சொல்.52

Posted by அகத்தீ Labels:




தினம் ஒரு சொல் .52 [ 20 /10/2018 ]

என் தாத்தா குடுமியையும் தலைமுடி முன்வெட்டையும் மாற்றி கிராப்புக்கு மாறியபோது வீடே அல்லோகலப்பட்டதாம் . குடியே மூழ்கிவிட்டதாய் அவரது தாத்தாவும் பாட்டியும் அழுது ஆர்ப்பாட்டம் செய்தார்களாம் . இத்தனைக்கும் எம் குடும்பம் பிராமணர் அல்ல .

என் பாட்டி ஜாக்கெட் போட்ட போதும் அதே ஆர்ப்பாட்டம்தான் .

என் அப்பா பெரிய வெங்காயத்தில் தயிர் பச்சடி செய்யச் சொன்னபோதும் ;என் அம்மா அதை செய்த போதும் வீட்டுக்குள் பூகம்பமே வெடித்தது . முட்டை வீட்டுக்குள் நுழைந்த போதும் அப்படித்தான் .

வீட்டுக்குள் கக்கூஸ் கட்டலாமா வேண்டாமா என்பதற்காக நடந்த சண்டை கொஞ்சமா ?

அக்கா வயதுக்கு வந்த பின்னும் பள்ளிக்கு அனுப்ப [ ஐம்பது அறுபது வருசங்கள் முன்பு ] அப்பா ஆச்சியோடு முட்டி மோதியது நினைவில் இருக்கிற்து ஆனாலும் எட்டாம் வகுப்பைத் தாண்டவிடவில்லை .

ஐயர் பையன் லெதர் டெக்னாலஜி படிப்பதும் ; அருந்ததியர் மகள் முட்டி மோதி டாக்டராவதும் மரபை மீறித்தானே ! கணித மேதை ராமானுஜம் வெளிநாடு போனதற்காக அவர் இறந்த போது இறுதிக்கடன் செய்ய சக ஐயர்கள் மறுத்ததும் , அவர் மனைவி கிராமம் கிராமமாய் ஓடி ஒழிந்து செய்ததும் .வரலாறு .இன்று அத்திம்பேர் ஆஸ்திரேலியா ,அண்ணா யூஎஸ் என பீத்திக் கொள்வது மரபை மதித்தால் கிடைக்குமா ?

வீட்டுக்குள் எவ்வளவு மாற்றம் ? கோயிலும் வழிபாடும் மாறாமலா இருந்திருக்கிறது ? சைவமும் வைணவமும் போட்ட சண்டை கொஞ்சமா ? இப்போது மிச்ச சொச்சம் அங்கொன்று இங்கொண்று உண்டு . ஆயினும் எல்லா கோயிலுக்கும் எல்லோரும் போவர் .

மாறாத மரபோ .சடங்கோ ,சம்பிரதாயமோ ,பழக்க வழக்கமோ என்றும் எங்கும் எப்போதும் இல்லை ,மாற்றங்கள் நிகழும் போதெல்லாம் பழமைவாதிகள் முட்டி மோதுவர் . ஆனாம் புதுமையே வெல்லும் ,பழமை வீழும் .




























































































0 comments :

Post a Comment