சொல்.45

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .45 [ 13 /10/2018 ]


 வாசிப்பு என்பது வெறுமே பழக்கமல்ல ,பண்பாட்டின் கூறு . புத்தகத்தைக் காதலித்தவர் ஒருபோதும் அதனை தூக்கி எறியமாட்டார்.

வாசிக்க எனக்கு நேரமே இல்லை என்பது வெறும் சாக்கு . சீரியல் பார்க்காமல் இருக்கிறீர்களா ? அரட்டை அடிக்காமல் இருக்கிறீர்களா ? கொஞ்சாமல் ,சண்டை போடாமல் இருக்கிறீர்களா ? வாசிப்பில் லயித்துவிட்டால் நேரம் தானே கிடைக்கும்.

புத்தகத்தை எடுத்தால் தூக்கம் வருகிறதா ? ஆம் என்போரே அதிகம் . முதலில் உங்களை காந்தமாய் ஈர்க்கும் புத்தகத்தில் வாசிப்பைத் துவங்குங்கள் .அதன் தரம் .தகுதி பற்றி அலட்ட வேண்டாம் . வாசிக்க வாசிக்க உங்கள் ரசனையும் தேடலும் தானாகவே மேம்படும் .ஆகவே முதலில் பிடித்ததில் தொடங்குங்கள் !

எழுத்துக்கூட்டி வாசிப்பது ,சொற்களாய் வாசிப்பது ,வாக்கியங்களாய் வாசிப்பது , பத்திகளாய் வாசிப்பது ,மனதுக்குள் வாசிப்பது ,உரக்க வாசிப்பது ,தனியாய் வாசிப்பது ,கூட்டாய் வாசிப்பது , அமைதியான இடத்தில் வாசிப்பது ,ஓடும் ரயிலில் வாசிப்பது ,வாசிப்பதே வேலையாய் செய்வது ,வேலையின் நடுவே வாசிப்பது ,அடடா வாசிப்பது என்பதில்தான் எத்தனைவகை ? எத்தனை சுவை ?

மீண்டும் சொல்கிறேன் . வாசிப்பு என்பது வெறுமே பழக்கமல்ல ,பண்பாட்டின் கூறு . புத்தகத்தைக் காதலித்தவர் ஒருபோதும் அதனை தூக்கி எறியமாட்டார்.

சென்றவாரம் முழுவதும் புதிய புத்தகம் எதுவும் வாசிக்காதாவர் வார்த்தையில் நறுமணம் வீசுவதில்லை என்பது சீனப் பழமொழி.

உங்கள் வார்த்தையில் நறுமணம்வீச வாசியுங்கள் ! தொடர்ந்து வாசியுங்கள் ! வாசித்ததை அடுத்தவருடன் பகிருங்கள் ! அதன் இன்பமே தனி !


































































0 comments :

Post a Comment