அன்பான தோழர்களே!
வணக்கம்.
நாகை சென்றதால் கடந்த சில நாட்களாக முகநூலில்-வலைப்பூவில் உங்களோடு உரையாட முடியவில்லை.இப்போது மீண்டும் பயணம். புதிய உற்சாகத்தோடு..ஆம்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா 2011 ஜுன் 15 எனது 59 வது பிறந்த நாளையொட்டி[58வயது நிறைவு] வாழ்க்கையில் முதன் முதலாக பிறந்த நாள் செய்தியை எழுதினேன். ” ஓய்வெனப்படுவது யாதென”கேள்வி எழுப்பி ஒரு கட்டுரை தீட்டியிருந்தேன்.அதில் எழுதியவைகளை இங்கு மீண்டும் நினைவு கூர்கிறேன்.
வணக்கம்.
நாகை சென்றதால் கடந்த சில நாட்களாக முகநூலில்-வலைப்பூவில் உங்களோடு உரையாட முடியவில்லை.இப்போது மீண்டும் பயணம். புதிய உற்சாகத்தோடு..ஆம்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா 2011 ஜுன் 15 எனது 59 வது பிறந்த நாளையொட்டி[58வயது நிறைவு] வாழ்க்கையில் முதன் முதலாக பிறந்த நாள் செய்தியை எழுதினேன். ” ஓய்வெனப்படுவது யாதென”கேள்வி எழுப்பி ஒரு கட்டுரை தீட்டியிருந்தேன்.அதில் எழுதியவைகளை இங்கு மீண்டும் நினைவு கூர்கிறேன்.
இந்த முறை என் பிறந்த
நாளுக்கு ஒரு தனித்துவம் இருக்கிறது.நான் பொதுவாழ்வுக்கு வராமல்
நண்பர்கள் வற்புறுத்தியபடி தொழிற்பயிற்சி ஆசிரியராக( ஐ டி ஐ
இன்ஸ்ட்ரக்டர்) போயிருந்தால்(அதற்குரிய தகுதியும் எனக்கு இருந்தது
வாய்ப்பும் எனக்கு வந்தது)இன்று நான் பணி ஓய்வு பெற்றிருப்பேன்.அல்லது
பெஸ்ட் அண்ட் கிராம்ப்டன் தொழிற்சாலையில் தொடர்ந்து பணியாற்றி இருந்தால்
எப்போதோ வீதிக்கு வந்திருப்பேன். ஆம், அந்த ஆலையை சில ஆண்டுகளுக்கு
முன்பே மூடிவிட்டார்கள்.பொதுவாழ்வில் இருப்பதால் எனக்கு ஓய்வு உண்டா?
இல்லையா?இன்றைக்கு என்நெஞ்சில் சுழன்றடிக்கும் கேள்வி இதுதான்.
எதற்கு ஓய்வு? ஏன் ஓய்வு? எதிலிருந்து ஓய்வு?எப்போதிலிருந்து ஓய்வு?உடல்
தளர்ந்துவிட்டதா? உள்ளம் சோர்ந்துவிட்டதா?வாழ்வின் தேவைகள்
நிறைவாகிவிட்டதா?இலக்கை எட்டியாயிற்றா?மனம் சாந்தியாகிவிட்டதா?இப்படி பல
கேள்விகளை எனக்கு நானே எழுப்பிப் பார்க்கிறேன்.ஒரு புறம் பளிச்சென்று சில
பதில்கள் கிடைக்கின்றன.மறுபுறம் சில குழப்பங்கள் மிஞ்சுகின்றன.இது
குறித்து அண்மைக்காலமாக நான் நிறையவே யோசித்திருக்கிறேன்..பணச்சிக்
கலைத்
தவிர குடும்பத்துக்குள் பெரிய சிக்கல் ஏதுமில்லை-இன்னும் சொல்லப்போனால்
இணக்கமான குடும்பமே.2013க்குள் பண நெருக்கடியிலிருந்தும் மீண்டுவிடுவேன்.
உடலைப் பொறுத்தவரை ஒப்பீட்டளவில் ஆரோக்கியமாகவே இதுவரை
உணர்கிறேன்.உள்ளத்தைப் பொறுத்தவரை அப்படிச் சொல்ல இயலவில்லை.குறிப்பாக
பணிச்சூழல் மனநிறைவைத் தரவில்லை.பொதுவாழ்விலும் ஏதோ ஒரு வெறுமை
சூழ்ந்துள்ளதை என்னாலும் மறைக்கமுடியவில்லை-சுற்றியுள்ளோ
ரும்
அவதானிக்கின்றனர்.அதன் தொடர் விளைவாக சில தீர்மானங்களுக்கு
வந்துள்ளேன்.இது சரியா? தவறா? காலம்தான் தீர்ப்பெழுதும்.
என்னைப் பொறுத்தவரை ஓய்வு எல்லோருக்கும் தேவை.ஆனால், ஓய்வெனப்படுவது
சும்மா இருப்பதல்ல ; மனதிற்கு மகிழ்வுதரும் தொண்டொன்றில் தன்னைக்
கரைத்துக்கொள்வதே.பதவி,பொறுப்பு எதனையும் நாடாமல் இளைஞர்களுக்கு
தோள்கொடுப்பது. துணை நிற்பது.வருவாயை எதிர்பார்ப்பதும்
எதிர்பார்க்காததும் அவரவர் குடும்பச் சூழல் சார்ந்தது.சிலரின் தலைமைப்
பண்பும் அறிவுத்திறனும் அனுபவஞானமும் வலுவாக இருக்கக்கூடும்.குறிப்பிட்ட
அந்த அமைப்புக்கோ நிறுவனத்துக்கோ அத்தகையவர்களின் தேவை இருக்கக்கூடும் ;
அச்சூழலில் விதிவிலக்காக அவர்கள் நீடிப்பது தவிர்க்க
முடியாததாகும்.ஆயினும் அது பொது விதியாகிவிடகூடாது. அது விதிவிலக்கே.
உடல் உழைப்பாளிகளுக்கு ஓய்வு வயது 58 ஆக இருக்கிறது. மாநில அரசு
ஊழியர்களுக்கும் இதுவே விதி. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது 60 ;
விஞ்ஞானிகள் போன்ற அறிவுத்துறையினருக்கு ஒய்வு வயது 65.ஆனால் பொது
வாழ்வுக்கு இப்படி வயதுவரம்பு இல்லாதிருப்பது சரியா?அதிலும் அரசியலில்
ஐம்பது அறுபதுக்கு மேல்தான் பதவி வாய்க்கிறது..அப்படியானால் அவர்களுக்கு
ஓய்வே கிடையாதா?விவாதத்திற்குரியது...
ஆனாலும் தவிர்க்க முடியாதவர்கள் தவிர மற்றவர்கள் பதவி
பொறுப்புகளிலிருந்து விலகி வழிவிடும் மரபு துளிர்க்க
வேண்டும்.வெளியிலிருந்து கொண்டே ஆலோசனகள் வழங்கலாம் -தொண்டாற்றலாம் -
எழுதலாம்- பேசலாம்- பிறரைப் பயிற்றுவிக்கலாம்-ஆம் இதற்கு இதயம்
விசாலமாகவேண்டும்.
என் தகுதியை திறமையை நான் நன்கு அறிந்துள்ளேன்.விதிவிலக்கு பெறுமளவுக்கு
பெருந்தகுதி எதுவும் எனக்கு இருப்பதாக நான் கருதவில்லை.எனவே நான்
விரைவில் ஓய்வுபெற விழைகிறேன்.முன்னர் என் இச்சையினால்
பிறந்தேனில்லை..முதல் இறுதி என் வசத்தில் இல்லை..நான் ஒரு அமைப்பின்
அங்கம். நானாக ஒரு முடிவுக்குவருவது எளிதல்ல..ஆயினும் இந்த பிறந்த நாளில்
எனது உரத்த சிந்தனை ஓய்வைப்பற்றியதே..அதனை பகீரங்கமாகப் பகிர்ந்து
கொள்வதுகூட அமைப்பு ரீதியாக சரியில்லைதான்..ஆயினும் என்னுள் தகிக்கும்
உணர்வினை ஏதேனுமொரு வகையில் கொட்டிவிட்டேன்..அவ்வளவுதான்
ஓய்வே இன்று என் விருப்பமாக உள்ளது.ஓய்வெனப்படுவது யாதெனில் யாருக்கும்
எந்த இடைஞ்சலுமின்றி -பதவி பொறுப்புகள் எதுவுமின்றி- எழுத்துப் பணியில்
இயன்றவரை கரைந்துபோகவே விரும்புகிறேன்.கைகூடுமா
ஓய்வெனப்படுவது யாதெனில்....
கட்டுரையில் நான் விழைந்தபடி பயணிக்கத் துவங்கிவிட்டேன்.ஆம்.நாகையில் நடை பெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் என் விருப்பத்தை வேண்டுகோளை ஏற்று மாநிலக்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து விடுவித்துள்ளனர்.மாநிலத்தலைமைக்கு நெஞ்சம் நிறந்த நன்றி.சுருக்கமாகச் சொன்னால் பெரும் பொறுப்பிலிருந்து விருப்ப ஒய்வு பெற்றுள்ளேன்.ஆயினும் தீக்கதிரில் சில கடமைகள் தற்போது உள்ளன.படிப்படியாக அதிலிருந்தும் ஒய்வுபெறுவேன் எனகிற நம்பிக்கை துளிர்க்கிறது.
அறுபதாவது வயதை நிறைவு செய்யும் போது இப்போது ஆற்றுகிற பணிகள் அனைத்தில் இருந்தும் முழுமையாய் விடுதலை பெற்று-எழுத்துத் தவததை மட்டும் மேற்கொள்ளும் சூழல் கனியுமென நம்புகிறேன்.
மனநிறைவோடும் உற்சாகமாகவும் நான் ஏற்றுக்கொண்ட பொதுவுடைமை சித்தாந்ததை எஞ்சிய என்காலம் முழுவதும் என்னால் இயன்றவரைத் தூக்கிச் சுமப்பேன்.ஓய்வெனப்படுவது அதுதானே...
தோழன்
சு.பொ.அகத்தியலிங்கம்.