சிறார் நூல் இரண்டு

Posted by அகத்தீ Labels:

  சிறார் நூல் இரண்டு





 பாட்டா ! ஒருத்தரு பலவீனமா இருக்கும்போது அவர் கிட்ட சண்டை போட்டு ,குறுக்கு வழியில் ஜெயிக்கக் கூடாது.சண்டை போடாம விலகிப் போயிடணும் .அதுக்காக எதை இழந்தாலும் பரவாயில்லையின்னு நினைச்சதுதான் பெரிய வீரம்…..”

 

இப்படி வீரத்துக்கு இலக்கணம் சொல்லிக் கொடுக்கும் “ ஆகச் சிறந்த வீரன்” சிறுகதை உள்ளிட்டு வெவ்வேறு செய்திகளைச் சொல்லும் 12 சிறார் கதைகளின் தொகுப்பே “ ஆகச் சிறந்த வீரன்” .

 

எழுதியவர் துரை ஆனந்த்  குமார் . இவர் ஏற்கெனவே இதுபோல் பல நூல்களைத் தந்தவர் .எழுத்தில் ஈர்ப்பும் செய்தியும் ஒருங்கே கலந்திருப்பதே இக்கதைகளின் வெற்றி என்பதை வாசிக்கும் போது நிச்சயம் உணர்வீர்கள்.

 

“ வாருங்கள் பொழுது போக்கையும் வாசிப்பையும் ஒன்றாக இணைப்போம் “ என்கிற முழக்கத்துடன் செயல்படும் இவரை ஊக்குவிப்பது நம் கடன் .

 

ஆகச்சிறந்த வீரன் ,

துரை ஆனந்த் குமார் ,

டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் ,

பக்கங்கள் : 80 , விலை : ரூ.100/

நூல்பெற : 87545 07070 / 99404 46650


*******************************************************************

கதை சொல்லுவது சிறுமி ச.ச.சுபவர்ஷினி [வயது 9] , ஓவியங்கள் வரைந்தது ஏழு சிறுவர் சிறுமியர் .  “அத்தினிக் காடுகள்” நூல் நம்மை வியக்க வைக்கிறது .அன்பின் ஊற்று நிறைந்த எழுத்துகள் . 15 குட்டிக் கதைகள் .ஒவ்வொன்றும் குழந்தையைக் கவ்வி இழுக்கும் .

 

ஓர் சிறுமி சிங்கத்தை பிரச்சனையில் இருந்து காப்பாற்றுகிறாள் .அந்தக் சிறுமியின் சொல் கேட்டு தன்னிடம் சிக்கிய யானைக்குட்டியை தின்னாமல் விடுகிறது சிங்கம் . “ நீங்க வலிமையான விலங்கு ஆபத்தை தைரியமாகச் சந்திக்கணும்” என யானைக்கு சொல்லும் சிறுமியின் ஈரம் மனது  ‘அத்தினிக் காடு’ எனும் சிறுகதை ஆகியிருக்கிறது .

 

 “டால்பின் நம்ம கூட பழகுவதற்காக விளையாட்டு காட்டும் .அதோட இடத்தில இருந்தாத்தான் அது சந்தோஷமா பாதுகாப்பா இருக்கும்,” என சொல்லும் சிறுகதை ‘ டால்பின்”.

 

மற்ற கதைகளை நீங்களே படித்து மகிழுங்கள் . எந்தக் கதையும் மூடநம்பிக்கையை விதைக்கவில்லை . ‘இளமையில் கல்’ என்றனர் அதோடு இனி  ‘சிறுவராயினும் எழுது’ என்றும் சொல்லலாம் ; அந்த நம்பிக்கையைத் தந்திருக்கிறது இந்நூல் . சித்திரமும் கைப்பழக்கம் ,செந்தமிழும் எழுத எழுத பழகும் . ஊக்குவித்து உடன் இருந்த அனைவருக்கும் பாராட்டுகள் .

 

அத்தினிக் காடு,

சிறுவர் கதைகள்,

லாலிபாப் சிறுவர் உலகம் வெளியீடு ,

பக்கங்கள் : 104 , விலை : ரூ99/

நூலைப்பெற : 98412 36965 . 

மொழியாக்கம்

Posted by அகத்தீ Labels:

 

என்னுடைய கவிதை ஒன்று கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது . தோழர் மீனாட்சி சுந்தரம் [ மாநிலச் செயலாளர் கர்நாடக சிஐடியு , மாநிலச் செயற்குழு ,சிபிஎம்] கன்னடத்தில் மொழியாக்கம் செய்து தன் முகநூல் பக்கத்தில் படத்துடன் பதிந்துள்ளார் .அவர் மொழியாக்கம் செய்த கன்னடக் கவிதை இதோ , அதே படத்துடன் …

 

 

*ಜವಾಬ್ಧಾರಿ ನಿರಾಕರಣೆ:*

(Disclaimer)

ನೀವೇ ನನ್ನನ್ನು ಸೃಷ್ಟಿಸಿದಿರಿ!

ನೀವೇ ಕಥೆಗಳನ್ನು ಹೆಣೆದಿರಿ!

ನೀವೇ ಹಲವಾಗಿ ಭಾಗಿಸಿಟ್ಟಿರಿ!

ನೀವೇ ನನ್ನ ಆರಾಧಿಸಿದಿರಿ!

ನೀವೇ ಘರ್ಷಣೆಗಿಳಿಸಿದಿರಿ!

ನೀವೇ ಮೋಸಕ್ಕೊಳಗಾದಿರಿ!

ನೀವೇ ಮೋಸ ಮಾಡಿದಿರಿ!

ನಿನ್ನೆ, ಇಂದು ಮತ್ತು ನಾಳೆಯು

ಕೆಡಕೋ ಒಳಿತೋ ಯಾವುದು ನನ್ನ ಕೃಪೆಯಲ್ಲ

ಅವು ನಿಮ್ಮ ಕ್ರಿಯೆ ಯಾವಾಗಲೂ ನಿಮ್ಮದೆ

ಯಾವುದೊಂದಕ್ಕೂ ನನ್ನನ್ನು ದೋಷಾರೋಪಿಸಬೇಡಿ

ಯಾವುದೂ ನನ್ನ ಕಾರ್ಯವಲ್ಲ ಮತ್ತು ನನ್ನ ಕೈಯಲ್ಲೂ ಇಲ್ಲ

ಹೊಸ ವರ್ಷದ ಶುಭಾಶಯ ಕೋರಿ

ನಾನು ನನ್ನ ಜವಾಬ್ಧಾರಿಯನ್ನು ತ್ಯಜಿಸುತ್ತೇನೆ.

ಇಂತಿ,

#ನಿಮ್ಮದೇವರು

[ಎಲ್ಲಾ ಧರ್ಮಗಳು, ಉಪ ವಿಭಾಗಗಳು...]

 

தமிழில் நான் எழுதிய கவிதை

 

பொறுப்பு துறப்பு :

 

நீங்களே என்னைப் படைத்தீர்கள் !

நீங்களே கதை புனைந்தீர்கள்!

நீங்களே கூறுபோட்டீர்கள்!

நீங்களே கொண்டாடினீர்கள் !

நீங்களே மோதவிட்டீர்கள் !

நீங்களே ஏமாந்தீர்கள் !

நீங்களே ஏமாற்றினீர்கள்!

நேற்றும் இன்றும் நாளையும்

தீதும் நன்றும் என் செயல் அல்ல

உம் செயலே ! என்றும் உம் செயலே !

யாதொன்றுக்கும் என்னை நோகவேண்டாம்

எதுவும் என் செயல் அல்ல என் கையில் இல்லை

புத்தாண்டு வாழ்த்துச் சொல்லி

என் பொறுப்பு துறக்கிறேன்

இவண் ,உங்கள்

கடவுள்

[ எல்லா மதம் பிரிவு உபபிரிவு ...]

 

 

நன்றி ! நன்றி ! தோழர் மீனாட்சிசுந்தரம் அவர்களுக்கு நன்றி !

 

 

 

பொறுப்பு துறப்பு :

Posted by அகத்தீ Labels:

 பொறுப்பு துறப்பு :



நீங்களே என்னைப் படைத்தீர்கள் !
நீங்களே கதை புனைந்தீர்கள்!
நீங்களே கூறுபோட்டீர்கள்!
நீங்களே கொண்டாடினீர்கள் !
நீங்களே மோதவிட்டீர்கள் !
நீங்களே ஏமாந்தீர்கள் !
நீங்களே ஏமாற்றினீர்கள்!
நேற்றும் இன்றும் நாளையும்
தீதும் நன்றும் என் செயல் அல்ல
உம் செயலே ! என்றும் உம் செயலே !
யாதொன்றுக்கும் என்னை நோகவேண்டாம்
எதுவும் என் செயல் அல்ல என் கையில் இல்லை
புத்தாண்டு வாழ்த்துச் சொல்லி
என் பொறுப்பு துறக்கிறேன்
இவண் ,உங்கள்
கடவுள்
[ எல்லா மதம் பிரிவு உபபிரிவு ...]

சுபொஅ 2022 சுயவிபரம்.

Posted by அகத்தீ Labels:

 

சு.பொ. .விவரம்

 

குறிப்பு :

 

நான் உடல்தானம் செய்துள்ளேன். என் மரணத்துக்குப் பிறகு உடலை மருத்துவ கல்லூரியில் ஒப்படைக்கப்பட வேண்டும் . சாதி ,மத ,குடும்ப ரீதியான எந்தச் சடங்கும் சம்பிரதாயமும் கூடாது . விபூதி ,குத்து விளக்கு ,அகல் விளக்கு ,தேங்காய் ,பழம் ,ஊதுவத்தி , பிறந்தவீட்டுக் கோடி ,சம்மந்தி கோடி,கொள்ளிச் சட்டி ,பால்,கருமாதி,படையல் எதுவும் கூடாது . இது என் இறுதி ஆசை.உயில்.

 

 

 

 

பெயர்சுபொஅகத்தியலிங்கம்

தந்தைநாபொன்னப்பபிள்ளை 

தாய்சி.தங்கம்மாள்

பிறந்ததேதி: 15 ஜூன் 1953 சுசீந்திரம்குமரிமாவட்டம்

உடன்பிறந்தோர் : காமாட்சி [அக்கா ] சு.பொ. நாராயணன் ,[அண்ணன்] சு.பொ.ஐயப்பன் [தம்பி]

கல்விஎஸ்எஸ்எல்.சி + .டி, [டூல் அண்ட் டை மேக்கர்]

திருமணநாள் : 25 அக்டோபர் 1981

மனைவிசி.கலாவதி M.A., ஆசிரியை

 

மகள்  : .அ .க . பானு / மருமகன் :. நவீன் குமார்

 

மகள் : அ .க .சங்கர் / மருமகள் : பா. சரண்யா ,

 

பெயரன் /பெயர்த்தி .பா .சஞ்சை ஹஷ்மி .பா.சங்கமித்ரா ,

                                                   ..முகிலன் ..மேகா

 

 

 

தொழில்

கட்சி முழுநேர ஊழியர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி [ மார்க்சிஸ்ட் ], 

பத்திரிகையாளர் , எழுத்தாளர் .



ஐந்தாம் வகுப்புவரை சுசீந்திரம் அரசு நடுநிலைப் பள்ளியிலும் ,

முதல் 10 முடிய சுசீந்திரம் எஸ் எம் எஸ் எம் உயர்நிலைப் பள்ளியிலும் ,

பள்ளியிறுதி வகுப்பு [11 ஆம் வகுப்பு ] சென்னை ,குரோம்பேட்டை நேரு போர்ட் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார் . 

 

தொழிற்கல்வி [ஐடிஐடூல் அண்ட் டை மேக்கர் பிரிவு – கிண்டி சிடிஐயிலும் பயின்றார் . 

 

ஹிந்துஸ்தான் டெலிபிரண்டர்ஸில் அப்ரண்டீஸ் முடித்தார் . 

 

இங்கிளீஸ் எலக்ட்ரிகல்ஸ் , பெஸ்ட் அண்ட கிராம்டன் லிப்ட் கம்பெனி உட்பட சில கம்பெனிகளில் பணியாற்றினார் . 

 

அரசியல் மற்றும் இலக்கிய ஈடுபாடு அதிகரிக்க வேலையை விட்டார் .

 

 

 

அரசியல் வாழ்வு :

 

 

* 1974 
ல் இந்திய கம்யூனிஸ்ட் [மார்க்சிஸ்ட்கட்சி ஆதரவாளர் குழுவில் இணைந்தார் . 1975 ல் கட்சியில் பரிட்சார்த்த உறுப்பினர் ஆனார் . 

அடுத்த ஆண்டு கட்சியின் உறுப்பினரானார்..

* 1977முதல் கட்சியின் முழுநேர ஊழியர்  . 

* 1976 ல் பழவந்தாங்கலில் சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணி அமைப்பதில் முன் நின்றார் . முதல் செயலாளர் . பின் மாவட்ட அமைப்பாளர்

.1977 ல் சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணியின் சென்னை மாவட்ட செயலாளர். 

1978 முதல் சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணியின் மாநில அமைப்பில் செயல்படத் துவங்கினார் . மாநில துணைச் செயலாளராக திருப்பூர் மாநில மாநாட்டில் தேர்வு.

 

1980 ல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் என பெயர் மாற்றம் பெற்றது .திண்டுக்கல் மாநில மாநாட்டில் மாநிலச் செயலாளராகத் தேர்வு.

1992 ஆம் ஆண்டு வரை மாநிலப் பொறுப்பில் பணியாற்றினார் . கடைசி இரண்டு         ஆண்டுகள் மாநிலத்தலைவராகவும் ; அதற்கு முன் மாநிலச்செயலாளராகவும் துடிப்பாகப் பணியாற்றினார்.

 

* 1984 ஆம் ஆண்டு இளைஞர் முழக்கம் மாத இதழ் தொடங்கப் பெற்றது . தொடக்கம்   முதல் எட்டு ஆண்டுகள் அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார் .

 

* 1984 ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற கட்சியின் மாநிலமாநாட்டில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் . அதற்கு முன் கட்சியின் சென்னை மாவட்டக்குழு உறுப்பினராக செயல்பட்டார் .

 

27 ஆண்டுகளுக்கு மேலாக  கட்சி மாநிலக் குழுவில் செயல்பட்ட பின் , 2012 ஆம்         ஆண்டு நாகையில் நடைபெற்ற மாநிலமாநாட்டில் தானே சுயவிருப்பம் தெரிவித்து மாநிலக்குழுவிலிருந்து விடுவித்துக் கொண்டார் ..  [90 முதல் 94 வரை கட்சியின்       சென்னை மாவட்டச் செயற்குழுவிலும் செயல்பட்டார் .]

 

* 1978 ஆம் ஆண்டு முதல் தீக்கதிரில் சென்னை மாவட்ட நிருபராகப் பணிபுரிந்துள்ளார்.1994 ல் சென்னைப் பதிப்பு துவங்கப்பட்டபோது பொறுப்பாசிரியர் ஆனார் . பின்னர்       இணையாசிரியராகவும் பொறுப்பேற்று செயல் பட்டார் . மாநிலம் முழுவதும் நன்கு  அறியப்பட்ட ஸ்தாபகனாய் , அமைப்பாளனாய் ,கிளர்ச்சிக்காரானாய் , பேச்சாளராய் திகழ்ந்தவர்  ஒரு வட்டத்துக்குள் அடைக்கப்பட்டது இப்போதுதான் . தன் சாவுக்குப்     பிறகும் தன்னைப் பற்றிப் பேசும் பல புத்தகங்கள் எழுத களம் அமைந்ததும் இப்போதுதான் .

 

 

 2012 ல் தீக்கதிர் பொறுப்புகளிலிருந்தும் சுயவிருப்பத்தின் அடிப்படையில் விலகினார் .

 

2013 டிசம்பர் 8 ஆம் நாள் முழுநேர ஊழியர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் சுய விருப்ப அடிப்படையில் விடுவித்துக்கொண்டார் . 

 

ஓசூரில் ஒரு கிளையில்   சிபிஎம் உறுப்பினராகத் தொடர்கிறார்.

 

 

எந்த பொறுப்பிலும் இல்லாவிடினும் பொறுப்புடன் எழுத்துப் பணியும் கிளர்ச்சிப் பிரச்சாரப் பணியும் தொடர்கிறார்

 

அவசர காலத்தில் தமுஎகச வில் ஆர்வமுடன் பங்கேற்கத் துவங்கி மாவட்ட – மாநிலப் பொறுப்புகளிலும் செயல் பட்டார் . தீக்கதிர் பணியில் உள்ள பலரும்                   தமுஎகச விலும் பணியாற்றுவதினால் பணி நெருக்கடி ஏற்பட்டது . கட்சி ஆலோசனைப்படி தமுஎகச விலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார் . அதற்கு முன்பு இலக்கியக் கூட்டங்கள் , கலை இரவுகளில் பங்கேற்றுள்ளார் .இலக்கிய ஆர்வம் தொடர்கிறது . .

 

 

 

நான் சார்ந்த இயக்கத்தின் கருத்துகளத்தில் நின்று பரப்புரை செய்யும் எழுத்தாளனே . நடுநிலையாளன் அல்ல ;ஓர் சார்பானவனே ! என் எழுத்து எப்போதும் கடைசி பெஞ்ச் மாணவனை நோக்கித்தான் . அதுதான் என் இலக்கும் பயணமும்

 

 

 1) சிந்திக்கும் வேளையில் குறள் [1994]


 2) விடுதலைத் தழும்புகள் (தமிழக அரசு முதல் பரிசு) [1998]


3) மனித உரிமைகள் வரலாறும் அரசியலும்திருப்பூர் தமிழ்சங்க விருது)[1998]
(
மேற்கண்ட இரு நூல்களும் கல்லூரிகளில் பயன்படுத்தப்படுகிறது)


4) என் கேள்விக்கு என்ன பதில்?( குழந்தைகள் அறிவியல் நூல்)(பல ஆயிரம் பிரதிகள்  விற்கப்பட்டனதமிழ்நாடு அறிவியல்
இயக்கத்தால் அச்சிடப்பட்டது)

 

5) சாதியம் வேர்கள் விளைவுகள் சவால்கள்[2004]


 
6) 
ஆப்கன் வரலாறும் அமெரிக்க வல்லூறும் [2002] 

மீண்டும் 2020 ல் விரிவாக்கப்பட்ட பதிப்பு


7) காதலும் வாழ்வும்-பழந்தமிழ் இலக்கியத்தில்[2002]

 

8] சு.சமுத்திரம் படைப்புலகம்[2002]


 
9) 
சிங்காரவேலரைப் பயில்வோம் [2008]

 

10] கீதை தரும் மயக்கம் [2008]



11)பொதுவுடைமை வளர்த்த தமிழ் [ஜூன் 2010 ]

 

12] ஆர்.உமாநாத் வாழ்க்கை வரலாறு ; பார்வை புதிது பயணம் நெடிது [ செப்டம்பர் 2000 ]

 

13] பூக்களோடும் போர்முரசுகளோடும் . DYFI வரலாறு .


 
14] 
கோடிக்கால் பூதமடா ; ஜீவாவின் கவிதைப் பயணம்[2011]

 

கீழ்கண்ட நூல்கள் 2013 ல் கட்சிப் பொறுப்புகளைத் துறந்தபின் எழுதியது


 

15]குடும்பத்தில் கூட்டாட்சி[2013]


16] நாத்திகம் vs ஆத்திகம் : அர்த்தமுள்ள உரையாடல்[2015]  


17] சே குவேரா : கனல் மணக்கும் வாழ்க்கை [2015]


18]100 கேள்வி-பதில் : ஆன்மீகமா ? அறிவியலா ? [2016]


19] சும்மா கிடந்த சொல்ல எடுத்து : என்றும் நம்மோடு பட்டுக்கோட்டை [2017]


20]புரட்சிப் பெருநதி [2018]

 

21]மார்க்சியம் என்றால் என்ன ? : ஓர் தொடக்க நிலைக் கையேடு[2018]

 

22] கனவிலிருந்து அறிவியலாய் சோஷலிசம் : ஓர் எளிய முன்னோட்டம்.[2021]

 

 

ü  பாசிசம் பழசும் புதுசும் [அஜய் அஹமதுவின் சிறு நூலை தமிழில் மொழியாக்கம் செய்துள்ளேன்.]



மேலும் பல சிறு நூல்கள்இதுவரை எழுதியவை



v  வேலை இன்மை ஒழிய எரிமலையாய் எழுக ![1978] SYF வெளியீடு


v  மனிதனாக வேண்டும் மனதில் வையடா !DYFI வெளியீடு


v  வேலை இனியும் கனவல்ல  [1990] CCAU வெளியீடு


v  வீட்டைக் கொழுத்தி வெளிச்சம் பெறுவரோமின் ஊழியர் மத்திய அமைப்பு வெளியீடு


v  மூடநம்பிக்கை என்றால் என்ன ? பாரதி புத்தகாலய வெளியீடு

 

v  அறிவியல் பார்வை என்றால் என்ன ?[2021]

 

v  தகவல் அறியும் உரிமைச் சட்டம் 


v  தோழர் பி.ராமமூர்த்தி 


v  காதெலென்னும் உயிர்விசை [2015] DYFI வெளியீடு


v  கருத்து சுதந்திரம் - வெறும் சட்டச் சொல் அல்ல [2015]

 

v  மத்திய அரசிடம் எதிர்பார்ப்புகள்

 

v  விடிவுகாண விழித்தெழு

 

உட்பட டஜனுக்கும் மேற்பட்ட 
சிறு நூல்கள்
 
 

 

 

·         விடுதலை வேள்வியில் தமிழகம்[2000] , 

 

·         விடுதலைப் போராட்டம் கம்யூனிஸ்டுகளின் நினைவுகள் [2014]ஆங்கிலத் தொகுப்பில் .மொழியாக்கமும் வந்துள்ளது

·         சிங்காரவேலர்  போன்ற பல தொகுப்பு நூல்களில் தகுந்த பங்களிப்பு .

 

 

தீக்கதிர் ,செம்மலர் , இளைஞர் முழக்கம் , மகளிர் சிந்தனை , சிஐடியு செய்திகள் ,போக்குவரத்துத் தொழிலாளி ,புதிய புத்தகம் பேசுது, விழிப்பு ,சிவந்த சிந்தனை , நோக்கு , நந்தன் ,சிகரம் ,பீப்பிள்ஸ் டெமாக்கரசி ,மார்க்சிஸ்ட் , வலைப்பூ மற்றும் வலைதளங்கள்  உட்பட பல ஏடுகளில் எழுதியுள்ள கட்டுரைகள் ,கவிதைகள் ,படைப்புகள் .

 

 

நான் எழுதிய கவிதைகள் , சொற்கோலம் முதலியன  இன்னும் தொகுப்படவும் இல்லை . நூலாக்கம் பெறவே இல்லை. நான் எழுதியவற்றில் நூல் வடிவம் பெறாதவை நிறைய உண்டு .சேமித்து வைக்கவே இல்லை .

 

[ akatheee.blogspot.com ல் பிரசுரிக்கப்படாத என் எழுத்துகள் பல இருக்கும்.]

 

§  சென்றுவந்த நாடுகள் : 

ரஷ்யா [ உலக இளைஞர் விழா – மாஸ்கோ ], சீனா [ கட்சி ஊடக தூது குழு ]



இலக்கியப்பேச்சாளர் , எழுத்தாளர்
இடதுசாரி சிந்தனையாளர்



தற்போதைய முக்வரி :
:
சு.பொ.அகத்தியலிங்கம்
B 405 , 
நான்காவது தளம், B பிளாக்,
கார்டன் ரெசிடென்ஸி ,
போலீஸ் லே அவுட் அனுமார் கோவில் அருகில்]

       காச்சநாய்க்கன்ஹள்ளி
              
       பொம்மசந்திரா தொழிற்பேட்டை அஞ்சல் ,
       பெங்களூரூ-560 099.

SU .PO . AGATHIYALINGAM ,
B - 405 FOURTH FLOOR - 'B' BLOCK,
GARDEN RESIDENCY.
[NEAR - HANUMAN TEMPLE = POLICE LAY OUT]
kachanaikenhalli
BOMMASANDRA ,INDUSTRIAL ESTATE POST
BENGALURU - 560 099.

அலை பேசி :

9632562964

மின்னஞ்சல் :

agathee2007@gmail.com

வலைப்பூ :

akatheee.blogspot.com

facebook ; su po agathiyalingam

whatsup ; 9632562964

twitter ;supo agathiyalingam@supo agathee



அறிவைத் தேடிக்கொண்டே இரு
அநீதியை எதிர்த்துக்கொண்டே இரு

 

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

28/12/2021 ல் புதுப்பிக்கப்பட்ட விவரம்.