சொல்.56

Posted by அகத்தீ Labels:




தினம் ஒரு சொல் .56 [ 25 /10/2018 ]

எம் திருமண் நாள் இன்று .சண்டையே போடாமல் 38 ஆண்டு இல்லறம் நடத்தினோம் என்று சொன்னால் அது பொய் . சண்டையும் சமரசமும்தான் வாழ்க்கை நியதி .

காதல் திருமணமோ ,ஏற்பாட்டுத் திருமணமோ எதுவாயினும் அழகு அல்லது ஏதேனும் ஒரு நல்லகூறு மட்டுமே முதலில் ஈர்க்கும் . ஆனால் வாழத் துவங்கிய பின்னரே பலவீனங்களும் குறைகளும் இருவருக்கும் பளிச்சிடும் .

இதனால் தொடக்கத்தில் இருந்த ஈர்ப்பு சில நேரம் வற்றி வெறுப்பும் மேலோங்கும் . அப்போதும் ஒரு சிக்கல் என்னவெனில் குற்றம் குறையற்ற ஒரு கற்பனை வாழ்வே இருவரின் குறியாய் இருக்கும் .

நூறு சதம் நாம் விரும்பியது போல் இன்னொருவர் இருக்க மாட்டார் .ஏன் நாமே நூறு சதம் இருக்கவே முடியாது .குற்றம் குறையில்லா மனிதரோ வாழ்வோ எங்கும் இல்லை .இதுவரை இல்லை .இனியும் இல்லை .

குறை நிறைகளோடு ஒருவரை ஒருவர் அங்கீகரிப்பதும் ;புரிந்து கொள்ள முயற்சிப்பதும் பெரும் போராட்டமே .சிலருக்கு அது விரைவில் கைக்கூடி விடும் .சிலருக்கு இழுபறியாகவே இருக்கும் .

இரு கை தட்டினால்தானே ஓசை எழும் .தாம்பத்தியம் சங்கீதம் ஆவதும் தப்புத்தாளம் ஆவதும் ஒருவர் பிழை மட்டுமல்ல .ஒருவர் பங்கு அதிகமாக இருக்கலாம் .இன்னொருவர் பங்கு குறைவாக இருக்கலாம் .அவ்வளவே…

சமூகச் சூழலையும், பொருளாதார நடப்பையும், பாலின சமத்துவத்தையும், குடும்ப ஜனநாயகத்தையும் புரிந்து கொள்ளும் போராட்டத்தினூடே நான் 38 ஆண்டுகளைக் கழித்துள்ளேன் .அதுதான் யாதார்த்தம் .

எல்லாம் கச்சிதமாக பொருந்தும் வாழ்க்கை என்பது வெறும் கனவே .புரிதலுக்கான போராட்டமும் ஒத்துழைப்புமே வாழ்க்கையின் வெற்றிச் சூத்திரம் .


 

 Su Po Agathiyalingam




























































































0 comments :

Post a Comment