ஆயிரம் கதைகள்….

Posted by அகத்தீ Labels:

 



பயணத்தின் போது

புன்னகையால் ஈர்த்த

மழலையின் தாய் ….

 

அவசரமாக கடக்கும் போது

எதிர்பட்ட சோகம் கப்பிய

முதியவள் …

 

ஹோட்டலில் சாப்பிடும் போது

விலையைக் கேட்டுகேட்டு தவிர்த்த

இளைஞன் …

 

மருத்துவமனையில் நுழையும் போது

பிரசவலியை சுமந்து நின்ற

கணவன்….

 

ஒவ்வொருவரும் அடை காக்கும் கனவுகள்

சிறகை விரித்தால்

ஆயிரம் கதைகள்….

 

சுபொஅ.

11/09/25.

 


0 comments :

Post a Comment