இந்திய சிந்தனை மரபும் மார்க்சியமும்

Posted by அகத்தீ Labels:



இந்தியச் சிந்தனை மரபும் மார்க்சியமும்

சு.பொ. அகத்தியலிங்கம்


இந்திய நாத்திகம்,
ஆசிரியர் : தேவிபிரசாத் சட்டோபாத்யாயா,
தமிழில் : சாமி,
வெளியீடு : பாரதி புத்தகாலயம்.
7 - இளங்கோ தெரு, தேனாம் பேட்டை,
சென்னை - 600 018.
பக் : 344, விலை : ரூ.220.

“இந்தியாவின் மரபு எனக் கறாராக வரை யறுக் கப்படக்கூடிய தத்து வத்தை விருப்பு வெறுப்பின்றி ஆராய்கிற போது கடவுளுக்கு அங்கே இடம் தேடுவது வேண் டாத வேலையே என்பது தெளிவாகும். இந்தியாவின் தத்துவங்களில் இரண்டே இரண்டை மட்டுமே ஆத்திகம் சார்ந்தவை என மிகுந்த தயக்கத் துடன் கூறலாம்.....”

“நமது முக்கியமான தத்துவங் களுக்குள் வேதாந்தமும் (அதுவும் கூட ஒரளவுக்கே எனலாம்) நியாய - வைசேசிசமும் குறிப்பாகப் பிற் கால நியாய - வைசேசிசமும் மட்டுமே ஆத்திகம் சார்ந்தவை.இதற்கு மாறானவை பவுத்தம், சமணம், பூர்வ - மீமாம்சம், சாங்கியம், லோகாயதம் மற்றும் ஆதி நியாய - வைசேசிசம் ஆகி யன; அவையனைத்தும் தீவிரநாத்திகவயமானவை. ஆக,இந்திய ஞானத்தில் நாத்திகத் திற்குள்ள ஆகப்பெரும் முக்கியத்துவத்தைக் கேள்விக் குள்ளாக்க விரும்பினால் அதைப் பிரதிநிதித்துவப் படுத்திய பல்வேறு இந்திய தத்துவ ஆசான்களைப் புறந்தள்ளியாக வேண்டும்”
சட்டோபாத்யாயா போகிற போக்கில் சொல்லவில்லை; ஆழ்ந்த புலமையோடு மேற் கண்ட தத்துவச் சாரங்களைக் கற்றுத் தேர்ந்து; சாறு பிழிந்து இந்நூலில் தந்துள்ளார் .“நமது நாகரீகத்தின் வரலாற்றைப் பின்னோக்கி நுணுகி ஆராய்ந்து பார்க்கும் போது வரலாற்றுக்கு முந்தைய ஒரு காலகட்டத்தில் அங்கே கடவுளே காணப்படவில்லை என்பதால் நாம் புரிந்து கொண் டிருக்கிற பொருளிலான மதம்இருக்கவில்லை என்பதை அறியமுடிகிறது ; ஆகவே தான் வேதங் களில் பேசப்படும் ஆதி ஆத்திகம் முக்கியமானது” என்கிறார் சட்டோபாத்யாயா.சொல்வதோடு நில்லாமல் அதனுள்ளும் நுழைந்து ஆதியில் எவ்வித சிறப்பு மற்ற எண்ணற்ற தெய்வங்களின் நம்பிக்கையில் தொடங்கி ஒரு கடவுள் நோக்கிய பயணமாக ரிக் வேதத்தில் வெளிப் படுவதை சுட்டிக் காட்டுகிறார். ஆதி நாத்திகம் தொடங்கிய சூழலுக்கு நம்மை அழைத்துச் செல்கிறார் .

ஈஸ்வர வாதமென அழைக்கப் பட்ட கடவுள் கோட்பாடு ; அதற்கு எதிர்நிலையில் நிரீஸ்வர வாதம் எனப்படும் கடவுள் மறுப்பு கோட் பாடு என இரண்டு சிந்தனைப் போக்கு உருவானதை மிகச்சரியாகச் சுட்டுகிறார். அதே போல் “ஈஸ்வர வாதத்துக்கும் ஸ்வபாவ வாதம் எனப்படும் இயற்கை வாதத்துக்கும் இடையில் தோன்றிய வாக்குவாதமே இந்திய சிந்தனை மரபில் தோன்றிய மதத் துக்கும் அறிவியலுக்குமான மோதலின் தெளிவான முன்னோட்டம்” என் பதை எடுத்துக்காட்டுகிறார்.

“சுருங்கக் கூறின் “ ஸ்வேதஸ் வதரா ” உபநிடதம் புத்தருக்கு முந் தைய காலத்திலேயே என்று சொல் லுமளவுக்கு மிகத் தொன்மையான காலத்திலேயே தோன்றியிருந்த எண்ணற்ற நாத்திக நிலைப்பாடுக ளுக்குரிய சான்றுகளை நமக்காகப் பாதுகாத்து வைத்துள்ளது..” என்கி றார் சட்டோபாத்யாயா. “ இத்தத் துவங்கள் அனைத்திலும் மிகப் பழமையானது சாங்கியம் ; அதன் நாத்திக உள்ளடக்கமே இந்தியச் சிந்தனை வரலாற்றில் மிகவும் புகழ் பெற்றது எனலாம் ” என்கிற தீர்ப்பை வழங்குவதோடு அது எங்ஙனம் என நிறுவுகிறார் . லோகாயதம் எவ்வாறு வேர்கொண்டது என்பதையும் விளக்குகிறார் .

“…உயிரியல் ஆய்வு நோக்கில் கடவுள் நம்பிக்கையின் பொருத்த மின்மை என்கிற ஒரம்சத்தை மட்டும் கருதுவது வரலாற்று முக்கியத் துத்தைக் குறைத்து மதிப்பிடுவதில் போய் முடியும். உண்மையில் சாங்கிய அறிஞர்கள் அதற்கும் மேலே சென்று ஏனையோரால் ஏற்றுக் கொள்ளப் பட்ட கடவுள் எனும் கருத்து தருக்கவியல்பாங் கில் எந்த அளவு உயர்ந்த பலம் கொ ண்டது என வினவினார்.”புத்தம் , சமணம் ஆகியவை ஆதியில் கடவுள் மறுப்புச் சிந்தனை யோடு விளங்கியதையும்; காலப்போக்கில் அதனுள்ளும் கடவுள் நம்பிக்கை நுழைக்கப் பட்டதையும் மிக நுட்பமாக ஆதரத்தோடு நிறுவுகிறார்.

“ எழுப்பு சுவர் உண்டெனில் / எழுப்பியவன் ஒருவனுண்டே / இவ் வுலகு கண்டு நீ நானும் (கடவுளும் எனப் பொருள் ) உண்டென அறிக/ என்றுரைத்தார் . அவரை நான் / ‘கனமான கடவுளே உனைச் செய்த சிற்பி எவன் ? / காட்டுவீர் என்றவுடனே/ கடவுளைக் காண்கி லேனே..” என்பார் பாரதிதாசன். அவர் சுவரை வைத்து வாதிடு வார்; பழங்கால தர்க்கங்கள் மண்பானையை வனைந்தவர் யாரென்றேவிவாதம் தொடரும். அதனை பலகோணங்களில் பல தத்துவஞானி கள் வாதங்கள் மூலம் இந்நூல் நெடுக சொல்லியுள்ளார் .

அதுமட்டுமல்ல ? “உலகப் படைப்பின் வழி நிறைவடையும் கடவுளின் நோக்கம்தான் என்ன? எந்தவொரு நோக்கமுமின்றி எந்த வொரு அடி மடையன் கூட எதை யும் செய்திடான்?” என குமரிலப் பட்டரின் கேள்வியையும் “ கடவுளின் திருவிளையாடல்” என பாதராயண ரின் பதிலையும் மிகச்சரியாக இணைத்து தெளிவுப்படுத்துகிறார் . கபிலரின் தத்துவ மேன்மையை நிறு வுகிறார்
.ஒவ்வொரு தத்துவ ஞானி யும் எங்கே சரியாக அடியெடுத்து வைத்தார்கள்; எங்கே கோட்டை விட்டார்கள் என நுணுகி ஆய்ந்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக : “ நியாய – வைசேசியத்தில் கடவுள் நுழைந்த பிறகு வேதங்கள் அவரால் அருளப் பட்டவை என்றும் அவரிடமிருந்தே அவை தம் மேலதிகாரத்தைப் பெற் றன என்றும் பேசுவது ..” எப்படி இயல்பாய் போனது என்கிறார் .

விவாதத்தில் “சாமானிய சள” எனப்படும் போக்கு; அதாவது உண்மையான மைய இழையை விட்டு விட்டு குறுக்குசால் ஓட்டுகிற போக்கு; வார்த்தைகளைப் பிடித்து தொங்குகிற போக்கு; ஆத்திகவாதிகளிடம் மேலோங்கி இருந்ததை அம்பலப் படுத்துகிறார் சட்டோபாத்யாயா.

“ சோசலிசத்தின் இந்திய முயற்சி என்பது இந்திய தத்துவ மரபுக்கான போராட்டத்துடன் தொடர்புடை யது என்கிற புரிதலே இந்நூலின் அடிப்படை” என்கிறார் சட்டோ பாத்யாயா . இந்திய தத்துவ மரபில் மார்க்சியத்தை கண்டெடுப்பது எனக் கொச்சையாகப் புரிந்து கொள்ளாமல் ; இந்திய தத்துவ மரபின் சில கூறுகளை அடியொற் றிப் போகிற ஒருவன் இறுதியில் சேருமிடம் மார்க்சியமாகத்தான் இருக்கும் என்கிற சரியான இலக் கோடு இந்நூல் பயணப்பட்டுள்ளது.

“மார்க்சியம் : மாயத் தோற்றமும் எதார்த்தமும்” என கடைசி அத் தியாயத்துக்கு பெயரிட்டிருப்பதும்; அவ்வாறு பேசுவதும் இந்நூலின் செல்நெறியை நன்கு புலப் படுத்தும்.இந்திய தத்துவ ஞானிகள் பெரும்பாலும் நாத்திகராகவே விளங்கிய போதிலும் ; தத்துவப் பாங்கில் வலிமையாக வாதிட்டுக் கடவுள் மறுப்பை நிறுவிய போதி லும் ; இந்திய மக்களில் பெரும் பாலோர் மத மயக்கத்தில் ஆழ்ந் தது ஏன் ? அதற்கான விடை மார்க்சியத்தில்தான் இருக்கிறது. இறுதிஅத்தியாயம் அதைத்தான் சொல்லு கிறது.

முன்னுரையில் சட்டோபாத் யாயா முத்தாய்ப்பாகச் சொல்லி யவரிகள் , “மார்க்சியம் மிகக் கடு மையான நாத்திகவாதம் ஆதலால் அது , இறைவன் ஒருவனில் மட்டுமே (நம்மை உள்ளிட்ட இப்பேரண்ட த்தில்) இருத்தலைக் காண்கிற நமது தேசிய மரபினை அழித்தொழித்து விடும்’ என்கிற கூற்றுதான் மார்க்சி யத்துக்கு எதிரான பிரச்சாரங்களில் ஓங்கி ஒலிப்பது; இப்பிரச்சாரப் பீரங்கிகளைப் பார்த்து நான் கேட்கவிரும்புகிற ஒரேயொரு எளிய கேள்வி இதுதான்: மார்க்சியத்தை நாத்திகவாதம் என நிரூபிக்கிற நீங்கள் இக்கேள்வியை எழுப்புமுன் நமது தத்துவ ஆசான்களின் எழுத்துகளைக் கருத்தில் இருத்த எப்போதாவது உண்மையாகவே முயன்றதுண்டா ? அல்லது இந்தியஞானம் சாராம்சத்தில் இறையை சார்ந்தது எனும் புரட்டை நிலை நாட்டி அதன் வழி மார்க்சியத்தை மடக்கிப்போடும் தமது நோக்கத்தை நிறைவேற்றிட அவையனைத்தை யும் அழித்தொழித்துவிடப் போகி றார்களா ?”

ஆம்.இப்போது தேர்தலில் இட துசாரிகள் பின்னடைந்திருக்கிற சூழலில் - – வலதுசாரி சக்திகள் குறிப்பாக மதவாதப் பிற்போக்கு சக்திகள் கை ஓங்கி இருக்கிற சூழ லில்; சட்டோபாத்யாயாவின் மேற்கண்ட கேள்வி அதிமுக்கியத் துவம் பெறுகிறது. இந்நூலை முன்னணி ஊழியர்கள் அவசியம் பயின்று உள்வாங்கி தத்துவ ஆயுதமாக்கவேண்டியது காலத்தின் கட்டாயம். சாமியின் மொழியாக் கம் நன்று. காலத்தே வெளியிட்ட பாரதி புத்தகாலயத்துக்குப் பாராட்டுகள்.

நன்றி : தீக்கதிர் புத்தக மேசை   3ஜூலை 2014

0 comments :

Post a Comment