ஏன் நினைக்கிறாய்

Posted by அகத்தீ Labels:

 

உன்னை இன்னும் எல்லோரும்

நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமென

ஏன் நினைக்கிறாய்

உதிரப்போகும் வயதில்…

 

உன் காலம் வேறு !

உன் அனுபவம் வேறு !

இன்று எல்லாம் மாறிப்போனது

இன்றைய வேகமான வாழ்க்கைக்கு

ஈடுகொடுக்க நாடே திணறுகிறது !

உன்னை நினைக்க கொண்டாட

அவர்களுக்கு ஏது நேரம் ?

பாஸ்ட் புட்

பாஸ்ட் டிராக்

எல்லாம் ரெடி மேட்

எல்லாம் ஆண் லைன்

எல்லாம் கையடக்க மொபைலில்

வாழ்க்கை முழுவதும்

அப்படித்தான்…

 

உன்னை இன்னும் எல்லோரும்

நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமென

ஏன் நினைக்கிறாய்

உதிரப்போகும் வயதில்…

 

[ நேற்று நடை பயிற்சியில் என்னோடு வந்தவருக்கு ஆறுதலாகச் சொன்னது ]

 

சுபொஅ.

08/12/25.

 

 

0 comments :

Post a Comment