கொடியென்பது..

Posted by அகத்தீ Labels:





கொடியென்பது...


தேசியக் கொடியை - எங்கும்
கம்பீரமாய்ப் பறக்கவிடுங்கள்
அது வெறும் துணி அல்ல
எம் தேசத்தின் ஆத்மா ...

நூலால் நெய்யப்படதல்ல
தியாகவேள்வியில் முறுக்கேறிய
எமது மக்களின் நரம்புகளே
ஊடும் பாவுமாய் பிணைந்திருக்கிறது

வண்ணங்கள் சாயப்பூச்சல்ல
மக்கள் ரத்தமும் வியர்வையுமே..
அதில் மதம் இல்லை சாதி இல்லை
தியாகம் உண்டு தீரம் உண்டு

நேற்றைய தியாகத்தைப் போற்றுவோம்
நாளைய தியாகத்துக்கு தயாராவோம்
ஆனால் .. ஒன்று .. அப்போது - அசோகச்சக்கரம்
மேட்டுக்குடி பக்கமாய் சுழலவிடமாட்டோம் .

சு.பொ.அகத்தியலிங்கம் .
[ 1998 ஆம் ஆண்டு ‘ விடுதலைத் தழும்பு’ நூல் முதல் பதிப்பு வந்தபோது அதில் இடம்பெற்றது ]

0 comments :

Post a Comment