கை குறித்த விவா தத்தை துவக்கிட வழிகாட்டியுள் ளார் . .அறிவார்ந்த முன்னெடுப்பு. “ உலக மக்கள் தொகையில் 16 சதவீதத்தினர் இந்தியாவில் இருக் கிறார்கள் . ஆனால் உலக அறிவி யல் ஆய்வாளர்களில் இந்தியர்கள் 2 சதவீதம்தான். இந்தியாவில் ஒரு மில்லியன் மக்கட்கு 137 பேர்தான் ஆய்வாளர்கள். இந்த எண்ணிக்கை சீனாவில் 1070, அமெரிக்காவில் 4663 , ஜப்பானில் 5573 ” எனக் கவலையோடு வா. செ. உயர்கல்வி குறித்து ஒரு ஸ்கேன் ரிப்போர்ட் தருகிறார். சீனாவோடு ஒப்பிட்டு நாம் செல்ல வேண்டிய தூரத்தை இடித்துக் காட்டுகிறார் .

கல்வி சமூகத்திலும் அரசியல் தளத்திலும் விவாதித்து அரசியல் உறுதியோடும் கல்வி அக்கறையோடும் முடிவெடுக்க வேண்டிய தலையாயப் பிரச்சனை.தீக்குணம் அனைத்தினுள்ளும் தீயதாம் சாதிப்பற்று குறித்து கண்ணீர் உகுத்து வா.செ . தன் கவ லையை, கோபத்தை நச்செனப் பதிவு செய்துள்ளார் . “பயணத் தின் சுமையைக் குறைக்க நான் மேலே குறிப்பிட்ட பாரங்களை இறக்கி வைக்க வேண்டும் என்பது என் வாழ்க்கை வரலாறு பற்றிய பதி வின் நோக்கம் .” என்கிறார் . அதில் வென்றுள்ளார் என்பதை இந் நூலைப் படித்து முடிக்கும் அனை வரும் ஒப்புக்கொள்வர் .

வாங்கலாம்பாளையத்தில் மாடு மேய்த்த அனுபவம் தொடங் கி அண்ணாபல்கலைக் கழகம் , மதுரை பல்கலைக் கழகம் , இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக் கழகம் , யுனெஸ்கோ என ஒவ்வொன்றி லும் உயர் பொறுப்பில் பணியாற்றிய அனுபவம் ஈறாக 75 அத்தியாயங் களில் வா.செ.வரலாறு நீள்கிறது.இளமையில் கடும் சிரமத் தோடு கல்வி பயின்ற வா.செ வின் அனுபவமும் வாழ்நாள் முழுவ தும் கிராமப்புற மாணவர்கள் பயன் பெற வேண்டும் என்கிற உந்துதலும் கல்விமேம்பாட்டில் தீவிரமான பங் களிப்பும் இந்நூலை வாசிக்கிறவர் யாராயினும் அவரை சுண்டி ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.

குறிப்பாக எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் வா. செ. முயற்சியில் ஊழல் முறைகேட்டை ஒழித்து பரவலாக அனைத்து மாணவர்களும் பயன் பெற நுழைவுதேர்வு வழிகாணப்பட் டது மிக முக்கிய பாய்ச்சல் முன் னேற்றமே ; அந்த நுழைவுதேர்விலும் சிக்கல்கள் ஏற்பட்டு பள்ளிஇறுதி யாண்டு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு என்றானது அடுத்த கட்டம் ; எது எப்படியிருப்பினும் நேர்முகத் தேர் வில் தலைதூக்கும் சிபாரிசு சலுகை ஒழிந்து ஒரு கறாரான அளவுகோல் உருவானது மிக முக்கியம் . இதில் வா.செ முன்கை எடுத்த நுழைவுதேர் வுக்கு காத்திரமான பங்குண்டு . இந்நூல் மூலம் இதனை அறிகிறோம் .அண்ணா பல்கலை உருவாக எவ் வளவு நிர்வாகத் தடைகள், தாமதங்கள் ; அனைத்தும் பொறுமையாக வும் நுட்பமாகவும் எதிர்கொள்ளப்பட்ட விவரங்கள் நிச்சயம் தமிழ்கூறும் நல் லுலகம் அறியவேண்டிய அரிய செய் திகளே.

குடியரசு தலைவராய் திகழ்ந்த அப்துல் கலாம் எழுதிய அக்னிச் சிறகுகள் எனும் சுயசரிதையில் விண் வெளி ஆய்வில் ஏவுகணை செலுத்துவதில் பெறப்பட்ட வெற்றியின் பின்னா லுள்ள வலியும் - நிர்வாக ரெட்டேப் பிசத்தை எதிர்கொண்டு போராடி வென்றதையும் அறியலாம் . அதே போல் உயர்கல்வித்துறையில் தற் போது ஈட்டப்பட்டுள்ள வெற்றியும் தனக்கே உரிய வலியை காயத்தை போராட்டத்தைக் கொண்டுள்ளதை வா . செ . வரலாற்றூடே அறிய முடிகி றது இவ்விரு புத்தகங்களையும் பெரும் பதவிகளை வகிப்போர் கட்டாயம் வாசிப்பது அவசியம் .மனைவியின் நியாயமான பதவி உயர்வை தடுத்ததும் , மகன் பொறியி யல் கல்வி ஓராண்டு நீடிப்பதில் உறுதிகாட்டியதும் ; சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராய் இருக்கவேண்டும் என்பதை வா. செ . கறாராக பற்றி நின்றதை பறை சாற்று கின்றன . இவர் பெற்ற விருதுகளின் பட்டியலும் வகித்த பொறுப்புகளின் பட்டியலும் மலைக்க வைக்கின்றன விருதுகளும் பரிசுகளும் நிறையப் பெற்றிருந்தும் பாராட்டுவிழாக்க ளைத் தவிர்த்தது அருங்குணமாகும். மு.வ குறித்தும் இதுபோன்ற செய்திஉண்டு.

பாராட்டு போதை, புகழ் போதையில் மயங்காதிருக்க அசாத்திய மன உறுதி வேண்டும். சான்றோர்களிடமே இதனைக் காண இயலும்.நீரியல் துறை சார்ந்த வல்லுநர் ஆய்வாளர் ஆயினும் தமிழ்மீது இவர் கொண்ட காதல் அளவற்றது . 15 கவிதை நூல்கள், 16 உரைநடை நூல்கள் தமிழிலும் , ஒரு கவிதை நூல் உட்பட ஏழு நூல்கள் ஆங்கிலத்தி லும் யாத்துள்ளார் . இவர் எழுதிய மானுட யாத்திரை என்கிற காவியம் இரண்டு பாகங்கள் பொருண்மையி லும் அழகியலிலும் புதுமை முயற்சி யாகும். மானுட வரலாற்றை அறிவியல் பூர்வமாக அதிலும் கவிதையாக தந்தது இதற்கு முன்னர் யாரும் செய்யாத முயற்சியாகும். இந் நூல் குறித்து இப்பகுதியில் ஏற் கெனவே விரிவான அறிமுகம் எழு திவிட்ட தால் இங்கு இத்துடன் நிறுத்திக் கொள்கிறோம். தமிழ் எழுத்து சீர்திருத்தம் குறித்து இவரது முன்மொழிவு கவனிப்புக் குரியது.சுவையான செய்திகளும் ஏராள மான தகவல்களும் நிரம்பிய இந்த வாழ்க்கை வரலாற்று நூல் ஆழ்ந்த வாசிப்புக்குரியது . சாதிக்கத் துடிக் கும் இளைஞர்களுக்கு ஒரு அரிய கையேடு . தன்வரலாறாகவே இந்நூல் எழுதப்பட்டிருந்தால் இன்னும் வலுவாக இருந்திருக்குமோ?

ஆடு, மாடு மேய்ப்பதில் தொடங்கிஅண்ணா பல்கலை தாண்டி...!வா.செ.குழந்தைசாமி வாழ்க்கை வரலாறு,பதிப்பாசிரியர் : ராணிமைந்தன்,வெளியீடு : பாரதி பதிப்பகம்,126/108 , உஸ்மான் சாலை ,தியாகராய நகர் , சென்னை 600 017.பக் : 614 + 36 , விலை : ரூ .349

நன்றி: தீக்கதிர் - புத்தக மேசை 20 -10 - 2013

0 comments :

Post a Comment