ஏன் புலம்பிக்கொண்டிருக்கிறீர் !

Posted by அகத்தீ Labels:

 



நேற்றைய கிராமங்கள்

இன்றைக்கு இல்லை

எவ்வளவோ மாறிவிட்டன

ஆயினும் , சாதியம் சாகாமலிருக்கிறது…

 

நேற்றைய நகரங்கள்

இன்றைக்கு இல்லை

எவ்வளவோ மாறிவிட்டன

ஆயினும் , மனிதம் மங்கிக்கொண்டிருக்கிறது..

 

நேற்றைய மனிதர்கள்

இன்றைக்கு இல்லை

எவ்வளவோ மாறிவிட்டனர்

ஆயினும் , மனிதர்களாகவில்லை….

 

பெரியவரே ! ஏன் புலம்பிக்கொண்டிருக்கிறீர் !

காலம் தன் தேவைக்கு  ஏற்ப

புதிய அளவுகோல்களை தயாரித்துக்கொண்டே இருக்கின்றது..

கூடவே சமத்துவதுக்கான சம்மட்டிகளையும்தான்…

புது யுகத்துக்கான … புதிய மனிதனுக்கான…

போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது …

 

சுபொஅ.

12/6/24.

 


0 comments :

Post a Comment