சொல் .18.

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .18 [ 8/09/2018 ]

ஒவ்வொருவருக்கும் ஒரு நிறம் பிடிக்கும் ; இன்னொரு நிறம் பிடிக்காது .இதற்கு என்ன காரணம் ?

மகிழ்ச்சியான மற்றும் சவாலான தருணங்களின் போது குறிப்பிட்ட நிற உடை அணிவதை சிலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர் .ஏன் ?

ஒரு குறிப்பிட்ட இசை அல்லது ஒரு குறிப்பிட்ட பாடல் தனக்கு உற்சாகம் தருவதாய் சிலர் நினைக்கிறார்கள் . ஏன்?

இப்படி ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவருக்கும் பிடித்த ,பிடிக்காத ,உற்சாகம் ஊட்டுகிற ,சோர்வூட்டுகிற ஏதேனும் ஒன்று இருக்கக்கூடும் .ஏன் ?

இதற்கெல்லாம் ஏதேனும் காரணம் இருந்தாக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை . பழக்கத்தின் விளைவாகவும் இருக்கலாம் . தனிநபர் விருப்பம் சார்ந்ததாகவும் இருக்கலாம் .

இது முழுக்க முழுக்க தனிநபர்  மனவோட்டம் சார்ந்தது என்பதால் குறை சொல்ல ஏதுமில்லை . மாறாக அது அவரின் சுதந்திரம்கூட.

ஆனால் , ராசி ,தோஷபரிகாரம் , என ஏதேனும் கற்பிதங்களை முன்வைத்து ஒவ்வொன்றுக்கும் புனிதம் கற்பிப்பதையோ நிராகரிப்பதையோ ஏற்பது சரியா ? யோசியுங்கள் !அவ்வளவுதான்….     


1 comments :

  1. சிகரம் பாரதி

    நம் மீதும் நம் திறமை மீதும் நம்பிக்கை கொண்டால் எல்லாம் ஜெயமே!

    https://first.sigaram.info/

Post a Comment