அலையில்லா கடல் தேடி…

Posted by அகத்தீ Labels:

 



அலையில்லா கடல் தேடி…

 

ஒரு குவளைத் தண்ணீரிலும் அலை இருக்கும்.

ஆழக் கிணற்றிலும் அலை இருக்கும்

குளம் ,ஏரியிலும் அலை இருக்கும்

கடலில் நிச்சயம்  அலை இருக்கும்!

எல்லா அலையும் ஒன்றாமோ ?

 

காலை முத்தமிடும் அலையும்

ஊரைச் சுருட்டும் சுனாமி அலையும் ஒன்றாமோ?

அலையில்லா கடல் அழகென்று யார் சொல்லுவார் ?

கரையோரம் மட்டும் அலை முத்தமிடுமா ?

நடுக்கடலில் அலை நித்திரை கொள்ளுமா ?

ஆழ்கடலில்தான் சுனாமி தோன்றும் என்கிறார்களே !

 

நித்தம் அலையோடு போராடி வாழ்வோரும் உண்டு

அலையாமல் அசையாமல் ஜடமாக வாழ்வோரும் உண்டோ ?

அலையில்லா கடல் தேடி அலைவாயோ ?

அலையடிக்கும் மனசோடு நீ போராடலாம்

அலையில்லா பொழுதொன்று வாய்க்குமோ !

அலையின் அளவறிந்து ஒழுகு ! – தினம்

அலையோடு நீராடிப் பழகு ! அது அழகு !

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

31/05/2024.

0 comments :

Post a Comment