இது பதில் அல்ல என் உணர்வு ….

Posted by அகத்தீ Labels:

 


இது பதில் அல்ல என் உணர்வு ….

 

 

நேற்று ஓர் இசைக் கச்சேரி வீடியோ பார்த்துக் கொண்டிருந்தேன் . ஒரு பாடலை மேடையில் பாடும் போது வந்திருந்த ரசிகர் கூட்டத்தைக் காட்டினார்கள் . கிட்டத்தட்ட கணிசமான ரசிகர்கள் வாய் அந்தப் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தன .

 

எனக்கு அப்போது ஓர் ஐயம் எழுந்தது . அந்த வாய்கள் முணுமுணுத்தது அந்த பாடல் வரிகளையா அல்லது பாடலின் இசையையா ? இசையமைக்கப் படாவிட்டால் அந்த பாடல் வரிகள் நினைவில் இருந்திருக்குமா ? பாடல் வரிகள் இல்லாமல் இசைமட்டும் மீட்டியிருந்தால் எத்தனை வாய் முணுமுணுத்திருக்கும் ?

 

எதுகை மோனை என சந்தம் கொஞ்சும் கவிதைகள் நினைவில் ரீங்கார மிடுவது போல் பிற கவிதைகள் மனனம் செய்தாலும் நினைவில் இருப்பது சிரமமா இருக்கிறதே ஏன் ?

 

செய்யுள் , கவிதை ,வசனம் இவற்றைவிட பாடல் உயிர் துடிப்பானது . இசையோடு மொழியும் இணையும் போதே அது பாடலாகும் . இரண்டையும் தனித்தனியாகக் கூறுபோட்டால் இரண்டுக்கும் ஜீவன் கிடையாது .

 

இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை…. தாய்க்கொரு பழி நேர்ந்தால் மகர்க்கில்லையோஅன்னை தமிழுக்குப் பழி நேர்ந்தால் உனக்கில்லையோ….

 

சுபொஅ.

26/05/2024.


0 comments :

Post a Comment