கேள்விக்கும் பதிலுக்கும்கூட ...

Posted by அகத்தீ Labels:

 


நான் நான் நான் என்கிற சுயநலத்தைவிட நாம் , நாங்கள்  என்கிற பொதுநலம் மேலானது அல்லவா ?

 

 “இல்லை”என்றோ “ஆம்” என்றோ பதில் சொல்லுவதிலும் சிக்கல் உண்டு .

 

அவர்  “நாம்” என யாரைச் சொல்லுகிறார் ? “ நாங்கள்” என யாரை அடையாளப் படுத்துகிறார் ?

 

 “நாம்” “நாங்கள்” என்பது சாதியைக் குறிக்கவா ? மதத்தைக் குறிக்கவா ?

 

கேள்விக்கும் பதிலுக்கும்கூட வர்க்க சாயம் , வர்ண சாயம் உண்டுதானே !

 

பேசுகிறவர் ,பேசுகிற காலம் ,பேசுகிற இடம் பேசுகிற நோக்கம்  இப்படி எழும்

எல்லா கேள்விக்கும் விடை தேடின் . பொருள் துலங்கும்

 

சுபொஅ.


0 comments :

Post a Comment