அதிலும் தோற்றுவிட்டார்

Posted by அகத்தீ Labels:



அதிலும் தோற்றுவிட்டார் …. !!!!

முதலில் பொய் சொன்னார்கள்
அப்புறம் அந்தப் பொய்யை
சீவி சிங்காரித்து ஜோடித்துச் சொன்னார்கள்

அப்புறம்
வளர்ச்சி எனும் வர்ணம் பூசிச் சொன்னார்கள்

அப்புறம்
துல்லியத் தாக்குதல் என்று
அதிரச் சொன்னார்கள்

அப்புறம்
தேசபக்த முலாம் பூசி
உணர்ச்சி கொப்பளிக்கச் சொன்னார்கள்

அப்புறம்
பாகிஸ்தான் சதி என்று
பச்சையாய் புழுகினார்கள்
இந்து இந்து என ஜெபித்துகொண்டே
கட்டியுள்ள இடுப்பு வேட்டியை உருவிச் சொன்னார்கள்

விதவிதமாய் வேஷங்கட்டி
வார்த்தை ஜாலங்காட்டி
சொன்னதெல்லாம்
பொய் பொய் பொய்
பொய்யைத் தவிர வேறில்லை .

தப்பித் தவறி எங்கேயாவது எப்போதாவது
ஒரு உண்மையையாவது
உளறியிருக்கமாட்டாரே !
தேடித் தேடி சலித்துப் பார்த்தால்……

அதிலும் தோற்றுவிட்டார் மோடி !!!!

-சு.பொ.அ.


0 comments :

Post a Comment