சொல். 19.

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .19 [ 13/09/2018 ]
[ நான்கு நாள் விடுப்புக்கு பிறகு மீண்டும் தினம் ஒரு சொல் ]

அன்றாட வாழ்வில் அடுத்தவர்களை மதிப்பது என்பதன் பொருள் அவர் சொல்லுவதற்கு எல்லாம் தலையாட்டுவதல்ல .

நமக்கு உடன்பாடில்லாத அல்லது பிடிக்காத ஒன்றை ஏற்க வேண்டியதில்லை . ஆனால் அதை அவர்களுக்குத் தெரிவிப்பதிலும் அதனை அவர்கள் புரிந்து கொள்வதிலும்தான் மனித நாகரீகம் குடிகொண்டுள்ளது .

குடும்ப வாழ்வில் பொதுவாய் இது அமலாகவில்லை .குடும்பத் தலைவர் எனில் அது சர்வாதிகாரம் கொண்ட பொறுப்பென நினைக்கின்றனர் .

எதிர்த்துப் பேசுவதோ ,ஏன் எதிர்த்து கேள்வி கேட்பதோகூட ஒழுக்கக்குறைவாக அடங்காபிடாரித்தனமாகப் பார்க்கப்படுகிறது .

குடும்பத்தில் ஜனநாயம் பேணப்படுவதில் மிகுந்த குறைபாடு உள்ளதை புரிந்து கொள்ள வேண்டும் .

கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ,பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ஒரு  மனம் திறந்த உரையாடல் கிட்டத்தட்ட இல்லை .

சமூகத்தின் அடிப்படை அலகான குடும்பத்தில் புறக்கணிக்கப்படும் ஜனநாயகத்தன்மை ஒட்டு மொத்த சமூகவாழ்விலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எதிர்வினை ஆற்றுகிறது .

சர்வாதிகாரத்தின் ஊற்றுக்கண் உங்கள் வீட்டுக்குள்ளும் இருக்கிறது .ஜனநாயகத்துக்கான போராட்டமும் அங்கிருந்துதானே தொடங்க வேண்டும்!


0 comments :

Post a Comment