Posted by அகத்தீ Labels:

 


தனிப்பட்ட முறையில் யாரோடும் பகைமை இல்லை .

என்னைப் பிடிக்காதவர்கள் இருக்கலாம் ; அதனால் அவரை எனக்கு பிடிக்காது என்பது இல்லை .

அந்தந்த நேரத்தில் அவரவர் நியாயம் அப்படியே இறுதிவரை தொடர வேண்டிய அவசியமில்லை .

ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு செயலும் அந்ததந்த நேரத்துத் தேவை என்பதை யாரும் மறுப்பதற்கில்லை .

முன்பு பேசிய வார்த்தைக்குள்ளேயே யாரும் ஆணி அடித்து நின்று கொண்டிருக்க முடியாது .

வாழ்க்கையும் சிந்தனையும் தினம் தினம் புதிதாகிக் கொண்டே இருக்கும் . அதை தடுக்க முடியாது .

ஒரு முளையில் கட்டிப் போட முனையும் சாதி ,மதம் , கடவுள் அனைத்தையும் அறுத்தெறிந்தாக வேண்டும்.


நீ , உன் குடும்பம் , உன் சகமனிதன் ,சக உயிர் , ஊர் , நாடு , உலகம் , தண்ணீர் ,ஆகாயம் ,காற்று ,பூமி , எல்லாம் பாதுகாக்கப்பட வேண்டும் !

எல்லாம் உனக்கு மட்டுமல்ல அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கும் எல்லா தலைமுறைக்கும் சொந்தமானது .

 

கண் கெட்ட பின்போ ; கெடும் முன்பே ஞானம் வந்தால் சரி !

 

புதிதாகச் சிந்திக்கப் பழகு !

மனிதனாக வாழப் பழகு !

 

சு.பொ.அ.

29 /12 /25.

 

[ விடை பெறும் ஆண்டு மண்டையில் குட்டிச் சொன்னவை ]


0 comments :

Post a Comment