சொல் .26

Posted by அகத்தீ Labels:



தினம் ஒரு சொல் .26 [ 24/09/2018 ]

புது வீட்டில் ஒழுங்கு படுத்தும் போது எவ்வளவு கறாரான கட்டளைகள் விதிகள் போடப்பட்டன . மூன்றே மாதங்களில்  அவை என்ன ஆயின ?

தேவை ஒவ்வொன்றிற்கும் ஒரு இடத்தை கொடுத்துவிட்டனவே ! அதுவே இயல்பு . ஆசை மட்டுமே எதையும் தீர்மானித்துவிட முடியாது ; அவசியத் தேவையே முந்தி நிற்கும் .

வீடு மாறும் போது எவ்வளவோ கழித்தபின்னும் ஆறே மாதத்தில் எவ்வளவு குப்பை சேர்ந்துவிட்டது ? ஏன் ?

எது குப்பை என்பதில்கூட ஆளுக்கொரு அளவுகோல் உண்டே ! அதைக் கணக்கில் கொள்ளாமல் எதையும் அவ்வளவு சுலபமாய் தூக்கி எறியவும் முடியாது .

வீடென்பது அருங்காட்சியகமும் [மியூசியமும்] அல்ல ; குப்பைத் தொட்டியும் அல்ல . புதியன சேர்வது தவிர்க்க முடியாததுபோல் பழையன கழித்தலும் அவ்வப்போது நடத்தப்பட்டாக வேண்டும் .

வீட்டிலுள்ள அனைவரும் ஒத்துழைத்த்து மாதந்தோறுமோ மூன்று மாதத்துக்கு  ஒரு முறையோ வேண்டாதவற்றை உரியமுறையில் வெளியேற்றுக ! ஆண்டுக்கொரு போகி போதாது !!!











 .





0 comments :

Post a Comment