சொல்.62

Posted by அகத்தீ Labels:




தினம் ஒரு சொல் .62 [ 31 /10/2018 ]

கோபத்தை அடக்கு என்பதே எல்லோரும் ,எங்கும் ,எப்போதும் சொல்லும் அறிவுரையாக இருக்கிறது . ஆனால் கோபம் வராத மனிதர்களை ஒரு போதும் சந்திக்கவே இயலாது .கோபம் எல்லோருக்கும் வரும் . உறவுகளை ,நட்புகளைக் காயப்படுத்தும் ,முன்னேற்றதுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் பொசுக்கென பொங்கும் கோபம் பொல்லாதது .வேண்டாதது .களையப்பட வேண்டியது .

கோபமும் ஒரு நல்ல உணர்வே , அதை கையாளுவதில்தான் எப்போதும் தோல்வி அடைகிறோம் . கோபம் அது இருபக்கமும் கூர்மையான கத்தி ; அதனைப் பயன் படுத்துவதில் மிக நுட்பம் தேவை .அதனைப் பயிலாததுதான் உண்மையானப் பிரச்சனை .

எதற்குக் கோபப்பட வேண்டும் எதற்குக் கோபப் படக்கூடாது .எங்கு கோபப்பட வேண்டும் .எங்கு கோபப்படக் கூடாது .எப்படிக் கோபப்பட வேண்டும் .எப்படி கோபப்படக்கூடாது .இப்படி பல நாம் கறக வேண்டும் .

ஒருவர் பணியைச் சரியாகச் செய்யாத போது வருகிற கடமைக் கோபம் , குழந்தை தப்பு செய்யும் போது கண்டிக்கும் பாசக்கோபம் ,கணவன் மனைவி இடையே தோன்றும் பொறுப்பான கோபம் , வாய் கூசாமல் ஒருவர் பொய்யுரைக்கக் கேட்டு வரும் சத்தியக்கோபம் இப்படி எண்ணற்ற உண்டு . இவை போன்றவை எல்லாம் மின்மினியாய் தோன்றி மறைய வேண்டிய கண நேரக் கோபங்கள் .நெஞ்சில் சுமக்கக்கூடாத கோபங்கள் .

சமூகத்தில் கண்ணெதிரே நடக்கும் அநீதிகள் கண்டு உன் விழிகள் சிவக்கவில்லை எனில் நீங்கள் மனிதரல்ல மரக்கட்டையே . இந்த லட்சியக் கோபம் இறுதி இலக்கை அடையும் வரை ஆறாமல் கனன்று கொண்டே இருக்க வேண்டும் .இந்த கோப நெருப்பை விசிறிக் கொண்டே இருக்க வேண்டும் .

கோபப்பட வேண்டியவற்றுக்கு கோபப்படாமல் இருப்பதும் ;கோபப்படக்கூடாதத்க்கு கோபப்படுவதுமே நாம் செய்யும் மிகப்பெரிய பிழையாகும் . புரிந்தால் நல்லது .
Su Po Agathiyalingam




























































































0 comments :

Post a Comment