ஜெகந்நாத் ஆசீர்வாதம் !

Posted by அகத்தீ Labels:

 

நந்தவனத்தில்

பட்டாம் பூச்சிகளும்

வண்டுகளும்

தேனிக்களும்

வட்டமிடுவதா ?

வலையால் மூடு !

ஈ எறும்பு புழு பூச்சி

எதையும்

உள்ளே அனுமதிக்காதே !

நந்தவனத்தை பார்வையிட

மகாராஜா வருகிறார் !

 

அய்யையோ !மகாராஜாவுக்கு

பச்சை வண்ணம் பிடிக்காதே !

இலைகளுக்கு காவி வண்ணம் பூசு

எல்லா மலர்களும்

ஒரே வண்ணத்தில் இருந்தால்தான்

மகாராஜா மனங்குளிர்வார்

காவி வண்ணத்தை

கலக்கி எங்கும் ஊற்று !

 

குரங்குகள்

மகாராஜாவின் செல்லப்பிராணி

குடியானவனின் வாழைத்தோப்பில்

குரங்குகளை ஆட்டம் போடவிடு !

பியத்து எறிந்தால் என்ன ?

அது ராமனின் ஆசீர்வாதம் !

தப்பு தப்பு

ஜெகந்நாத் ஆசீர்வாதம் !

 

சு.பொ.அ.

 


0 comments :

Post a Comment