புத்தாண்டு

Posted by அகத்தீ Labels:

உதவாதினி “பழம்பஞ்சாங்கம்” !!!!

நேற்றும் இன்றும் ஒன்றல்ல நேற்றேதான் இன்றல்ல நாளையும் இன்றும் ஒன்றல்ல நாளைதான் இன்றல்ல ஒவ்வொரு நாளும் வேறல்ல ஒன்றின் தொடர்ச்சி ஒன்றாகும் ஒன்றை மட்டும் பார்க்காதே கோர்த்துப் பார்க்கத் தவறாதே ! புத்தாண்டு என்பது வேறல்ல ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டே! பிறக்கும் நொடியில் புத்தாண்டே போகப்போக பழங்கதையே ! அழுகை மட்டுமே சென்றாண்டோ ஆனந்தம் மட்டுமே வருமாண்டோ ஆனந்தம் , அழுகை இல்லாமல் ஆண்டுகள் ஏதேனும் கடந்ததுண்டோ ? ஒவ்வொரு நொடியும் போராடு! ஒவ்வொரு நொடியும் முன்னேறு! ஒவ்வொரு ஆண்டும் உன்னதமே! உதவாதினி “பழம்பஞ்சாங்கம்” !!!! சு.பொ.அகத்தியலிங்கம்.

0 comments :

Post a Comment