சொல் .22

Posted by அகத்தீ Labels:



தினம் ஒரு சொல் .22 [ 17/09/2018 ]

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் திருமணம் முக்கியமான நிகழ்வே ! ஆனால் திருமணம் மட்டுமே வாழ்க்கை இல்லை .

திருமணம் வேண்டுமா .வேண்டாமா என் முடிவெடுக்கிற உரிமையும் ஒவ்வொருவருக்கும் உண்டு .

குழந்தை பேறு குடும்ப வாழ்வில் மிக காத்திரமானதே ஐயமில்லை . ஆனால் குழந்தை இல்லை எனில் அது பிழையோ முழுமையற்ற வாழ்வோ அல்ல .

திருமணமோ ,குழந்தை பேறோ  அதற்குரிய வயதை எட்டிய ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமை . அதில் தேவையற்று மூக்கை நுழைக்க மூன்றாம் நபருக்கு உரிமை இல்லை .

பெற்றோரே ஆயினும் பிள்ளைகளின் விருப்பம் ,உரிமை உணர்ந்து வினையாற்றல் காலத்தின் தேவை .இதில் தேவைக்கு அதிகமாய் வருத்திக்கொள்ளல் விரும்பத்தக்கதல்ல .

நம்மைவிட நம் பிள்ளைகள் நிச்சயம் மிகச் சரியான முடிவெடுப்பார்கள் என்கிற நம்பிக்கையோடு அவர்களின் விருப்பம் ,தேவை ,உரிமை இவற்றுக்கு மதிப்புக் கொடுக்க பழகுவதே பெற்றோருக்கு அழகு !

தோளுக்கு மிஞ்சிய மகனோ / மகளோ தோழரே என உணர்வீர் ! உறவில் புதிய பார்வை வளர்ப்பீர் !

                                  





 .





0 comments :

Post a Comment