சொல் 13

Posted by அகத்தீ Labels:



தினம் ஒரு சொல் … 13 [ 3 /9/2018 ]

பாலின சமத்துவம் பற்றிய எந்த ஒரு விவாதமும் ஏதோ ஒரு வகையில் பெண்களே பெண்களுக்கு எதிரியாய் இருப்பதாகக் கேலியோடு முன் வைக்கத் தவறுவதே இல்லை .

வரதட்சணை கேட்பது யார் ? மாமியார் என்ற பெண் தானே ! பெண் குழந்தைதான் வேண்டும் , ஆணெனில் கருவிலே கொல் என்பதிலும் பெண்ணுக்கு ஓர் பங்குண்டே!

இப்படி அடிக்கடுக்காய் கேட்பது இப்போது வழக்கமாகவே ஆகிவிட்டது.

ஆணாதிக்கம் என்பது ஆணிடம் மட்டுமே உள்ள ஓர் தீய குணம் என யார் சொன்னது ?

ஆணை மையப்படுத்தியே அனைத்தையும் பார்ப்பதே அளப்பதே ஆணாதிக்கம் எனப்படும் .இது ஆணிடம் மட்டுமல்ல ; பெண்ணிடமும் நிரம்பி இருக்கிறது .ஒவ்வொருவரிடமும் இருக்கிறது.

ஆணிடம் இருப்பினும் பெண்ணிடம் இருப்பினும் அதன் பாதிப்பு பெண்களுக்கு என்பதே உண்மை .

 ஆணாதிக்க எதிர்ப்பு என்பது ஆண்களுக்கு எதிரானது அல்ல ; ஆணிடமும் பெண்ணிடமும் குடிகொண்டுள்ள ஆண் மையச் சிந்தனையைத் துடைத்துவிட்டு ; பாலின சமத்துவப் பார்வையை அனைத்திலும் முன்னெடுப்பதே ஆகும் .
இது எளிதானதல்ல ; பெரும் கருத்துப் போராட்டம் நடத்த வேண்டிய களமே !

































                                                                




 













0 comments :

Post a Comment