சொல்.88

Posted by அகத்தீ Labels:

தினம் ஒரு சொல் .88 [ 3 /12/2018 ] தாம்பத்தியம் சிலருக்கு சங்கீதம் ஆகிறது .சிலருக்கோ அபசுரமாகிவிடுகிறது .ஏன் ? பொதுவாக ஜாதகம் பார்த்து பொருந்திப்போனால் மட்டுமே திருமணங்கள் நடக்கின்றன. சோதிடர் பல நேரங்களில் சொல்லுவர் எந்தப் பொருத்தம் இல்லாவிட்டாலும் யோனிப் பொருத்தம் சரியாக இருந்தால் போதும் . ஆக ,திருமண வாழ்வின் ஆகப் பெரும் இன்பமாக உடலின்பத்தை மையமாக வைத்து சொல்லப்படும் கூத்து இது . இதில் கணிசமான உண்மை உண்டு . திருமண வாழ்வில் ஏற்படும் உரசல்கள் ,முரண்களுக்கு பொருளாதாரம் ,குடும்பத்துள் நிலவும் சூழல் போன்ற பலதும் காரணமாயிருக்கலாம் ,ஆனால் அடிநாதமாய் தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் திருப்தியின்மை ,நெருடல் ,அதீத ஈர்ப்பு போன்றவை முக்கிய பங்கு வகிக்கும் . ஆகவே இதனை புறந்தள்ளவே இயலாது . “ஒரு கைதட்டி ஓசை எழாது” என்பது மெய்தானே .இருவருக்கும் மனதும் உடலும் ஒத்துழைத்தால் மட்டுமே தாம்பத்தியத்தில் திருப்தி கிட்டும் . சூழல் காரணமாகவோ / உடல் பிரச்சனை காரணமாகவோ இதில் சிக்கல் ஏற்படும் போது வாழ்வின் சிக்கல் துவங்கும் . நல்ல மருத்துவரிடம் தம்பதியர் ஆலோசனை பெறுவதும் , தேவை எனில் தொடர் சிகிட்சை மேற்கொள்வதும் அவசியம் . செக்ஸ் குறித்த பல்வேறு தவறான மதிப்பீடுகளும் பார்வைகளும் நம் மூளையில் சமூகம் ஏற்றி வைத்திருக்கிறது .அதனை உடைத்து அறிவியல் ரீதியான புரிதலைப் பெற வேண்டும் இல்லையேல் பஞ்சாக்கத்தனமான அணுகுமுறையே வாழ்வை முழுதாய் சுவைக்கத் தடையாகிவிடும் . இரண்டு பேருக்கும் மனம் திறந்த உரையாடலுக்கான சூழலும் நேரமும் இல்லாவிடில் தாம்பத்தியமும் வெறுமே இயந்திரத்தனமாகிவிடும். கோழியைப்போல் அவசர அவசரமாக அனுபவிக்கும் தாம்பத்தியம் ஆணுக்கு வேண்டுமானால் உணர்ச்சியை அப்போது தணிக்க உதவலாம் பெண்ணுக்கு நிச்சயம் உதவாது .ஆக உரையாடவும் ,உறவாடவும் ஒவ்வொரு தம்பதியருக்கும் தனிமைச் சூழல் [ பிரைவேசி ] தேவை . நம் சமூகத்தில் பெரும்பாலோருக்கு அந்த பிரைவேசி மறுக்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது .தனி படுக்கை அறையே இல்லாதோர் பல கோடி . இங்கே தாம்பத்தியம் ஒரு சங்கீதம் என்பது வெறும் பேச்சாகவும் ; வக்கிரமான சமூகச் சூழலே நிஜமாகவும் உள்ளது . நாம் புதிய சமூகத்தை போரடிப் புதுக்காமல் இதற்கெல்லாம் தீர்வே இல்லை . Su Po Agathiyalingam

0 comments :

Post a Comment