நகரென்று எதைச் சொல்கிறீர்கள் ?

Posted by அகத்தீ Labels:

 நகரென்று எதைச் சொல்கிறீர்கள் ?

 

 


நகரென்று எதைச் சொல்கிறீர்கள் ?

ஓங்கி உயர்ந்த கட்டிடங்களையா ?

விளம்பரத்தில் மினுக்கும் வர்த்தக நிலையங்களையா ?

கார்ப்பரேட் கொளையை பொதிந்த பெரும் நிறுவனங்களையா ?

பளபளப்பான கல்வி ஏலக் கடைகளையா ?

மரண வியாபாரத்தில் கல்லா கட்டும் மருத்துவ மனைகளையா ?

பகட்டும் போலித்தனமும் நிரம்பி வழியும் மெகா திருமண மஹால்களா ?

பாலம் ,சாலை ,ரயில் ,பஸ் ,கார் ,ஆட்டோ ,டூ வீலர் நெரிசல் நெரிசல் இதுதான் அடையாளமா ?

நின்று பேச நேரமின்றி ஓடிக்கொண்டே இருக்கும் மனிதர்களா ?

நுனி நாக்கு ஆங்கிலமும் நவநாகரீக உடையும் காதோடும் கண்ணோடும் ஒட்டிக்கொண்ட அலைபேசியுமாய் திரியும் இளைஞர்கள் இளைஞிகளையா ?

நகரென்று எதைச் சொல்கிறீர்கள் ?

நவீனத்தோடு கைகுலுக்கினும் சாதி ,மத ,பாலின வன்மத்தை சுமந்து திரியும் மானுடம் கொன்ற மனித உருவங்களையா ?

அம்பேதர் சாதி ,மத ஒடுக்குமுறையின் கொடூர உறைவிடமாய்  ; ஆதிக்கம் , ஏற்ற தாழ்வு மிக்க கிராமங்களைக் கண்டு கொதித்தார்

கிராமங்களின் நகலாய் திரியும் மனித மந்தை உலவும் சந்தையை நகரம் என்று எப்படி அழைப்பது ?

 

சுபொஅ.