சொல்.51

Posted by அகத்தீ Labels:




தினம் ஒரு சொல் .51 [ 19 /10/2018 ]

என் நண்பர் ஒருவர் ஒரு முறை உரையாடும் போது வேதனையோடு சொன்னார்   பாலின சமத்துவத்தை நானும் ஏற்கிறேன் .அதன் பக்கம் உறுதியாக நிற்கிறேன் . .ஆனால் குடும்பத்தில் பெண்கள் செய்வதெல்லாம் நியாயமா ? கண்மூடி ஆதரிப்பது சரியா ?” என வெடித்ததோடு அவருக்கு ஏற்பட்ட பல கசப்பான அனுபங்களைப் பகிர்ந்தார் .

மெய்தான் . பெண்களின் சில பிடிவாதங்கள் பிழையான புரிதலோடு இருப்பது கண்கூடு .அவற்றை மாதர் இயக்கங்கள் தக்க முறையில் சுட்டிக்காட்ட வேண்டும் .எடுத்துக்காட்டாக ,சடங்கு ,சம்பிரதாயம் ,பூஜை , மூடநம்பிக்கைகள் ,கரடுதட்டிப்போன பழக்க வழக்கங்கள் போன்றவற்றை தொடர்ந்து பேணிக்காப்பதில் பெண்களின் பங்கு மிகப்பெரிது .இவற்றுக்கு எதிராக மாதர் இயக்கங்கள் சமரசமற்ற விழிப்புணர்வு முயற்சியை தொடர வேண்டும் . ஐயமே இல்லை .

குடும்பத்தை நிர்வகிப்பதில் கணவன் ,மனைவி இருவரும் சம பொறுப்பாளர்கள் .குடும்ப பட்ஜெட் , குழந்தை வளர்ப்பு ,உள்ளிட்ட எதுவாயினும் கலந்துரையாடி முடிவெடுக்க வேண்டும் .ஆனால் நிர்வாகத்தில் டிரான்ஸ்பரன்ஸி அதாவது வெளிப்படைத்தன்மை இருந்தால் மட்டுமே இது சாத்தியம் .இரு பக்கமும் ஹிட்டன் அஜெண்டா அதாவது மறைமுக காய்நகர்த்தல் இருப்பின் குடும்ப ஜனநாயகம் வெறும் பேச்சாகவே இருக்கும் .இதில் ஆணின் குறைகளைச் சுட்டுவதுபோல் பெண்ணின் பக்கம் உள்ள குறைகளையும் எடுத்துச் சொல்வது பிழையே அல்ல .தேவையே !

ஆணாதிக்கம் என்பது ஆணிடம் மட்டுமே உள்ள தீய குணமல்ல . ஆணாதிக்கம் என்பது சமூகம் குறித்தும் குடும்பம் குறித்தும் ஆணை மையப்படுத்திய ஆதிக்க மனோநிலையாகும் .இது ஆணிடம் ஓங்கி இருக்கும் .பெண்ணிடமும் அவளின் பல பேச்சுகளில் செயல்களில் வெளிப்படும் .ஆதிக்க மனோநிலையை யார் வெளிப்படுத்தினும் குற்றம் குற்றமே !

பாலின சமத்துவத்தில் துளியும் பிசகக்கூடாது  . அதேவேளை அநீதி ,அராஜகம் ,அறியாமை எங்கு யாரிடம் வெளிப்படினும் – ஆணிடம் ஆயினும் பெண்ணிடம் ஆயினும் எடுத்துரைக்க தயங்கவே கூடாது .இரண்டும் ஒன்றுக்கு ஒன்று எதிரி அல்ல ; நடைமுறையில் ஆதிக்கத்திற்கு எதிரான இரட்டைக்குழல் துப்பாக்கியே ஆகும் !





















































































0 comments :

Post a Comment