சொல்.50

Posted by அகத்தீ Labels:




தினம் ஒரு சொல் .50 [ 18 /10/2018 ]

எலித் தொல்லை ஓய்வதே இல்லை . எட்டாவது மாடிக்கும் வந்துவிடுகிறது .எலிமருந்து ,எலி பிஸ்கேட் ,எலி பேஸ்ட் எல்லாம் முயற்சி செய்தாயிற்று .பலனில்லை .எலிப் பொறியும் கருவாடுமே ஆகச் சிறந்த வழி .ஆயினும் சில வாரங்களிலேயே மீண்டும் எலி வந்துவிடும் .

கொசுவும் அப்படித்தான் எத்தனை மாடியாயினும் முகவரியைத் தெரிந்து வந்துவிடும் .விதவிதமான கொசுவத்தி மருந்து எல்லாம் அதற்கு டானிக் ஆகிவிடுகிறது . நொச்சி இலை கொஞ்சம் பலன் தரும் ஆயினும் கொசுவிலிருந்து தப்ப வலையே உத்திரவாதமான ஒரே வழி .

கரப்பான் பூச்சிக்கு நீங்கள் மருந்தை மாற்றி மாற்றி அடிக்கிறீர்கள் . தன்னை எப்படியோ அதற்கொப்ப தகவமைத்து மீண்டும் வந்து விடுகின்றன .எல்லா உயிரினங்களும் தன்னை சூழலுக்கு ஒப்பத் தன்னைத் தகவமைத்துக்கொள்ள தொடர்ந்து போராடுகின்றன . வெற்றி பெறுகிறுகின்றன .

மனிதரென்ன சூழலின் அடிமையா ? இல்லவே இல்லை . மனித குலமும் தொடர்ந்து போராடி வெற்றிக்கொடி நாட்டியே வந்திருக்கிறது .

என் அறிவுக்கு எட்டியவரை பொதுவாய் எந்த விலங்கும் உயிரினமும் தற்கொலை செய்து கொள்வதில்லை . தனக்குத் தானே குழி வெட்டிக் கொள்வதில்லை .ஆனால் மனிதர் மட்டுமே தற்கொலை செய்கின்றனர் . இயற்கையை ஒட்ட உறிஞ்சி தமக்குத்தாமே குழிபறித்துக் கொள்கின்றனர் . ஆயுதங்களைக் குவித்து தமக்குத்தாமே கொள்ளிவைத்துக் கொள்கின்றனர் . நச்சுப் புகைகளால் ,விஷக்கழிவுகளால் காற்றை ,நீரை மாசுபடுத்தி பேரழிவை விளைவித்துக் கொள்கின்றனர் .

எலியும் ,கொசுவும் ,கரப்பான் பூச்சியும் இன்னபிறவும் தாக்குதல்களைத் தாங்கி மீண்டெழுகிறதே தன்னைத் தகவமைத்துக் கொள்கிறதே அதுபோல் உங்கள் சந்ததியால் முடியுமா ? இல்லை அழிந்துதான் போகவேண்டுமா ? யோசித்தால் விழிப்போம் ! யோசிக்க மறந்தால் வீழ்வோம் .வேறென்ன சொல்ல … .

















































































0 comments :

Post a Comment