undefined
undefined
காதோடு
Posted by
தோழனே
மனது வலிக்கிறது
பிழைக்கத்தெரியாதவன் என
உள் மனம் இடிக்கிறது
ஊருக்குள்ளும் உறவுக்குள்ளும்
அப்படித்தான் சொல்கிறார்கள்
பதவியும் பவிசும்
இல்லை என்பதால்
ஏமாளி என்றே
பட்டம் கட்டுகிறார்கள்
பணமும் வசதியுமே
வாழ்க்கை என
ஞானம் பிறந்ததா?
கூடவே இருப்பவரும்
குத்திக் கேட்கிறார்கள்
யாருக்கும்
நான் சொல்லும்
சமாதானம்
பிடிக்கவில்லை
ஆனாலும்,
ஒன்றை
ஊரறியச் சொல்வேன்
உழைக்கும் மக்களுக்காய் வாழ்வது
ஏமாளித்தனமென்றால்
எஞ்சியகாலமும்
ஏமாளியாகவே
இருந்துவிட்டுப் போகிறேன்..
தோழனே
உன் காதில்
உண்மையைச் சொல்கிறேன்
தினம்படும்
அவஸ்தையில்
ஏமாளியாக வாழ்வதில்
மனதும் வாழ்க்கையும்
வலிக்கத்தான் செய்கிறது
சுபொ
[இரண்டு வாரங்களாக முட்டிமோதும் பொருளாதார நெருக்கடியின் அனுபவக் கவிதை]
மனது வலிக்கிறது
பிழைக்கத்தெரியாதவன் என
உள் மனம் இடிக்கிறது
ஊருக்குள்ளும் உறவுக்குள்ளும்
அப்படித்தான் சொல்கிறார்கள்
பதவியும் பவிசும்
இல்லை என்பதால்
ஏமாளி என்றே
பட்டம் கட்டுகிறார்கள்
பணமும் வசதியுமே
வாழ்க்கை என
ஞானம் பிறந்ததா?
கூடவே இருப்பவரும்
குத்திக் கேட்கிறார்கள்
யாருக்கும்
நான் சொல்லும்
சமாதானம்
பிடிக்கவில்லை
ஆனாலும்,
ஒன்றை
ஊரறியச் சொல்வேன்
உழைக்கும் மக்களுக்காய் வாழ்வது
ஏமாளித்தனமென்றால்
எஞ்சியகாலமும்
ஏமாளியாகவே
இருந்துவிட்டுப் போகிறேன்..
தோழனே
உன் காதில்
உண்மையைச் சொல்கிறேன்
தினம்படும்
அவஸ்தையில்
ஏமாளியாக வாழ்வதில்
மனதும் வாழ்க்கையும்
வலிக்கத்தான் செய்கிறது
சுபொ
[இரண்டு வாரங்களாக முட்டிமோதும் பொருளாதார நெருக்கடியின் அனுபவக் கவிதை]
0 comments :
Post a Comment