சொல்.44

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .44 [ 12 /10/2018 ]


 ஆச்சி ! பக்கத்தில இருக்குற அனுமார் கோயிலுக்கு போகாமல் ஏன் தூரமா நடந்துபோய் அம்மன் கோயிலுக்கு போற ….”

இது என் பேரன் என் மனைவியிடம் கேட்டது .

இதையே வேறுமாதிரி யோசியுங்கள் . அருகிலேயே அழகழகாய் கோயில்கள் இருக்க திருப்பதி ,சபரிமலை என மாநிலம்விட்டு மாநிலம் போவதேன் ? உழைத்து சேர்த்த நாலுகாசை அங்கே சென்று கொட்டுவதேன் ?

எங்கும் நிறைந்தவன் இறைவன் என்று சொல்லிவிட்டு ;இல்லை இல்லை அந்த ஊரில் இருக்கும் அந்த சாமிக்கே பவர் அதிகம்னு சொல்வது வேடிக்கையாகவும் வினோதமாகவும் இல்லையா ?

இங்கே இறை நம்பிக்கையைவிட சடங்கு ,சம்பிரதாயம் ,மூடத்தனம் ,பைத்திக்காரத்தனம் எல்லாம் பேயாட்டம் போடும் . கடவுள் நம்பிக்கையினால் அல்ல சடங்கு ,சம்பிரதாயத்தைக் காக்கவே மூச்சைப் பிடித்து பேசுவர் . சாதி என்று வந்துவிட்டால் மதம்கூட இரண்டாம் பட்சம் ஆகிவிடும் .

இந்த மண்ணில் சித்தாந்தப் போர் நடத்துவது அவ்வளவு எளிதல்ல .மூடத்தனமும் , கண்மூடி வழக்கமும் , கேள்வி கேட்காமல் அடிபணியும் இழிவும் , சாதி ,மத போதையும் மிக்க சமூகத்தில் முட்டி மோதி விழுந்து எழுந்து ஊர்ந்து நடந்து செல்ல வேண்டியிருக்கும் .

உங்கள் வீட்டில் இதற்கான கேள்வியை துவக்கலாமே … முதலில் எம் பேரனின் கேள்வி பெருங்கேள்வி ஆகட்டும் !































































0 comments :

Post a Comment