இடுக்கண் வருங்கால் நகுக !

Posted by அகத்தீ Labels:

 


இடுக்கண் வருங்கால் நகுக !

 

நடை பயிற்சி செல்லும் போது

முதியோர்கள்

கையில் ஊன்றுகோல்

அவசியம் வேண்டும்

வெறி நாய்களிடமிருந்து

தன்னைக் காத்துக்கொள்ள.

 

பாதம் முதல் இடுப்பு வரை

கடிபடா கவச உடை

பாதுகாப்புக்காக

தலைக்கவசம் போல்

கட்டாயமாக்கலாம் !

 

இடுப்புக்கு மேலே

என்ன செய்வது

கேடயம் தாங்கி நடப்பது

வீரர்க்கு மட்டுமல்ல

அனைவர்க்கும் நன்று !

 

[ நேற்று நடை பயிற்சியின் போது நாங்கள் வேடிக்கையாகப் பேசிக்கொண்டது . ஜீவகாருண்ய வழியில் வேறு எப்படி யோசிக்க  முடியும் ?]

 

நடை முடிந்து

பெஞ்சில் உட்கார்ந்ததும்

கொசு கடிக்கிறது

வலையைச் சுற்றிக்கொண்டே

திரியலாமோ ?

 

எலிப் பொறி

கரப்பான் பூச்சி மருந்து

வாங்கச் சொன்னார்களே

இனி வீட்டில்

என்ன பதில் சொல்வது ?

 

இடுக்கண் வருங்கால் நகுக !

 

சுபொஅ.

21/09/25.

 

 

 

 


0 comments :

Post a Comment