எந்த சாமிக்குத் தெரியும் ?

Posted by அகத்தீ Labels:

 


கண்கள் மெல்ல மெல்ல பார்வையைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றன.

காதுகள் கொஞ்சம் கொஞ்சமாய் கேட்கும் திறனை இழந்து கொண்டிருக்கின்றன .

மூக்கு படிப்படியாய் நுகரும் சக்தியைத் தொலைத்துக் கொண்டிருக்கிறது .

நாக்கு அணு அணுவாய் மரத்துக் கொண்டிருக்கிறது

வாய் வெறுமே  வாசலாய்ச் சுருங்கிக் கொண்டிருக்கிறது

கை கால்கள் முடங்கி கிடக்கின்றன

மூளை அழுகி நாறுகிறது

மரணத்தை முறைப்படி எப்போது அறிவிப்பார்கள்?

‘ இந்திய ஜனநாயகம்’ புதைக்கப்படுமா ? எரிக்கப்படுமா ? கழுகு காக்கைத் தின்ன வீசப்படுமா ?

எந்த மதத்து சாமிக்கு சரியாகத் தெரியும் ? கேட்டுச் சொல்லுங்கள் பக்தர்களே !

 

சுபொஅ.

28/12/25.


0 comments :

Post a Comment