சொல் 9

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் … 9 [ 30 /8/2018 ]

நான்கு பேர் இருக்குமிடத்தில் ஐந்தாவதாக ஒருவரை எல்லோரும் கழுவி ஊற்றிக் கொண்டிருப்பர் . அதில் ஒருவர் தனியாக அந்த ஐந்தாவது நபரிடம் எல்லாவற்றையும் போட்டுக் கொடுத்துக் கொண்டிருப்பார் .

நான் அப்படி இல்லை என்று நாம் சொல்லிக் கொண்டாலும் ;இதில் விதிவிலக்கு அபூர்வமே !

முகத்துக்கு நேரே , நீ செய்வது சரி அல்லது தப்பு ; இது எனக்கு பிடிக்கவில்லை ; இதில் எனக்கு உடன்பாடில்லை ; நான் இப்படித்தான் செய்யப்போகிறேன் என பேசும் இயல்பு நம்மிடையே மிகக்குறைவு .

கேட்டால் முகத்திலடித்தால் போல் எப்படிச் சொல்வது ? அது நாகரீகமாக இருக்குமா ? என்றெல்லாம் சமாதனம் சொல்லி நழுவுவது நம் பழக்கம் .

கணவன் மனைவியிடம் மறைப்பது ;மனைவி கணவனிடம் மறைப்பது ;தந்தை மகனிடம் மறைப்பது ;மகன் தந்தையிடம் மறைப்பது என எல்லாமே திரைமறைவு செயல்பாடுதான் நம்முடையது .

மூடுண்ட சமூகம் இது .ஐரோப்பியரைப் போல் திறந்த சமூகம் அல்ல இது .

நாம் எப்போது வெடிப்புற பேசப் போகிறோம் ? எப்போது திறந்த புத்தகமாய் செயல்படப் போகிறோம் ?

நட்போ ,உறவோ யாராயினும் குறை நிறைகளோடு ஏற்கப் பழகுவதே இதற்கு முதற் பயிற்சி .முதல் படி.




















 “












0 comments :

Post a Comment