வான் முட்டத் தேடினாலும்.....

Posted by அகத்தீ Labels:

 




அவமானங்களை ,துரோகங்களைச் சந்திக்காத

ஒருவரைத் தேடுகிறேன் நெடுநாளாய்

 

பார்க்கின்ற ஒவ்வொருவரும்

பதறவைக்கும் கதையன்றோ சொல்கின்றார்

 

வென்றவரும் சொல்கின்றார் சந்தித்தவற்றை

ஒருபோதும் சொல்லவில்லை தான் செய்தவற்றை

 

தோற்றவரும் சொல்கின்றார் பட்டவற்றை

ஒருபோதும் சொல்வதில்லை தன்பக்கத் தவறுகளை

 

நான் மட்டும் விதிவிலக்கா ? சுத்தசுயம்பா ?

வான் முட்டத் தேடினாலும் குறையில்லா மனிதரில்லை.

 

எடை போட்டு கொள்வன கொள்க! – ஊர் உலகம்

தழைக்க ஓர் அடியேனும் முன்னோட்டு செல்க !

 

சுபொஅ.

18/06/24.


0 comments :

Post a Comment