அந்த மந்திரக்கோல்

Posted by அகத்தீ Labels:

 




அந்த மந்திரக்கோல்

ஒன்று

உங்களிடம் இருந்தால் போதும்

தகுதி ,தரம் ,திறமை ,பதவி எல்லாம்

தானாய் உங்கள் வீடு தேடி வரும் …

 

மந்திரக்கோல் சும்மா கிடைக்காது

  “சடங்கு” “சாஸ்திர” ஞானம் வேண்டும்

சாஷ்டாங்க நமஸ்காரம்

செய்யத் தெரிய வேண்டும்.

 

மூலவர் மனம் குளிர

உற்சவ மூத்திகளுக்கு

சொர்ண தானம் பொக்கிஷ தானம்

வாரி வாரி வழங்க வேண்டும் …

தரித்திரனுக்கு கூடாது மாம்பழ ஆசை !

 

காலிலே விழுந்து கிடந்தாலும்

 “கணபதிக்கு” மட்டுமே

அருளப்படும் மாம்பழம் எனும்

 “சாஸ்திர ரகசியம்” தெரிய வேண்டும் !

 

 ”நீட்”டும் தட்சணைக்கு ஏற்ப

அருளாசி உண்டு !

 

அம்புடுத்தான்….

 

சுபொஅ.

01/07/2024.

 

 

0 comments :

Post a Comment