அன்பின் அரிச்சுவடியும் அறியாத ஜடங்கள் !

Posted by அகத்தீ Labels:

 




விவாதம் உரையாடல் அபிப்பிராயம்

எந்த சொல்லும் பொருந்தவில்லை

அவர்களின் வெறுப்பு உமிழும் வாய்களுக்கு!

 

குடிகாரன் குடிவெறியில் எப்போதேனும்

உண்மையை உளறிவிடக் கூடும் !

மதவெறியர் மறந்தும் மனிதம் பேசுவதில்லை !

 

மதவெறி சாதிவெறி இனவெறி எங்கும்

மானுடத்தின் முதல் வைரி !

அன்பின் அரிச்சுவடியும் அறியாத ஜடங்கள் !

 

இவர்களோடு வாழ்வது கொடிதினும் கொடிது

இருப்பினும் வேறு என்ன வழி ? – தயங்காமல்

அவர் முகமூடியைக் கிழித் தெறி !

 

சுபொஅ.

03/08/24.


0 comments :

Post a Comment