நெல்லு மரம்

Posted by அகத்தீ Labels:

 

 


’நெல்லு மரம்’ பார்க்க

பயணம் போகும் குழந்தைகள்!

 

புல்லுக்கு நீர் பாய்ச்சும் அதிசயத்தை

இமை மூடாமல் பார்த்தனர் !

 

வாசமுள்ள பூக்கள் வாடிவிடுவதை

கண்டு கண்கலங்கினர் !

 

பந்தியில் இலைபோட்டு பரிமாறியதை

பார்த்து துள்ளிக் குதித்தனர் !

 

பச்சைக் குதிரை தாண்டி விளையாட

பரவசமாய் ஓடினர் !

 

பிளாஸ்டிக் , பாஸ்ட்புட் .டிஜிட்டல் உலகிலிருந்து

விடுபட்ட குழந்தைகள் !

 

சுபொஅ.

21/07/25.

 

 


0 comments :

Post a Comment