“நந்தனார்” படத்தை திரையிடுவதைத் தடுத்த மக்கள் : ஏன் ?

Posted by அகத்தீ Labels:

 



 “நந்தனார்” படத்தை திரையிடுவதைத் தடுத்த மக்கள் : ஏன் ?

 

கே.பி.சுந்தராம்பாள் 1936 லும் , M.M. தண்டபாணி தேசிகர் 1942 லும் நடித்த புகழ் பெற்ற  ‘நந்தனார்’ திரைப்படங்களில் ‘ஆண்டான் அடிமை’ வேற்றுமை ,சேரிவாழ்க்கை மிகைப்படுத்தப்பட்டுப் புலையனும் தீக்குளித்துப் பரிசுத்தனாகிப் பூணூல் அணிந்த பின்னரே மோட்சமடைவதாகக் காட்டப்பட்டதால் அந்தப் படங்களை தங்கவயலில் [KGFல்] திரையிடக்கூடாது எனத் தோன்றிய போராட்டத்தினால் நந்தனார் படங்கள் தங்கவயல் எல்லைக்குள் இன்றுவரை [ இந்நூல் வெளிவந்த 1989 ஆக இருக்கக்கூடும்] வரவில்லை .கலையம்சம் ,  இசைச் சிறப்பின் பொருட்டு பார்க்க விரும்பியவர்கள் அன்றைய பெளரிங் பேட்டைக்கும் [பங்காருப் பேட்டை] பெங்களூருக்கும் சென்று பார்க்க நேர்ந்தது .ஆதிதிராவிட சமூகப் பிரமுகர்கள்  இசையரசு தண்டபாணி தேசிகரை நேரில் சந்தித்து கண்டனம் செய்து நந்தனார் படத் தயாரிப்பாளர்கள் வருணாச்ரமப் பிரிவினையைப் புகுத்திய சூழ்ச்சியினை புரிந்து கொள்ளாமல் அவர் நடித்தது தவறு என மன்னிப்பு கோரவைத்தனர்.”

 

[ பக்கம் : 190 , கோலார் தங்கவயல் வரலாறு . K.S.சீதாராமன்,M.A. 1989 ல் வெளியான நூல் ]

 

 “படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மறியல்கள் செய்து ,திரையரங்குகளை வெடி வைத்து தகர்க்கும் நிலை உருவாகி…” என நூலில் 290 ம் பக்கமும் குறிப்பிடுகிறார் .

 

இச்செய்தியை இந்நூலில் வாசித்த போது  1936 /42 களிலேயே வெளிப்பட்ட அன்றைய பார்வைக் கூர்மை வியக்க வைத்தது . நூல் குறித்து பின்னர் எழுதுகிறேன்.

 

சுபொஅ.

13/06/24.



0 comments :

Post a Comment