பயணத்தின்
போது
புன்னகையால்
ஈர்த்த
மழலையின்
தாய் ….
அவசரமாக கடக்கும்
போது
எதிர்பட்ட
சோகம் கப்பிய
முதியவள்
…
ஹோட்டலில்
சாப்பிடும் போது
விலையைக்
கேட்டுகேட்டு தவிர்த்த
இளைஞன் …
மருத்துவமனையில்
நுழையும் போது
பிரசவலியை
சுமந்து நின்ற
கணவன்….
ஒவ்வொருவரும்
அடை காக்கும் கனவுகள்
சிறகை விரித்தால்
ஆயிரம் கதைகள்….
சுபொஅ.
11/09/25.
0 comments :
Post a Comment