சொல் 4

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் … 4 [ 25 /8/2018 ]

கணவர் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் வாழ மனைவிக்கு பலவித நோண்புகளை வழிபாடுகளை கட்டமைத்திருக்கிறது மதமும் பண்பாடும் .

மனைவியர் நலம் வாழ ஏதேனும் ஒரே ஒரு நோண்பையேனும் கணவர்களுக்கு கட்டமைத்திருக்கிறதா அதே மதமும் பண்பாடும் .

முளையடித்து மாட்டைக் கட்டிப் போடுவதுபோல் ஒரே வட்டத்தில் சுற்றிசுற்றி வரும் இயந்திரமாக பெண்களை மாற்றிடத்தான் அனைத்து சடங்குகளும் சம்பிரதாயங்களும் . 

ஆனால், புனித முலாம் பூசப்பட்டிருக்கும் .

பாலின சமத்துவமும் பொதுவாய் சடங்கு ,சம்பிரதாயங்களும் எதிர் எதிராகவே இருக்கும் ; இதை உணராமலே பெண்கள் அந்த செக்குமாட்டுத் தடத்தில் உழல்வதுதான் விநோதம் .

உணர்ந்தோரும் குடும்ப நிர்ப்பந்தத்தால் அதனோடு வாழும்படியான நிர்ப்பந்தச் சூழல் .என் செய்ய ?


0 comments :

Post a Comment