ஏன் குனியிற

Posted by அகத்தீ Labels:




ஏன் குனியிற…..”
சு.பொ.அகத்தியலிங்கம்.


  அவன் வாயினுள் ஏன் கையை நுழைக்கிறாய் ?”
 “வாயை தூய்மைப்படுத்துகிறேன்.”

“ சரி ! அவள் வயிற்றில் ஏன் மிதிக்கிறாய் ?”
 “கெட்ட காற்றை வெளியேற்றுகிறேன்.”

“போகட்டும் ! அவன் கையை ஏன் முறுக்குகிறாய் ?”
 “வலுவேற்றிக்கொண்டிருக்கிறேன்.”

“அதுவும் தொலையட்டும் ..
காலை ஏன் உடைக்கிறாய் ?”
“எலும்பின் வலுவை சோதிக்கிறேன்.”

 “ அய்யையோ ! தடியோடி ஏன் ஓடிவருகிறாய் ?”
 “ மண்டையை பிளந்து மூளையை கழற்றி மாட்டத்தான்…”

“ உனக்கு என்னதான் வேண்டும் ?”
 “அப்படிவா வழிக்கு..”

 “தெளிவாய் சொல்லு கேட்டுத்தொலைக்கிறேன்.”
 “ சரி ..சரி ! முதலில் கேள்வி கேட்பதை நிறுத்து.”

 “அப்புறம்..”
 “ இந்த பட்டியலில் உள்ளதை மட்டுமே சாப்பிடு !”

 “சரி !அடுத்து!”
 “ சமஸ்கிருதம் மட்டுமே படி!”

 “ம்..ம்..”
 “எதைச் சொன்னாலும் நம்பு !கேள்வி கேட்காமல் அடிபணி!”

 “ம்.ம். இன்னும் என்னதான் செய்யணும்”
 “ நான் சொன்னபடி பேசு ,எழுது ,சிந்தி ,செயல்படு ..”

“ இன்னும் இன்னும் …ம்.ம்..ம்.ம்”
 “மாடுதான் உன் அம்மா ….”

 “ஆங் .. இன்னும் இருக்கா…”
….. …… ….. …… ….
…. ….. ….. …. ……
 “ஏன் குனியிற …அய்யையையோ ஏன் செருப்ப கழட்டுற….”


#கருத்துரிமை போற்றுதும்


0 comments :

Post a Comment