நேற்றைய கள்ள ஓட்டும் ; இன்றைய ஓட்டுத் திருட்டும் …

Posted by அகத்தீ Labels:

 


நேற்றைய கள்ள ஓட்டும் ; இன்றைய ஓட்டுத் திருட்டும் …

 

கள்ள ஓட்டு” புதிதல்ல ; தேர்தல் தோறும் பேசப்படுபவைதான் . செத்தவர் வாக்களிப்பதும் , உயிரோடு இருப்பவர் செத்துப் போவதும் தேர்தல் அதிசயங்கள் .ஆங்காங்கு வலுவான கட்சியோ / சாதியோ /தனிநபரோ வாக்குச் சாவடியைக் கைப்பற்றி தங்களுக்குத் தாங்களே வாக்களித்துக் கொள்வது அது . ஆள் மாறாட்டம் செய்து வாக்களிப்பதும் “ கள்ள ஓட்டே” . இவை எல்லாமே சட்டப்படி குற்றம் . கைதாகலாம் .வழக்கு பாயலாம் . ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்படலாம் . இவை எல்லாம் அங்கொன்று இங்கொன்றாக  நடக்கும் . இதுவே தவறுதான் . தவிர்க்க வேண்டும் . தடுக்க வேண்டும் .

 

இப்போது அம்பலப்படுத்தப்படும் “  ஓட்டு திருட்டு” என்பது தேர்தல் ஆணையமே திட்டமிட்டு மோசடி செய்து பாஜக வென்றதாக அறிவிக்கும் மகா மோசடி .ஜனநாய விரோத செயல் . வேலியே பயிரை மேயும் கொடூரம் . இதனை செய்வதற்காகவே தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் குழுவில் இருந்து உச்சநீதி மன்ற நீதிபதியை நீக்கிவிட்டு உள்துறை அமைச்சரை சேர்த்தது மோடி சர்க்கார் . நாக்பூர் கைக்கூலி – ஆர் எஸ் எஸ் அடியாட்களை நியமித்து மோசடியை அரங்கேற்றியது . கொள்ளையடிக்க வசதியாய் தம் கொள்ளைக்கார கூட்டத்தில் ஒருவனையே காவலாளியாக நியமிக்கும் கொடுமை .

 

ஏற்கெனவே நீதிமன்றம் , அமலாக்கத்துறை ,வருமானவரித்துறை ,ஊடகங்கள் ,கல்வி , ,சிபிஐ என ஒவ்வொரு  உறுப்பையும் தன் சாவிக்கு இயங்கும் ரோபட்டாக மாற்றிய நாக்பூர் கண்ட்ரோல் ரூம்  தேர்தல் ஆணையத்தையும் கைப்பற்றிவிட்டது .அதற்கேற்ப சட்டத்தை திருத்தியது மோடி சர்க்கார் . இப்போது தேர்தல் ஆணையம் ’ஓட்டு திருடும் இயந்திரமாகிவிட்டது’ .

 

EVM வாக்கு இயந்திரமும் மோசடிக்கான கைக்கருவி ஆக்கப்பட்டுவிட்டது .

 

“ நான் அளிக்கும் வாக்கு நான் வாக்களித்த கட்சிக்கே போகும் என உத்தரவாதம் தரமுடியுமா தேர்தல் ஆணையமே !” இப்போது மக்களின் கேள்வி இதுவே !

 

நாளை சுதந்திரதினம் .

ஆயின் தேர்தல் ஜனநாயகம் நாக்பூர் நாசசக்திகளிடம்  சிக்கிச் சீரழிவதை எப்படிக் கொண்டாடுவது ?

 

இதை எதிர்த்த போராட்டம் எளிதல்ல ; நெடிய மக்கள் போராட்டத்துக்கு தயாராவோம் ! வெல்வோம் !

 

சுபொஅ.

14/08/25.

 

 


0 comments :

Post a Comment