சொல்.98

Posted by அகத்தீ Labels:

தினம் ஒரு சொல் .98 [ 21 /12/2018 ] “வயது 35 ஆகிறது . எப்போது கேட்டாலும் கல்யாணம் வேண்டாம் .வேண்டாம் .இப்படியே போனால் நாங்க எப்போது பேரன் ,பேத்தியைப் பார்க்கிறது ? அதது காலாகாலத்தில் நடக்க வேண்டாமா ?” இது போன்ற உரையாடல்களை நாம் நிறையக் கேட்டிருப்போம் . அவனுக்கு/அவளுக்கு வேறு தொடர்பு ஏதேனும் இருக்குமோ ? அல்லது மனதில் வேறு யோசனை இருக்குமோ ? உடல் கூறு பிரச்சனை ஏதேனும் இருக்குமோ ? இப்படி ஆளுக்கொரு கோணத்தில் திருமணம் வேண்டாம் என்பவரை பிரித்து அலச உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது ? ஆணோ பெண்ணோ திருமணம் செய்து கொள்வதோ ,திருமணம் செய்யாமலிருப்பதோ , சேர்ந்து வாழ்வதோ ,பிரிந்து வாழ்வதோ , விவாகரத்து பெறுவதோ . சகித்து வாழ்வதோ ,மறுமணம் செய்து கொள்வதோ ,மறுமணம் செய்யாமலிருப்பதோ ,குழந்தை பெற்றுக் கொள்வதோ ,குழந்தை பெறாமலிருப்பதோ .குழந்தையை தத்து எடுப்பதோ .தத்துக் கொடுப்பதோ , லிவிங் டுகெதரோ ,அண்டர் ஸ்டேண்டிங்கில் வாழ்வதோ , தனித்தே வாழ்வதோ எதுவாயினும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விவகாரம் . அவரவர் உரிமை .அவரவர் விருப்பம் .இதனை பொதுவில் விவாதிக்க முடியாது . திருமணம் வாழ்க்கையின் முக்கிய திருப்பு முனையாகும் .அந்த திருமணம் உடலியல் தேவையும் , உறவியல் தேவையும், உளவியல் தேவையும், சமூகத் தேவையுமாகும் .நாம் மறுக்கவில்லை .அதே போல் குழந்தைப் பேறும் மிக முக்கியமே நாம் நிராகரிக்க வில்லை . ஆயினும் அதை கட்டாயமாக்குவது தேவையில்லை . உரிய வயதை எய்துவிட்ட எவரொருவருக்கும் அவர் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் முழு சுதந்திரமும் உண்டு . அதில் தேவையற்று மூக்கை நுழைக்க யாருக்கும் உரிமை இல்லை . நீங்கள் எந்த பாதையை வேண்டுமாயினும் சுயமாய் தேர்வு செய்யலாம் ; அதே நேரத்தில் எவரொருவரும் தன் சுயலாபத்திற்காக அல்லது சுயநலனுக்காக இன்னொருவர் வாழ்க்கையை கிழித்தெறிய அனுமதிக்கவே கூடாது .வாழு ! வாழ விடு . இதுவே வாழ்வின் ஆதார சுருதி !!! Su Po Agathiyalingam

0 comments :

Post a Comment