நான் நாம் நான் நாம்

Posted by அகத்தீ Labels:

 

’நான்’ என்பதைவிட

 ‘நாம்’ என்பது நல்லதுதானே

அப்படித்தான் நினைத்திருந்தேன் நானும்

அவன் ‘நாம்’ என்று சொன்னபோது

முதலில் புரியவில்லை

புரிந்த போது உரக்கச் சொன்னேன்

அந்த ‘நாம்’ இல் நான் இல்லை .

வெறுப்பை விதைக்கும் ‘நாம்’இல்

‘நான்’ ஒரு போதும் இருக்கவே மாட்டேன்

யாருக்கு எதிரான ’நாமிலும்’’நான்’இல்லை.

இப்படி ‘நான் ‘ சொல்வது திமிரல்ல

நல்லிணக்கம் .பன்மையின் வலிமை .

’நான்’ சொல்வது புரிந்ததா ?

 

சுபொஅ.

13/12/25.


0 comments :

Post a Comment