பழைய பெருங்காய டப்பா

Posted by அகத்தீ Labels:

 



 அவன் கிடக்கான்

பழைய பெருங்காய டப்பா

ஏன் அப்படிச் சொன்னார்கள் ?

ஒட்டிக் கொண்டிருந்த வாசமும்

காலவெளியில் கரைந்து போனதாலா ?

தாத்தா யானை மேல் வந்த கதையை

சொல்லியே சும்மா இருப்பதாலா ?

எப்படியோ விட்டுத் தொலை !

ஊத்தைச் சடலத்தை உப்பிருந்த பாண்டத்தை

தூக்கி எறியும்  வரை  சொல்லியே மனதை

சோர்ந்துவிடாமல் வைத்திருந்தால் சரிதான் !

 

[ ஒரு முதியவரின் பிலாக்கணத்தை கேட்ட பொழுதில் …]

 

சுபொஅ.

28/8/24.

 

 

 


0 comments :

Post a Comment