சொல் .16

Posted by அகத்தீ Labels:




தினம் ஒரு சொல் … 16 [ 6 /9/2018 ]

உறவினரோ வேண்டியவரோ உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருக்கும் போது கட்டாயம் போய் பார்க்கத்தான் வேண்டுமா ? அலைபேசியில் விசாரித்தால் போதாதா ?

பொதுவாக மருத்துவமனையில் நோயாளியும் மருத்துவ ஊழியர்களும் மட்டுமே இருப்பதே நன்று . பல நாடுகளில் இதுவே நடைமுறை.

மிக அவசியத் தேவையின் பொருட்டு மருத்துவமனை அனுமதிக்குமானால் ஒரே ஒரு நபர் உடன் இருக்கலாம் .பார்வையாளர்கள் ,தீடீர் அலோசகர்கள் என கூட்டம் சேர்வது மருத்துவச் சூழலுக்கும் கேடு .தேவையற்ற மனச் சங்கடமும் வந்து சேரும் .

அதிலும் நோயாளியைப் பார்க்க வரும் ஒவ்வொருவரும் அள்ளிவீசும் இலவச மருத்துவ ஆலோசனைகள் பெரிதும் நண்மைக்குப் பதில் சிக்கலையே உருவாக்குகிறது .

மருத்துவமுறை எதுவாயினும் சில ஒழுங்குகளை கறாராக அமுலாக்கிய தீர வேண்டும் .எல்லோரும் அதற்கு ஒத்துழைத்தே ஆகவேண்டும் .

மருத்துவமனைக்கு கூட்டமாகப் போவதும் , தேவையற்றதை வாங்கிச் செல்வதும் , எந்தவித புரிதலுமின்றி பொருத்தமே இல்லாமல் ஆலோசனை என்கிற பெயரில் அபத்தமாய் ஏதேனும் உளறுவதுமே பாசத்தையும் நெருக்கத்தையும் மரியாதையும் காட்டும் வழியா ? இந்தத் தப்பான பார்வையிலிருந்து எப்போது விடுபடப் போகிறோம் ?

















































































                                                                                      




 













0 comments :

Post a Comment